செய்திகள் :

மயிலாடுதுறை: "நேர்மைக்குக் கிடைத்த பரிசு என் வாகனம் பறிப்பு" - மது விலக்கு டி.எஸ்.பி ஆதங்கம்

post image

மயிலாடுதுறை மாவட்ட மது விலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி-யாக இருப்பவர் சுந்தரேசன். இவருக்கு வழங்கப்பட்ட போலீஸ் வாகனமான ஜீப்பை அமைச்சர் மெய்யநாதனுக்கு எஸ்கார்டு செல்ல வேண்டும் என வாங்கிக் கொண்டதால், சுந்தரேசன் வீட்டிலிருந்து நடந்தே அலுவலகத்திற்குச் செல்வது போன்ற வீடியோ வெளியானது. இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து சுந்தரேசனிடம் பேசினோம், ``நான் மயிலாடுதுறை மாவட்ட மது விலக்கு டி.எஸ்.பியாக 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் பதவியேற்றேன். அப்போதிலிருந்து கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்படுவதை தடுத்தேன். இதுவரை 1,200 வழக்குகள் பதிவு செய்துள்ளேன்.

டி.எஸ்.பி சுந்தரேசன்
டி.எஸ்.பி சுந்தரேசன்

உரிய அனுமதியின்றி செயல்பட்ட 23 பார்களுக்கு சீல் வைத்துள்ளேன். 5 பேரை குண்டர் சண்டத்தில் சிறையில் அடைத்திருக்கிறேன். மது கடத்தலுக்குப் பயன்படுத்திய 20 வாகனங்களைப் பறிமுதல் செய்திருக்கிறேன். என் பணியைப் பாராட்டி மாவட்ட ஆட்சியரிடம் சான்றிதழ் பெற்றுள்ளேன்.

என்னுடைய போலீஸ் பணியில் நான் நேர்மையாக இருக்கிறேன். இதுவே என் அடையாளமும் கூட. ஆனால் எங்கள் மாவட்ட காவல் துறையில் நேர்மையாக இருப்பதை விரும்புவதில்லை. லஞ்சம் வாங்குவதற்கு துணை போகச் சொல்லி அட்ஜெஸ்ட் செய்யச் சொல்கிறார்கள். என் மனசாட்சி அதற்கு இடம் கொடுக்க மறுக்கிறது. என் கடமையை கண்ணியத்துடன் செய்கிறேன்.

இந்த சூழலில் கடந்த 5-ம் தேதி ஆயுதப்படை எஸ்.ஐ செந்தில்குமார் எனக்கு போன் செய்து, என் போலீஸ் வாகனத்தை அமைச்சர் மெய்யநாதன் பாதுகாப்புக்கு எஸ்கார்டு செல்வதற்கு வேண்டும் என்றார். நான் முடியாது என மறுத்து விட்டேன். ரெய்டில் இருந்த எனக்கு போன் செய்த எஸ்.பி இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன், வாகனத்தை கேட்டார். நான் ரெய்டில் இருக்கிறேன் எனச் சொல்லியும் அவர் கேட்கவில்லை. `நீங்க எந்த இடத்தில் இருக்கிறீர்களோ, அங்கேயே வண்டியை ஒப்படைத்து விடுங்கள்' என்றார். இதை நான் ஏற்கவில்லை. இதையடுத்து என்னை திருச்செந்தூர் குடமுழுக்கு பாதுகாப்புப் பணிக்கு அனுப்பி வைத்தனர். வண்டியை எஸ்கார்டுக்கு எடுத்துக் கொண்டனர். திரும்பி வந்த எனக்கு முதல்வர் வருகைக்கு டூட்டிக்கு அனுப்பினர்.

டி.எஸ்.பி சுந்தரேசன்
டி.எஸ்.பி சுந்தரேசன்

அதை முடித்து விட்டு வந்து ஜீப் கேட்டேன் தரவில்லை. அழுத்தம் கொடுத்த பிறகு பழைய வண்டி ஒன்றைத் தந்தனர். அது பாதியிலேயே நின்று விடுவதால் அதைக் கொடுத்துவிட்டேன். பழுது நீக்கித் தருவதாகச் சொன்னார்கள். செய்யவில்லை. கடந்த 10 நாட்களாக எனக்கு ஜீப் வழங்கவில்லை. டூவீலரிலும், நடந்தும் அலுவலகம் செல்கிறேன். இது எஸ்.பி ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருக்கும் தெரியும். எஸ்.பி சொல்வதால் தான் இதை செய்கின்றனர். திட்மிட்டு என்னை பழிவாங்குகின்றனர்.

என் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை. ஒரு டி.எஸ்.பிக்கே இந்த நிலை என்றால், மற்ற போலீஸார் எந்த வகையிலான அழுத்தங்களுக்கு ஆளாவர்கள் என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள். இங்கு லஞ்சம் வாங்குகின்றனர். என்னையும் ஒத்துப்போக சொல்கின்றனர். என்னால் முடியாது வேற ஊருக்கு என்னை டிரான்ஸ்பர் செய்து விடுங்கள் என டி.ஜி.பியிடம் பல முறை மனு கொடுத்துள்ளேன்.

டி.எஸ்.பி சுந்தரேசன்
டி.எஸ்.பி சுந்தரேசன்

தமிழக மனித உரிமை ஆணையத்தில் நேர்மையாகப் பணியாற்றி விட்டு இங்கு வந்தேன். என் நேர்மைக்குக் கிடைத்த பரிசு என் போலீஸ் வாகனம் பறிப்பு. நான் நடந்து சென்ற வீடியோ வெளியானதால் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எதை இழந்தாலும் நேர்மையை ஒரு போதும் இழக்க மாட்டேன் என்றார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் சிலரிடம் பேசினோம், ``வாகனத்தை எஸ்கார்டுக்கு கேட்பது வழக்கமான நடைமுறைதான். சுந்தரேசன் வாகனம் பழுதடைந்து விட்டதால் மாற்று வாகனம் கொடுக்கப்பட்டது. எதுவாக இருந்தாலும் அதிகம் பேசும் சுந்தரேசன் விளம்பரப் பிரியரும் கூட. இதிலும் அப்படி நடந்து கொண்டிக்கிறார்" என்றனர்.

விருதுநகர்: `ஒரே மாவட்டத்துக்கு இரண்டு தலைமை அரசு மருத்துவமனைகள் இங்குதான்..!' - மா.சுப்பிரமணியன்

விருதுநகர் மாவட்டம், கன்னிசேரிபுதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய் மற்றும் பேரிடர் மே... மேலும் பார்க்க

மும்பை: ரயில்களில் கட்டுக்கடங்காத கூட்டம்; அரசு ஊழியர்கள் அரைமணி நேரம் தாமதமாக பணிக்கு வர அனுமதி!

மும்பை புறநகர் ரயில்களில் எப்போதும் கூட்டம் அலைமோதும். அதுவும் காலை மற்றும் மாலை நேரத்தில் புறநகர் ரயிலில் ஏறி இறங்குவது என்பது சவாலான ஒன்றாகும். கூட்ட நெரிசல் காரணமாக ரயிலில் இருந்து கீழே விழுந்து ஒவ... மேலும் பார்க்க

திருச்சி சிவா - காங்கிரஸ் மோதல்: காமராஜர் குறித்த சர்ச்சைப் பேச்சும், வெடிக்கும் கண்டனங்களும்!

எளிமைக்கும் நேர்மைக்கும் அடையாளமாகியிருக்கும் அரசியல் தலைவர் காமராஜர் குறித்து திருச்சி சிவா சர்ச்சைக்குரிய வகையில் பேசியது, அதற்கு காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருவதும் பெரும் பேசுபொருளாக ... மேலும் பார்க்க

`யார் விஜய்?’ மாணவனை தேடி அரசுப் பள்ளிக்கே வந்த நாமக்கல் ஆட்சியர் - நெகிழ்ச்சி தருணம்!

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவர் விஜய். இவர் புதியதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்ட துர்கா மூர்த்திக்கு கடிதம் ஒன்று... மேலும் பார்க்க

ITR Filing: வருமான வரி தாக்கலில் லேட்டஸ்ட் அப்டேட்டுகள் என்னென்ன? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

வருமான வரி தாக்கல் காலம் இது. இந்த ஆண்டு, எளிமையான புதிய ஐ.டி.ஆர் படிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கேற்ப ஐ.டி.ஆர் போர்ட்டலும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்த ஆண்டு புதுப்புது மாற்றங்கள... மேலும் பார்க்க

பாமக 37-ஆம் ஆண்டு விழா: "ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம்" - அன்புமணி ராமதாஸ் உறுதி

ராமதாஸ் - அன்புமணி மோதல் விவகாரம் முடிவுறாத கதையாகநீண்டுகொண்டிருக்கிறது. இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்த வண்ணமிருக்கிறார்கள்.இதற்கிடையில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி க... மேலும் பார்க்க