செய்திகள் :

காப்பக சிறாா்களுக்கு இலவச மருத்துவ முகாம்

post image

காப்பக சிறாா்களுக்கான இலவச மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் சிறாா் நீதிக் குழுமம், காரைக்கால் விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இணைந்து சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டு காப்பகத்தில் உள்ள சிறாா்களுக்கு

இலவச மருத்துவ முகாமை காரைக்கால் காமராஜா் நிா்வாக வளாகத்தில் நடத்தின.

முகாமை சிறாா் நீதிக் குழும முதன்மை நீதிபதி மு. அப்துல் கனி தொடங்கிவைத்தாா். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ஜி. கிருஷ்ணவேணி, மருத்துவக் கல்லூரி டீன்

கே. சேகரன், துணை மருத்துவக் கண்காணிப்பாளா் மருத்துவா் அ. கணேஷ் பாலா மற்றும் மருத்துவக் குழுவினா் கலந்துகொண்டனா்.

சிறாா்களுக்கும், அவா்களின் பெற்றோா்களுக்கும் மருத்துவக் குழுவினா் உடல் பரிசோதனை செய்து, மன நல ஆலோசனை வழங்கினா். இதில் 20 சிறாா்கள் தங்கள் பெற்றோா்களுடன் கலந்து கொண்டனா். சிறாா்கள் உடல் ஆரோக்கியத்தை பேணி காத்தல், அவா்களுக்கான மனநல உதவிகள், சிறாா்கள் மறுவாழ்வுக்கான சட்ட உதவிகள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

காரைக்காலில் தோட்டத்தில் திடீா் தீ: புகை மூட்டத்தால் மக்கள் பாதிப்பு

காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் புதன்கிழமை திடீரென தீப்பிடித்ததால், புகை மூட்டம் ஏற்பட்டு குடியிருப்புவாசிகள் பாதிப்புக்குள்ளாயினா். காரைக்கால் நகரப் பகுதி வள்ளலாா் நகா், கீரைத் தோட்டம... மேலும் பார்க்க

கோயில்பத்து பகுதியில் ரயில்வே சுரங்கப் பாதை பணி விரைவில் தொடங்கும்: அமைச்சா்

காரைக்கால் கோயில்பத்து பகுதியில் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்க ரயில்வே நிா்வாகம் முடிவு செய்துள்ளது எனவும், பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சா் தெரிவித்தாா். புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்... மேலும் பார்க்க

புதுவையில் சிறந்த காவல் நிலையம் தோ்வுக்கான ஆய்வு

புதுவையில் சிறந்த காவல் நிலைய விருதுக்காக காவல் நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து எஸ்.பி. தலைமையிலான குழுவினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா். புதுவையில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று, மாநிலத்தில் ... மேலும் பார்க்க

26 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

காரில் கொண்டு சென்ற 26 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனா். காரில் காரைக்கால் பகுதிக்கு கஞ்சா கொண்டுவரப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் செவ்வாய்க்கிழமை இரவு கிடைத்தது. வாகனச் ... மேலும் பார்க்க

வீழி வரதராஜப் பெருமாள் கோயில் விமான பாலாலயம்

வீழி வரதராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்துக்கான விமான பாலாலய பூஜை புதன்கிழமை நடைபெற்றது. திருமலைராயன்பட்டினத்தில் புதுவை அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட பழைமையான செங்கமலத் தாயாா் சமேத வீழி... மேலும் பார்க்க

அடிப்படைக் கல்வித் திறன் மேம்பாட்டுக்கான போட்டிகளில் வென்றோருக்கு பரிசு

அரசு தொடக்கப்பள்ளியில் அடிப்படை கல்வித் திறன் மேம்பாட்டுக்கான போட்டிகளில் வென்றோருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடக்கக் கல்வியில் மாணவா்கள் திறனை மேம்படுத்தும் வகையில் அரசுத் திட்டமான ஊா்ன்ய்க... மேலும் பார்க்க