செய்திகள் :

சிறுமி பாலியல் வன்கொடுமை: அலைக்கழித்த காவல்துறை; சிகிச்சையளிக்க மறுத்த மருத்துவமனை; என்ன நடக்கிறது?

post image

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தைச் சேர்ந்த சிறுமி, அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த 12-ம் தேதி பள்ளி முடிந்து, நண்பகல் நேரத்தில் வீட்டிற்குத் திரும்ப, ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தைக் கடந்து மாந்தோப்பு வழியாக நடந்து சென்றுள்ளார்.

அப்போது, அவரைப் பின்தொடர்ந்த மர்ம நபர் ஒருவர், திடீரென சிறுமியை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று, மாந்தோப்பில் ஆள் இல்லாத இடத்தில் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

சிறுமி பாலியல் வழக்கு
சிறுமி பாலியல் வழக்கு

அதைத் தொடர்ந்து அந்த மர்ம நபர் இந்தியில் செல்போனில் பேசி, மற்றொரு நபரை அழைத்துள்ளார். இதைச் சுதாரித்துக் கொண்ட சிறுமி, அவரின் முகத்தில் மண்ணை வாரித் தூவிவிட்டுத் தப்பி, வீட்டுக்கு வந்திருக்கிறார்.

சிறுமியைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோரிடம், தனக்கு நேர்ந்த கொடூரத்தைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலைக்கழித்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

வேறு வழியின்றி சிறுமியை கும்மிடிப்பூண்டி கோட்டக்கரையில் உள்ள அரசு மருத்துவமனைக்குப் பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர். அங்குச் சிறுமிக்குச் சிகிச்சையளிக்காமல் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இதனிடையே, சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் குறித்து கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறை

டி.எஸ்.பி சிறுமியிடம் தனியாக விசாரணை மேற்கொண்டு, வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளார். பின்னர், மேல் சிகிச்சைக்காக ராயபுரத்தில் உள்ள அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக, ஆரம்பாக்கம் காவல்துறை அலட்சியம் காட்டியதாகவும், கொடூர சம்பவம் நிகழ்ந்து 5 நாட்களாகியும் குற்றவாளி, இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

சி.சி.டி.வி காட்சியில் சிக்கிய குற்றவாளியைப் பிடிக்க காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்தச் செய்த சம்பவம் கும்மிடிப்பூண்டி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

குழித்துறை: நைட்டி அணிந்து பொருட்காட்சியில் ஆட்டம்; வில்லங்க செயலால் போலீஸில் சிக்கிய இளைஞர்கள்!

ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோரம் ஆண்டுதோறும் வாவுபலி பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கம். தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள மைதானத்தில் குழித்துற... மேலும் பார்க்க

நாமக்கல்: தனியார் பள்ளி பஸ் டிரைவர் அடித்துக் கொலை; சரக்கு லாரி டிரைவரைக் கைதுசெய்த போலீஸ்!

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த வையநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய் (45). இவர் ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளி பஸ் டிரைவாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் பள... மேலும் பார்க்க

சென்னை: லவ் டார்ச்சர்; பண மோசடி - ஜிம் பயிற்சியாளர் சிக்கிய பின்னணி!

சென்னை, மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த 28 வயதாகும் இளம்பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், அசோக் நகர் பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்துக்குச் சென்றிருக்கிறார். அப்போது, அங்கு ப... மேலும் பார்க்க

மருத்துவமனையில் நுழைந்து நோயாளி சுட்டுக் கொலை; திரைப்பட பாணியில் நடந்தேறிய கொடூரம்- பீகார் அதிர்ச்சி

பீகாரில் கடந்த ஒரு மாதத்தில் அடுத்ததடுத்து படுகொலைகள் நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சம்பவத்திலும் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பா.ஜ.க பிரமுகர், தொழிலதிபர் என கொலைகள் பட்டியல் நீண்டுகொண்... மேலும் பார்க்க

சென்னை: ஒரே வீட்டை 2 பேருக்கு லீசுக்குக் கொடுத்த உரிமையாளர்; ரூ.15 லட்சம் மோசடி வழக்கில் கைது

சென்னை, அண்ணா நகரில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர் இணையதளம் மூலம் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அயனாவரம் பகுதியில் வாடகைக்கு வீடு தேடியிருக்கிறார்.அப்போது அயனாவரம், பாரதி நகரில் குடியிருக்கும் ... மேலும் பார்க்க

``ரூ.50 லட்சம் வாங்கி விட்டு போதைப் பொருள் தரவில்லை..'' - 2 பேரை 10 நாள்கள் சித்ரவதை செய்த கும்பல்

மும்பையை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் சபீர் சித்திக் மற்றும் அவரது நண்பர் சாஜித் எலக்ட்ரிக்வாலா ஆகியோரிடம் போதைப்பொருளை சப்ளை செய்வதற்காக சர்வார் கானும், அவனது கூட்டாளிகளும் சேர்ந்து ரூ.50 லட்சம... மேலும் பார்க்க