செய்திகள் :

விருதுநகர்: `ஒரே மாவட்டத்துக்கு இரண்டு தலைமை அரசு மருத்துவமனைகள் இங்குதான்..!' - மா.சுப்பிரமணியன்

post image

விருதுநகர் மாவட்டம், கன்னிசேரிபுதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன்.ஆகியோர் முன்னிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரூ.5.95 கோடி செலவில் விருதுநகர், திருச்சுழி, சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை மற்றும் இராஜபாளையம் ஆகிய தொகுதிகளில் கட்டப்பட்டுள்ள 14 புதிய மருத்துவக் கட்டடங்களை திறந்து வைத்து 20 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பெட்டகம் வழங்குதல்

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கடந்த 4 ஆண்டுகளில் விருதுநகர் மாவட்டத்தில் 415 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு மருத்துவக் கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் ரூ.127 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு தலைமை மருத்துவமனைகள் கட்டப்பட்டு வருகின்றன. தமிழகத்திலேயே விருதுநகர் மாவட்டத்தில் மட்டும்தான் ராஜபாளையம் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய இரண்டு இடங்களில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் உரை

அடிக்கடி பட்டாசு வெடிவிபத்து நடக்கும் பகுதியான சிவகாசியில் முதலமைச்சரின் ஆணைப்படி ரூ.32.54 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கைகள் கொண்ட உயர் தீக்காய சிகிச்சைப்பிரிவு கட்டும் பணி தொடங்கி விரைவில் நிறைவு பெறவுள்ளது. மருத்துவத் துறை வளர்ச்சிக்கு தேவையான நிதியை இந்த மாவட்டத்தின் அமைச்சரான நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தந்து வருகிறார். அவர் நிதி தரத் தர கட்டடங்கள் தொடர்ச்சியாக கட்டப்பட்டு கொண்டிருக்கிறது. ஏற்கெனவே சொன்னதைப் போல 150 கோடி ரூபாய் அளவிலான கட்டட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாதத்திற்கு ஒருமுறை 20 கட்டடங்களை திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.” என தெரிவித்தார்.

மயிலாடுதுறை: "நேர்மைக்குக் கிடைத்த பரிசு என் வாகனம் பறிப்பு" - மது விலக்கு டி.எஸ்.பி ஆதங்கம்

மயிலாடுதுறை மாவட்ட மது விலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி-யாக இருப்பவர் சுந்தரேசன். இவருக்கு வழங்கப்பட்ட போலீஸ் வாகனமான ஜீப்பை அமைச்சர் மெய்யநாதனுக்கு எஸ்கார்டு செல்ல வேண்டும் என வாங்கிக் கொண்டதால், ச... மேலும் பார்க்க

மும்பை: ரயில்களில் கட்டுக்கடங்காத கூட்டம்; அரசு ஊழியர்கள் அரைமணி நேரம் தாமதமாக பணிக்கு வர அனுமதி!

மும்பை புறநகர் ரயில்களில் எப்போதும் கூட்டம் அலைமோதும். அதுவும் காலை மற்றும் மாலை நேரத்தில் புறநகர் ரயிலில் ஏறி இறங்குவது என்பது சவாலான ஒன்றாகும். கூட்ட நெரிசல் காரணமாக ரயிலில் இருந்து கீழே விழுந்து ஒவ... மேலும் பார்க்க

திருச்சி சிவா - காங்கிரஸ் மோதல்: காமராஜர் குறித்த சர்ச்சைப் பேச்சும், வெடிக்கும் கண்டனங்களும்!

எளிமைக்கும் நேர்மைக்கும் அடையாளமாகியிருக்கும் அரசியல் தலைவர் காமராஜர் குறித்து திருச்சி சிவா சர்ச்சைக்குரிய வகையில் பேசியது, அதற்கு காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருவதும் பெரும் பேசுபொருளாக ... மேலும் பார்க்க

`யார் விஜய்?’ மாணவனை தேடி அரசுப் பள்ளிக்கே வந்த நாமக்கல் ஆட்சியர் - நெகிழ்ச்சி தருணம்!

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவர் விஜய். இவர் புதியதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்ட துர்கா மூர்த்திக்கு கடிதம் ஒன்று... மேலும் பார்க்க

ITR Filing: வருமான வரி தாக்கலில் லேட்டஸ்ட் அப்டேட்டுகள் என்னென்ன? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

வருமான வரி தாக்கல் காலம் இது. இந்த ஆண்டு, எளிமையான புதிய ஐ.டி.ஆர் படிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கேற்ப ஐ.டி.ஆர் போர்ட்டலும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்த ஆண்டு புதுப்புது மாற்றங்கள... மேலும் பார்க்க

பாமக 37-ஆம் ஆண்டு விழா: "ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம்" - அன்புமணி ராமதாஸ் உறுதி

ராமதாஸ் - அன்புமணி மோதல் விவகாரம் முடிவுறாத கதையாகநீண்டுகொண்டிருக்கிறது. இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்த வண்ணமிருக்கிறார்கள்.இதற்கிடையில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி க... மேலும் பார்க்க