செய்திகள் :

தில்லியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்!

post image

தில்லியில் இருந்து இம்பாலுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தில்லியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

தலைநகர் தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மணிப்பூரின் இம்பாலுக்கு இன்று(வியாழக்கிழமை) 6E5118 என்ற இண்டிகோ விமானம் புறப்பட்ட நிலையில் சில நிமிடங்களில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக விமானிக்கு தெரிய வந்துள்ளது.

பாதுகாப்பு கருதி விமானி, உடனடியாக விமானத்தைப் தில்லி விமான நிலையத்திற்கு திருப்பி பாதுகாப்பாக தரையிறக்கினார்.

தொடர்ந்து விமானம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு சோதனைகள் மேற்கொண்டபின் சிறிது நேரத்திற்கு பின்னர் இயக்கப்பட்டது.

இதுபற்றி இண்டிகோ நிறுவன செய்தித் தொடர்பாளர், "ஜூலை 17 தில்லியில் இருந்து இம்பாலுக்கு இயக்கப்பட்ட 6E5118 விமானத்தில் லேசான தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதால் விமானம் தரையிறக்கப்பட்டது. விமானம் உடனடியாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டு கோளாறு சரிசெய்யப்பட்டு இயக்கப்பட்டது. தற்போது விமானங்கள் அதிகமாக ரத்து செய்யப்படுவதால் பாதுகாப்பு கருதியே விமானத்தை விமானி தரையிறக்கியுள்ளார். பயணிகளின் பாதுகாப்புக்கு நாங்கள் முக்கியத்துவம் அளிக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

ஏர் இந்தியா விமான விபத்தையடுத்து பாதுகாப்பு கருதி விமானங்கள் ரத்து செய்யப்படுவதும் அவசரமாக தரையிறக்கப்டுவதும் இப்போது அதிகரித்துள்ளது.

IndiGo flight from Delhi to Imphal made an emergency landing in Delhi due to a technical snag.

கூட்டணி ஆட்சிதான்! அமித் ஷா சொல்வதைத்தான் நான் தூக்கிப்பிடித்தாக வேண்டும்: அண்ணாமலை

பிருத்வி-2, அக்னி-1 ஏவுகணைகளின் சோதனை வெற்றி!

ஒடிசா கடல்பகுதியில், பிருத்வி - 2 மற்றும் அக்னி - 1 பாலிஸ்டிக் ஏவுகணைகளின் சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒடிசா கடல்பகுதியிலுள்ள அப்துல் கலாம் தீவில் அமைக்கப்பட்ட ஒருங்கிணை... மேலும் பார்க்க

பிகாரில் ஒரே நாளில் மின்னல் பாய்ந்து 19 பேர் பலி!

பிகாரில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும், மின்னல் பாய்ந்து 19 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிகாரின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 24 மணிநேரத்தில், மட்டும் 19 பேர் மின்னல் பாய்ந்து பலியாகியு... மேலும் பார்க்க

பரோல் கைதியை சுட்டுக்கொன்ற மர்ம கும்பல்! மருத்துவமனையில் பயங்கரம்!

பரோல் கைதி ஒருவரை மருத்துவமனைக்குள் புகுந்த சிலர் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொலைக் குற்றவாளியாக பரோலில் வெளியே வந... மேலும் பார்க்க

சத்யஜித் ரேயின் பூர்விக வீட்டை இடிக்கும் பணியை நிறுத்திய வங்கதேச அரசு!

இயக்குநர் சத்யஜித் ரேயின் மூதாதையர் வீட்டை இடிக்கும் பணியை வங்கதேச அரசு நிறுத்தியுள்ளது. வங்கதேசத்தின் மைமென்சிங்கில் பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும், இந்திய சினிமாவுக்கு முகவரி கொடுத்தவர் என அறியப்பட... மேலும் பார்க்க

வெறும் ரூ.50 ஆயிரத்தில்! ஒரே சார்ஜிங்கில் 300 கி.மீ. வரை செல்லும் டாடாவின் இவி பைக்!

ஒரே சார்ஜிங்கில் 300 கி.மீட்டர் வரை செல்லும் மின்சார பைக் ஒன்றை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தவிர்க்க முடியாத நிறுவனமாக இருக்கும் டாடா நிறுவனம், தற்போதைய ட... மேலும் பார்க்க

மும்பை பன்னாட்டு விமானம் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகர் மும்பையிலுள்ள பன்னாட்டு விமான நிலையம் மற்றும் மும்பை - அகமதாபாத் விமானம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. மும்பையிலுள்ள சத்ரபதி சிவாஜி மஹாராஜ் பன... மேலும் பார்க்க