செய்திகள் :

சூப்பர் சென்னை தொடக்கம்: உலக மேடையில் சென்னை நகரத்தை மேம்படுத்தும் குடிமக்கள் இயக்கம்

post image

இந்தியாவில் முதன்முறையாக, குடிமக்கள் தலைமையில் உருவாக்கப்பட்ட வெப்சைட் ஒன்றை தொடங்கிய பெருமை சென்னைக்கு கிடைத்துள்ளது. ‘சூப்பர் சென்னை’ என்ற இந்தத் திட்டம் நகரத்தின் பாரம்பரியம், கலாச்சாரம், முன்னேற்றம் ஆகியவற்றை ஒத்திசைத்து உலகிற்கு கூறும் ஒரு புதுமையான முயற்சியாகும்.

வெப்சைட்டாகக் காணப்படினும், இது ஒரு இயக்கமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. நகரத்தில் நடக்கும் நிகழ்வுகள், மக்களின் உணர்வுகள், பாரம்பரிய கதைகள் ஆகியவை ஒரே இடத்தில் தொகுக்கப்பட்டு மக்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு கிரெடாய் சென்னை-யின் (CREDAI Chennai) முழுமையான ஆதரவு இருக்கிறது. தொழில்நுட்ப நிபுணர்கள், சமூக சிந்தனையாளர், தொழில் முனைவோர், கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் ஆலோசனையுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னை
சென்னை

இந்த ஆண்டின் தொடக்கத்தில் FAIRPRO 2025 விழாவில் தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு திரு. எம். கே. ஸ்டாலின் இந்த இயக்கத்தின் லோகோவை வெளியிட்டிருந்தார். இப்போது அந்தக் கனவின் அடுத்த படியாக இந்த வெப்சைட் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இது வெறும் மெட்ரோ நகரமல்ல, எதிர்காலத்துக்குத் தயாரான ஒரு உலகநகரத்தை உருவாக்கும் முயற்சியாகும்.

தொடக்க விழாவில் பேசும் போது சூப்பர் சென்னை இயக்கத்தின் நிர்வாக இயக்குநர் திரு. ரஞீத் ராத்தோட் கூறினார்: “இது வெறும் ஒரு வெப்சைட் அல்ல. இது நம்முடிய Chennai-க்கு அர்ப்பணிக்கப்படும் ஒரு கண்ணிய மரியாதை. அதன் போராட்டங்களுக்காக, அதன் அபாரமான திறனுக்காக. இதில் ஒவ்வொரு குடிமகனுக்கும் நம்மூர் என்ற பெருமை உணர முடியும்.”

இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, சூப்பர் சென்னை, சிலிக்கான் வேலி நிறுவனம் Pointcast உடன் கூட்டணியில் சேர்ந்தது. இதன் மூலம் சென்னை, உலகிலேயே முதன்முதலாக Pointcast ஆற்றலுடன் இணைந்த நகரமாக மாறியுள்ளது. இந்த நவீன தொழில்நுட்பம், மக்களுக்கு தேவைப்படும் சிறியதோறும் தகவல்களை உடனுக்குடன் செல்பேசியில் பகிரும் வசதியை தருகிறது.

Pointcast நிறுவனத்தின் பிராண்ட் தூதர் திரு. ஆதித்ய ஸ்வாமிநாதன் கூறினார்: “Pointcast என்பது இந்த நகரத்துக்கான ஒரு இதயத் துடிப்பை உருவாக்குகிறது. மக்கள் எங்கே இருந்தாலும் சென்னையை நேரடியாக உணர முடியும்.”

மேலும், ‘Icon of the Month’ என்ற மாதந்தோறும் வழங்கப்படும் விருதையும் சூப்பர் சென்னை அறிமுகப்படுத்தியது. இது சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்திய வழிகாட்டிகளை பாராட்டும் ஒரு முன்னேற்ற முயற்சி. இந்த விருதின் முதல் பெறுநர், திரு. சி. கே. குமரவேல், ‘நேச்சுரல்ஸ்’ சலூன் நிறுவனத்தின் இணை நிறுவனர். பெண்கள் தொழில்முனைவோர் முன்னேற்றத்திற்கு அவர் செய்த முக்கிய பங்களிப்பை பாராட்டும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டது.

சூப்பர் சென்னை தொடக்கம்
சூப்பர் சென்னை தொடக்கம்

விருது பெற்ற பிறகு திரு. சி. கே. குமரவேல் கூறினார்: “சென்னை என்னை உருவாக்கியது, தூண்டியது, என் பக்கத்தில் நின்றது. இந்த நகரத்தையும், மாற்றங்களை ஏற்படுத்தும் மக்களையும் கொண்டாடும் முயற்சியில் பங்கேற்பது பெருமையாக இருக்கிறது.”

கிரெடாய் சென்னை நிறுவனத் தலைவர் திரு. ஏ. முகமது அலி கூறினார்: “சென்னை என்பது வீடுகள், நிறுவனங்கள், எதிர்காலங்களை உருவாக்கும் நகரம். சூப்பர் சென்னை என்பது அந்த அணுகுமுறையின் டிஜிட்டல் வடிவம். இந்த நகரத்தின் பெருமை, முன்னேற்றம் மற்றும் பங்கு கொண்டிருக்கும் உணர்வை இது பிரதிபலிக்கிறது.”

இந்த முயற்சிக்கு மேலும் ஊக்கமளிக்க, சூப்பர் சென்னை, இந்தியாவின் மிகச் சிறந்த நகரமாக - வாழ, பயணிக்க, வேலை செய்ய, முதலீடு செய்ய மற்றும் கண்டுபிடிக்கச் சாதகமான நகரமாக - விளங்கவைக்கும் ஒரு தேசிய பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. டிஜிட்டல் ஊடகங்கள், செய்தித்துறை ஒத்துழைப்புகள் மற்றும் நேரடி நிகழ்வுகள் மூலம் நகரத்தின் கலாச்சாரப் பன்மை, பொருளாதார வாய்ப்புகள் மற்றும் எதிர்கால விழிப்புணர்வு ஆகியவை முன்னிலைப்படுத்தப்படும்.

சென்னை
சென்னை

மக்கள் சார்ந்த உள்ளடக்கங்கள், மைக்ரோ-லோக்கல் முக்கியத்துவம் மற்றும் குடிமக்கள் பெருமை ஆகியவற்றை மையமாகக் கொண்டு, சூப்பர் சென்னை, நகரத்துடன் கூடிய வளர்ச்சிக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. கடற்கரை, கடை வீதிகள் முதல் தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள், உணவகங்கள், கலாச்சார விழாக்கள் வரை — சென்னை என்பது முரண்பாடுகளும் இசைவுகளும் கலந்த ஒரு நகரம். இப்போது ‘சூப்பர் சென்னை’ அந்த நகரத்தின் டிஜிட்டல் பிரதிபலிப்பு — உள்ளார்ந்தது, வெளிப்படையானது, பெருமைபடைக்க கூடியது.

டாக்கா, கராச்சி... உலகின் வாழத் தகுதியற்ற நகரங்களின் பட்டியல் வெளியீடு!

தி எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் (EIU) 2025 ஆம் ஆண்டுக்கான குறைந்த வாழ்க்கைக்கு உகந்த நகரங்களின் பட்டியலை வெளியிட்டது.உலக அளவில் 173 நகரங்களை தரவரிசைப்படுத்திய இந்த பட்டியல், சுகாதாரம், கல்வி, உள்கட்... மேலும் பார்க்க

நிலத்தில் கால் வைக்காத கடல் நாடோடிகள்; கடலில் பிறந்து, இறக்கும் பழங்குடியின மக்கள் பற்றி தெரியுமா?

உலகில் இன்றும் பல பழங்குடியின மக்கள் மலைப்பகுதியிலும், கடல் பகுதியிலும் தங்களது வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.நவீன நாகரிகத்தில் இருந்து விலகி பழங்குடியினர் தங்களை தனிமைப்படுத்தி வாழ்ந்து வருகின்றனர்... மேலும் பார்க்க