செய்திகள் :

``ரூ.50 லட்சம் வாங்கி விட்டு போதைப் பொருள் தரவில்லை..'' - 2 பேரை 10 நாள்கள் சித்ரவதை செய்த கும்பல்

post image

மும்பையை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் சபீர் சித்திக் மற்றும் அவரது நண்பர் சாஜித் எலக்ட்ரிக்வாலா ஆகியோரிடம் போதைப்பொருளை சப்ளை செய்வதற்காக சர்வார் கானும், அவனது கூட்டாளிகளும் சேர்ந்து ரூ.50 லட்சம் கொடுத்தனர்.

ஆனால் சொன்னபடி சாஜித் போதைப்பொருளை சப்ளை செய்யவில்லை. இதையடுத்து சர்வார் கானும், அவனது கூட்டாளிகளும் சேர்ந்து சாஜித் மற்றும் சபீர் ஆகியோரை இரவு விருந்து கொடுப்பதாகக் கூறி மும்பை அந்தேரிக்கு வரவழைத்தனர்.

அவர்கள் வந்தவுடன் அவர்களைக் கடத்திச்சென்றனர். அவர்கள் இரண்டு பேரையும் ராய்கட், நாசிக் மற்றும் மத்திய பிரதேசத்திற்கு கடத்திச்சென்றனர். இறுதியாக அவர்கள் இரண்டு பேரையும் உத்தரப்பிரதேசத்திற்கு கொண்டு சென்று அடைத்து வைத்து நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்தனர். அதை வீடியோவும் எடுத்துக்கொண்டனர். இதில் அவர்களிடமிருந்து சபீர் மட்டும் தப்பித்து மும்பைக்கு வந்தார்.

மும்பை வந்தவுடன் இது குறித்து சபீர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் அடிப்படையில் இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து இவ்வழக்கை குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். குற்றப்பிரிவு தனிப்படை போலீஸார் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பாண்டா என்ற இடத்திற்கு சென்று ரெய்டு நடத்தி சாஜித்தை மீட்டனர். அவரை 10 நாட்கள் அடைத்து வைத்து அடித்து சித்ரவதை செய்திருந்தனர். அவர்களை அடைத்து வைத்திருந்த சர்வார் கானும், அவனது கூட்டாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். மும்பை தொடர்குண்டு வெடிப்புக்குக் காரணமான தாவூத் இப்ராகிம் கூட்டாளி சோட்டா சகீல் சகோதரன் அன்வருக்கு கைதான சர்வார் கான் மிகவும் நெருக்கமாகும்.

போலீஸார் இது குறித்து கூறுகையில்,''சாஜித்தை கொலை செய்ய கடத்தல்காரர்கள் திட்டமிட்டிருந்தனர். சபீர் வந்து சொல்லாமல் இருந்திருந்தால் கொலை செய்திருப்பார்கள். அவர்கள் தெளிவாகத் திட்டமிட்டு பல வாகனங்களைப் பயன்படுத்தி இக்கடத்தலை செய்துள்ளனர். கைதானவர்களிடம் விசாரித்தபோது அவர்களுக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. சோட்டாசகீல் சகோதரர் அன்வர் சார்பாக மும்பையில் சர்வார் கான் செயல்பட்டு வந்தார். அன்வர் கொடுக்கும் பணத்தை எம்.டி போதைப்பொருளுக்கு சர்வார் கான் நிதியுதவி செய்து வந்திருக்கிறார். சாஜித்திற்கும் அந்த வகையில் தான் பணம் கொடுத்திருக்கிறால். சாஜித் போதைப்பொருள் தொடர்பாக 2015ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவரை ஜாமீனில் வெளி வந்தபிறகு மீண்டும் அத்தொழிலில் ஈடுபட திட்டமிட்டிருந்தார். இதற்காக சர்வார் கானிடம் பணம் வாங்கி இருக்கியிருக்கிறார்''என்று தெரிவித்தார்.

குழித்துறை: நைட்டி அணிந்து பொருட்காட்சியில் ஆட்டம்; வில்லங்க செயலால் போலீஸில் சிக்கிய இளைஞர்கள்!

ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோரம் ஆண்டுதோறும் வாவுபலி பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கம். தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள மைதானத்தில் குழித்துற... மேலும் பார்க்க

நாமக்கல்: தனியார் பள்ளி பஸ் டிரைவர் அடித்துக் கொலை; சரக்கு லாரி டிரைவரைக் கைதுசெய்த போலீஸ்!

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த வையநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய் (45). இவர் ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளி பஸ் டிரைவாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் பள... மேலும் பார்க்க

சென்னை: லவ் டார்ச்சர்; பண மோசடி - ஜிம் பயிற்சியாளர் சிக்கிய பின்னணி!

சென்னை, மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த 28 வயதாகும் இளம்பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், அசோக் நகர் பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்துக்குச் சென்றிருக்கிறார். அப்போது, அங்கு ப... மேலும் பார்க்க

மருத்துவமனையில் நுழைந்து நோயாளி சுட்டுக் கொலை; திரைப்பட பாணியில் நடந்தேறிய கொடூரம்- பீகார் அதிர்ச்சி

பீகாரில் கடந்த ஒரு மாதத்தில் அடுத்ததடுத்து படுகொலைகள் நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சம்பவத்திலும் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பா.ஜ.க பிரமுகர், தொழிலதிபர் என கொலைகள் பட்டியல் நீண்டுகொண்... மேலும் பார்க்க

சென்னை: ஒரே வீட்டை 2 பேருக்கு லீசுக்குக் கொடுத்த உரிமையாளர்; ரூ.15 லட்சம் மோசடி வழக்கில் கைது

சென்னை, அண்ணா நகரில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர் இணையதளம் மூலம் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அயனாவரம் பகுதியில் வாடகைக்கு வீடு தேடியிருக்கிறார்.அப்போது அயனாவரம், பாரதி நகரில் குடியிருக்கும் ... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: அலைக்கழித்த காவல்துறை; சிகிச்சையளிக்க மறுத்த மருத்துவமனை; என்ன நடக்கிறது?

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தைச் சேர்ந்த சிறுமி, அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 12-ம் தேதி பள்ளி முடிந்து, நண்பகல் நேரத்தில் வீட்ட... மேலும் பார்க்க