செய்திகள் :

வெறும் ரூ.50 ஆயிரத்தில்! ஒரே சார்ஜிங்கில் 300 கி.மீ. வரை செல்லும் டாடாவின் இவி பைக்!

post image

ஒரே சார்ஜிங்கில் 300 கி.மீட்டர் வரை செல்லும் மின்சார பைக் ஒன்றை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது.

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தவிர்க்க முடியாத நிறுவனமாக இருக்கும் டாடா நிறுவனம், தற்போதைய ட்ரெண்டுக்கு ஏற்றவகையில் புதிய இவி பைக் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறப்பம்சங்கள்

  • அட்வான்ஸ் பேட்டரி டெக்னாலஜி - நீண்ட செயல்திறன் மற்றும் நீடித்த உழைப்புக்கு லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது.

  • ஸ்மார்ட் கனெக்ட்டிவிட்டி - மொபைல் போனுடன் இணைத்து கொள்ளும் வகையில் ப்ளூடூத் வசதியுள்ளது.

  • ரிஜெனரேட்டிவ் பிரேக்கிங் - நகருக்குள் வாகனத்தை இயக்கும் போது எனர்ஜி ரெகவரி சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

  • ரைடிங் மோட்ஸ் - இகோ, சிட்டி, ஸ்போர்ட்ஸ் என மூன்று மோட்கள் உள்ளன.

  • அதிவேக சார்ஜிங் - நீண்ட தூர பயணத்தில் ஓய்வெடுக்கும் நேரத்திற்குள் அதிவேகமாக சார்ஜிங் செய்யும் வசதியும் உள்ளது.

டாட்டாவின் புதிய இ-பைக்கின் சிறப்பம்சம் சந்தேகத்திற்கு இடமின்றி ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் திறன் கொண்டது. இது ஆட்டோ மொபைல் சந்தையில் தற்போதுள்ள பல மின்சார இரு சக்கர வாகனங்களைவிட சிறப்பாக செயல்படுகிறது.

சாதாரண சார்ஜிங் தோராயமாக 4-5 மணி நேரத்தில் 0 முதல் 100 சதவிகிதத்தையும், வேகமான சார்ஜிங்கில் சுமார் 1 மணி நேரத்தில் 0 முதல் 80 சதவிகிதத்தையும் எட்டிவிடும்.

விலை என்ன?

பேஸ் மாடல் ரூ.50,000 – 60,000 வரையும், சிட்டி மாடல் ரூ.60,000 – 75,000 வரையும், புரோ மாடல் ரூ.75,000 – 1,00,000 வரையும், ஸ்போர்ட்ஸ் மாடல் ரூ.1,00,000 – 2,00,000 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பைக் ஓலா எஸ் 1 புரோ, ஏதர் 450 எக்ஸ் ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக களமிறக்கப்படவுள்ளது.

Tata EV Bike with 300 km range to launch in the market at just ₹50,000

இதையும் படிக்க :15 ஆண்டுகள் பேட்டரி வாரண்டியுடன் டாடா எலக்ட்ரிக் கார்கள்! முழு விவரம்!

பிருத்வி-2, அக்னி-1 ஏவுகணைகளின் சோதனை வெற்றி!

ஒடிசா கடல்பகுதியில், பிருத்வி - 2 மற்றும் அக்னி - 1 பாலிஸ்டிக் ஏவுகணைகளின் சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒடிசா கடல்பகுதியிலுள்ள அப்துல் கலாம் தீவில் அமைக்கப்பட்ட ஒருங்கிணை... மேலும் பார்க்க

பிகாரில் ஒரே நாளில் மின்னல் பாய்ந்து 19 பேர் பலி!

பிகாரில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும், மின்னல் பாய்ந்து 19 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிகாரின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 24 மணிநேரத்தில், மட்டும் 19 பேர் மின்னல் பாய்ந்து பலியாகியு... மேலும் பார்க்க

பரோல் கைதியை சுட்டுக்கொன்ற மர்ம கும்பல்! மருத்துவமனையில் பயங்கரம்!

பரோல் கைதி ஒருவரை மருத்துவமனைக்குள் புகுந்த சிலர் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொலைக் குற்றவாளியாக பரோலில் வெளியே வந... மேலும் பார்க்க

சத்யஜித் ரேயின் பூர்விக வீட்டை இடிக்கும் பணியை நிறுத்திய வங்கதேச அரசு!

இயக்குநர் சத்யஜித் ரேயின் மூதாதையர் வீட்டை இடிக்கும் பணியை வங்கதேச அரசு நிறுத்தியுள்ளது. வங்கதேசத்தின் மைமென்சிங்கில் பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும், இந்திய சினிமாவுக்கு முகவரி கொடுத்தவர் என அறியப்பட... மேலும் பார்க்க

மும்பை பன்னாட்டு விமானம் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகர் மும்பையிலுள்ள பன்னாட்டு விமான நிலையம் மற்றும் மும்பை - அகமதாபாத் விமானம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. மும்பையிலுள்ள சத்ரபதி சிவாஜி மஹாராஜ் பன... மேலும் பார்க்க

தில்லியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்!

தில்லியில் இருந்து இம்பாலுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தில்லியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. தலைநகர் தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ... மேலும் பார்க்க