செய்திகள் :

`யார் விஜய்?’ மாணவனை தேடி அரசுப் பள்ளிக்கே வந்த நாமக்கல் ஆட்சியர் - நெகிழ்ச்சி தருணம்!

post image

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவர் விஜய். இவர் புதியதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்ட துர்கா மூர்த்திக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

அதில், `தாங்கள் எளிமையான குடும்பத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் பணிக்கு எவ்வளவு கடினமாக உழைத்து வந்துள்ளீர்கள் என்பதை அறிந்தேன், எனவே தாங்கள் எங்களது பள்ளிக்கு வரவேண்டும். "மழைக்காக காத்திருக்கும் பயிர்களை போல, உங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம்..." என கோரிக்கை கடிதத்தினை அனுப்பி இருந்தார்.

மாணவனின் கடிதத்தை படித்த மாவட்ட ஆட்சியர் உடனடியாக எருமப்பட்டி அரசுப் பள்ளிக்கு வருகை தந்து, மாணவனை பாராட்டி பரிசளித்தார். ஆட்சியர் துர்கா மூர்த்தி பொறுப்பேற்ற 2-ம் நாள் மாணவரின் கடிதம் கிடைக்கப்பெற்றது. இந்த நிலையில் மாணவன் விஜயின் கோரிக்கையை ஏற்று எருமபட்டி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி ஆய்வு மேற்கொள்ள சென்றார்.

`யார் விஜய்?’

அப்போது தனக்கு கடிதம் எழுதிய மாணவனின் நினைவு வரவே எருமபட்டியில் உள்ள அரசு அண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று அந்த மாணவனின் வகுப்பறையில் நுழைந்த ஆட்சியர் துர்கா மூர்த்தி, `யார் விஜய்?’ என கேட்டுகொண்ட அவர் கடிதத்தை காட்டி, `எவ்வாறு என்னை பத்தி தகவல் தெரியும்?’ என கேட்க உடனடியாக விஜய் வாட்ஸ் ஆப் மூலம் தகவல் வந்தது என தெரிவித்தார்.

மாணவனை பாராட்டி ஆட்சியர் பரிசு வழங்கினார்

இதனையடுத்து ஆட்சியர் துர்கா மூர்த்தி தன்னை பற்றி மாணவன் விஜய் என்ன எழுதியுள்ளான் என சக மாணவர்களுக்கு படித்து காட்டினார். இதனையடுத்து மாணவர் விஜயிடம் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி கலந்துரையாடினார். அப்போது, `போட்டி தேர்வுகளை எந்த மொழியில் எழுதினீர்கள்?’ என கேட்க `ஆங்கிலத்தில் எழுதினேன்’ எனக் கூற, `அதற்கு மாணவர் ஏன் தாய் மொழியில் எழுத முடியாதா..?’ என கேள்`வி எழுப்பினார்.

`தாராளமாக தமிழில் நமது தாய் மொழியில் எழுதலாம். நிறைய இந்திய ஆட்சிப் பணியில் தேர்வு பெற்றவர்கள் தனது தாய் மொழியில் எழுதியுள்ளார்கள் அதிலும் தமிழில் எழுதியவர்கள் அதிகமானவர்கள் உள்ளனர்’ என்றார். மேலும் தனது சொந்த அனுபவங்களையும் தான் எவ்வாறு ஆட்சியராக வந்தேன் என மாவட்ட ஆட்சியர் மாணவர்களிடையே நடைபெற்ற கலந்துரையாடல் மிகவும் சுவாரசியமாக இருந்தன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

திருச்சி சிவா - காங்கிரஸ் மோதல்: காமராஜர் குறித்த சர்ச்சைப் பேச்சும், வெடிக்கும் கண்டனங்களும்!

எளிமைக்கும் நேர்மைக்கும் அடையாளமாகியிருக்கும் அரசியல் தலைவர் காமராஜர் குறித்து திருச்சி சிவா சர்ச்சைக்குரிய வகையில் பேசியது, அதற்கு காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருவதும் பெரும் பேசுபொருளாக ... மேலும் பார்க்க

ITR Filing: வருமான வரி தாக்கலில் லேட்டஸ்ட் அப்டேட்டுகள் என்னென்ன? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

வருமான வரி தாக்கல் காலம் இது. இந்த ஆண்டு, எளிமையான புதிய ஐ.டி.ஆர் படிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கேற்ப ஐ.டி.ஆர் போர்ட்டலும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்த ஆண்டு புதுப்புது மாற்றங்கள... மேலும் பார்க்க

பாமக 37-ஆம் ஆண்டு விழா: "ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம்" - அன்புமணி ராமதாஸ் உறுதி

ராமதாஸ் - அன்புமணி மோதல் விவகாரம் முடிவுறாத கதையாகநீண்டுகொண்டிருக்கிறது. இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்த வண்ணமிருக்கிறார்கள்.இதற்கிடையில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி க... மேலும் பார்க்க

Air India Crash : `விடை தெரியாத கேள்விகள்' - AAIB அறிக்கையும் விமர்சனங்களும் - என்ன நடக்கிறது?

குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் ட்ரீம்லைனர் ரக விமானம் கடந்த மாதம் 12-ம் தேதி புறப்பட்டு சென்றது. ஓடு பாதையில் இருந்து வானில் பறந்த விமானம் திடீரென கீழே இற... மேலும் பார்க்க

திருச்சி: பயன்பாட்டுக்கு வந்த `பஞ்சப்பூர் பேருந்து நிலையம்'; வெளியூர், நகர் பேருந்துகள் இயக்கம்

திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் 115.68 ஏக்கரில், ரூ.408 கோடி மதிப்பில் ஏசி, லிஃப்ட், எஸ்கலேட்டர் என பல வசதிகளுடன் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை கடந்த மே மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்த... மேலும் பார்க்க

"இப்போதுதான் உயிரே வந்தது; அவரை கேரளாவிற்கு அழைத்து வருவோம்"- கேரள நர்ஸ் நிமிஷாவின் கணவர் பேட்டி

ஏமனில் தன்னுடைய நண்பரும், தொழில் ரீதியான கூட்டாளியாகவும் இருந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரின் கொலை வழக்கில், கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு நாளை (ஜூலை 16) நிறைவேற்றப்பட இருந்த, மரண தண்டனை நிறுத்தி வ... மேலும் பார்க்க