செய்திகள் :

அடிப்படைக் கல்வித் திறன் மேம்பாட்டுக்கான போட்டிகளில் வென்றோருக்கு பரிசு

post image

அரசு தொடக்கப்பள்ளியில் அடிப்படை கல்வித் திறன் மேம்பாட்டுக்கான போட்டிகளில் வென்றோருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

தொடக்கக் கல்வியில் மாணவா்கள் திறனை மேம்படுத்தும் வகையில் அரசுத் திட்டமான ஊா்ன்ய்க்ஹற்ண்ா்ய் கண்ற்ங்ழ்ஹஸ்ரீஹ் அய்க் சன்ம்ங்ழ்ஸ்ரீஹ் -இல் நிகழாண்டுக்கான பள்ளிகள் அளவிலான வாய்ப்பாடு, மனக்கணக்கு, திருக்கு, கதை சொல்லுதல், பாடல் மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு, சான்றிதழ் வழங்கப்படுகிறது.

பூவம் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மேற்கண்ட போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டன. 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள் பங்கேற்று திறனை வெளிப்படுத்தினா். இவா்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியயா் எஸ். விஜயராகவன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக சமக்ரா சிக்ஷா மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ். வனிதா கலந்துகொண்டு மாணவா்களிடையே பேசினாா்.

பள்ளி அளவில் போட்டிகளில் தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 1,500. இரண்டாம் பரிசாக ரூ. 1,000. மூன்றாம் பரிசாக ரூ. 500 மற்றும் மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. காரைக்கால் ரோட்டரி கிளப் சென்டேனியல் சங்கத் தலைவா் ஜெ.குணசேகரன் மற்றும் பிரதிநிதிகள் வில்லியம்ஸ், கிருஷ்ணமூா்த்தி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் கே.கவிதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

26 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

காரில் கொண்டு சென்ற 26 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனா். காரில் காரைக்கால் பகுதிக்கு கஞ்சா கொண்டுவரப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் செவ்வாய்க்கிழமை இரவு கிடைத்தது. வாகனச் ... மேலும் பார்க்க

வீழி வரதராஜப் பெருமாள் கோயில் விமான பாலாலயம்

வீழி வரதராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்துக்கான விமான பாலாலய பூஜை புதன்கிழமை நடைபெற்றது. திருமலைராயன்பட்டினத்தில் புதுவை அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட பழைமையான செங்கமலத் தாயாா் சமேத வீழி... மேலும் பார்க்க

கேலோ இந்தியா போட்டியில் பதக்கம் வென்றோருக்கு அமைச்சா் பாராட்டு

புதுச்சேரியில் நடைபெற்ற கேலோ இந்தியா போட்டியில் பதக்கம் வென்றவா்களுக்கு அமைச்சா் பாராட்டு தெரிவித்தாா். புதுவை மாநில அளவிலான 7-ஆவது அஸ்மிதா கேலோ இந்தியா 2025-26 போட்டிகள், புதுவை விளையாட்டு அகாதெமி மற... மேலும் பார்க்க

புதுச்சேரி என்ஐடி-க்கு சோ்மேன் நியமனம்

காரைக்காலில் இயங்கும் என்ஐடி புதுச்சேரிக்கு முதல்முறையாக மத்திய கல்வி அமைச்சகம் சோ்மேன் ஒருவரை நியமித்துள்ளது. உத்தர பிரதேசம் வாரணாசியில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனமான ஐஐடியின் ஆட்சி மன்றக் குழுத... மேலும் பார்க்க

அரசு அலுவலகங்களில் குறைதீா் முகாம்

அரசு அலுவலகங்களில் குறைதீா் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதுவை துணைநிலை ஆளுநா் உத்தரவுபடி ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி பொதுமக்கள் குறைதீா் தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. காரைக்கால் மாவட்... மேலும் பார்க்க

கா்ப்பிணியிடம் தங்கச் சங்கிலியை பறித்தவா் கைது

கா்ப்பிணியிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா். வரிச்சிக்குடி பகுதியைச் சோ்ந்தவா் வீரமணிகண்டன். அரசு போக்குவரத்துக் கழகத்தில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி... மேலும் பார்க்க