செய்திகள் :

பரோல் கைதியை சுட்டுக்கொன்ற மர்ம கும்பல்! மருத்துவமனையில் பயங்கரம்!

post image

பரோல் கைதி ஒருவரை மருத்துவமனைக்குள் புகுந்த சிலர் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொலைக் குற்றவாளியாக பரோலில் வெளியே வந்த ஒருவரை துப்பாக்கி வைத்திருந்த 5 பேர் கொண்ட குழுவினர் சரமாரியாக சுட்டுக் கொன்றனர்.

பாட்னாவில் உள்ள பராஸ் தனியார் மருத்துவமனையில் சந்தன் என்பவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். வியாழக்கிழமை காலை 5 பேர் கொண்ட கும்பல் குழுவாக மருத்துவமனைக்குள் புகுந்து சந்தனை சரமாரியாக சுட்டனர். இதில் சந்தன் காயமடைந்த சந்தனை மருத்துவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி சந்தன் பரிதாபமாக பலியானார்.

இதுகுறித்து பாட்னா காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேய குமார் சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார். மேலும், அவர் இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகத் தெரிவித்தார்.

இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள பிகாரில், இதுபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்திருப்பது முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதால், எதிர்க்கட்சிகள் நிதிஷ் குமார் தலைமையிலான அரசாங்கத்தை குறிவைத்து வைத்துள்ளன.

பிகாரில் சமீபத்திய காலமாகவே மாநிலம் முழுவதும் நடைபெற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பல்வேறு கவலைகளை எழுப்பியுள்ளன.

இந்த மாத தொடக்கத்தில் பாட்னாவில் தொழிலதிபரும் பாஜக தலைவருமான கோபால் கெம்கா தனது வீட்டிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பிகாரில் தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மேலும், கடந்த 40 நாள்களில் 70 க்கும் மேற்பட்டோர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் உள்ளிட்டோரும் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளனர்.

medical treatment was shot dead by rival gangsters at a hospital in Patna

இதையும் படிக்க :சத்யஜித் ரேயின் பூர்விக வீட்டை இடிக்கும் பணியை நிறுத்திய வங்கதேச அரசு!

விமான விபத்துக்கு விமானி காரணமா? அமெரிக்க செய்தித்தாளின் கருத்துக்கு ஏஏஐபி எதிர்ப்பு!

அகமதாபாத் விமான விபத்துக்கு காரணம் யார்? என்பது குறித்து அமெரிக்க செய்தி நிறுவனத்துக்கு விமான விபத்து புலனாய்வுப் பிரிவு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.260 பேர் பலியான ஏர் இந்தியா விமான விபத்தில... மேலும் பார்க்க

பிருத்வி-2, அக்னி-1 ஏவுகணைகளின் சோதனை வெற்றி!

ஒடிசா கடல்பகுதியில், பிருத்வி - 2 மற்றும் அக்னி - 1 பாலிஸ்டிக் ஏவுகணைகளின் சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒடிசா கடல்பகுதியிலுள்ள அப்துல் கலாம் தீவில் அமைக்கப்பட்ட ஒருங்கிணை... மேலும் பார்க்க

பிகாரில் ஒரே நாளில் மின்னல் பாய்ந்து 19 பேர் பலி!

பிகாரில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும், மின்னல் பாய்ந்து 19 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிகாரின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 24 மணிநேரத்தில், மட்டும் 19 பேர் மின்னல் பாய்ந்து பலியாகியு... மேலும் பார்க்க

சத்யஜித் ரேயின் பூர்விக வீட்டை இடிக்கும் பணியை நிறுத்திய வங்கதேச அரசு!

இயக்குநர் சத்யஜித் ரேயின் மூதாதையர் வீட்டை இடிக்கும் பணியை வங்கதேச அரசு நிறுத்தியுள்ளது. வங்கதேசத்தின் மைமென்சிங்கில் பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும், இந்திய சினிமாவுக்கு முகவரி கொடுத்தவர் என அறியப்பட... மேலும் பார்க்க

வெறும் ரூ.50 ஆயிரத்தில்! ஒரே சார்ஜிங்கில் 300 கி.மீ. வரை செல்லும் டாடாவின் இவி பைக்!

ஒரே சார்ஜிங்கில் 300 கி.மீட்டர் வரை செல்லும் மின்சார பைக் ஒன்றை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தவிர்க்க முடியாத நிறுவனமாக இருக்கும் டாடா நிறுவனம், தற்போதைய ட... மேலும் பார்க்க

மும்பை பன்னாட்டு விமானம் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகர் மும்பையிலுள்ள பன்னாட்டு விமான நிலையம் மற்றும் மும்பை - அகமதாபாத் விமானம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. மும்பையிலுள்ள சத்ரபதி சிவாஜி மஹாராஜ் பன... மேலும் பார்க்க