செய்திகள் :

கோவையின் கூமாபட்டிங்கோ! சாலையின் நடுவே மரண குழியை கிண்டலடிக்கும் இளைஞர்கள்!

post image

கோவையில், சாலை நடுவே உள்ள மிகப்பெரிய பள்ளத்தை, பலரும் இது கோவையின் கூமாபட்டி என தங்களது வேதனையை கிண்டலாக வெளிப்படுத்தி வருகிறார்கள்.

அண்மையில் கூமாபட்டி பற்றிய விடியோ ஒன்று வைரலாகி, பலரும் கூமாபட்டியை இணையதளத்தில் தேடும் நிலை ஏற்பட்டது. அந்த வசனம் போல, இது கோவையின் கூமாபட்டிங்கோ என சாலையின் நடுவே மரண குழியை அவ்வழியாகச் சென்ற இளைஞர்கள் கிண்டலடித்துச் சென்றாலும், அது சற்று கவலைத்தரக்கூடியதாகவே உள்ளது.

நல்ல ஸ்மார்ட் சிட்டிங்கோ, நம்ம கோவைங்கோ என கொங்கு மொழியில் கூமாபட்டியைப் போன்று கிண்டல் அடித்துச் செல்கின்றனர் இளைஞர்கள்.

கோவை நகரின் நடுவே மரண குழி, வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதற்கு முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுதப்பட்டு வருகிறது.

மாநகரின் மையப் பகுதியில் நாள்தோறும் நூற்றுக் கணக்கானோர் வாகனங்களில் கடந்து செல்லும் சாலையில் ஏற்பட்டிருக்கும் குழியை கண்டும், காணாமல் போகும் அதிகாரிகள் மற்றும் அவர்களது அலட்சியத்தால் நாள்தோறும் மக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.

கோவை டவுன்ஹால் - லங்கா கார்ணர் இணைக்கும் சாலையின் நடுவே அளவெடுத்து செய்தது போல, 3 அடி சுற்றளவுடன் மூன்று அடி ஆழம் கொண்ட குழி ஒன்று வாகன ஓட்டிகளை பயமுறுத்தி வருகிறது.

இது மாநகரின் முக்கிய சாலை என்பதால் மாவட்ட ஆட்சியர் முதல் மாநகராட்சி கமிஷனர் வரை முக்கிய பிரமுகர்கள் கடந்து செல்லும் பாதையாக உள்ளது. மேலும் பள்ளி கூடம், ரயில் நிலையம், அரசு மருத்துவமனை அனைத்தையும் இணைக்கும் பிரதான சாலை இது.

இந்த சாலையின் நடுவே ஏற்பட்டு உள்ள அபாய குழியில் நிறைந்து நிற்கும் நீரில் தெரியாமல் வாகனத்தை இயக்கினால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சாதாரண பள்ளமாக இருக்கும் என்று புதிதாக வருவோர் அதில் வாகனத்தை இறக்கினால் விபத்து நேரிடும் அபாயம் அதிகமாக இருக்கிறது.

முக்கிய நபர்கள் கடந்து செல்லும் மாநகரின் மையப் பகுதியில் ஏற்பட்ட இந்தக் குழி எப்படி? யார் கண்ணிலும் பாடமால் உள்ளது என்பதே அப்பகுதி மக்களின் ஆச்சரியமான கேள்விகளில் ஒன்று.

இது குறித்து அப்பகுதியில் நடந்து செல்லுவோர் கூறும் போது, இது பாதள சாக்கடை தண்ணீர் , அவசரமாக ஓட்டும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் வாகனத்தை ஏற்றி இறக்குவதால் தண்ணீர் தெறித்து நடந்து செல்வோர் மீது விழுகிறது. மேலும் அந்த நீரில் துர்நாற்றம் வீசுகிறது.

அதன் அருகே செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து செல்லும் சம்பவங்களும் அரங்கேறுகிறது. உயிர் பலி ஏற்படும் முன் இந்த சாலைக்குழியினை சரி செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர் பொதுமக்கள்.

மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக! - எடப்பாடி பழனிசாமி

மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்... மேலும் பார்க்க

அஜித்குமார் வழக்கு: 5 பேருக்கு சிபிஐ சம்மன்!

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் காவல் மரண வழக்கில் 5 பேருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பேராசிரியை நிகிதா காரில் வைத்திருந்த தனது நகைகள் காணாமல் போனதாக த... மேலும் பார்க்க

காலையில் வெயில், மாலையில் மழை! காஞ்சிபுரத்தில் சூறைக்காற்றுடன் பலத்தமழை!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த சூறைக்காற்று வீசுவதால் பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் நிறுத்தி வைக... மேலும் பார்க்க

அவதூறு வழக்கில் அண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்!

திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு தொடர்ந்து அவதூறு வழக்கில், முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (ஜூலை 17) நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வெளியிட்ட “... மேலும் பார்க்க

உங்கள் ஊரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் எப்போது? அறிந்துகொள்ள எளிய வழி!

தமிழகத்தில் பெரும்பாலானவர்களின் கேள்வி, நம்ம ஊரில் எப்போது உங்களுடன் ஸ்டாலின் முகாம் என்பதே. அது தொடர்பான தகவல்களை அளிக்க தமிழக அரசு சார்பில் ஒரு இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.அரசுத் துறைகளின் சேவைகளை, ... மேலும் பார்க்க

பருவமழை தொடங்குவதற்கு முன்பே பணிகளை முடிக்க நடவடிக்கை: முதல்வர்

பருவமழைக் காலம் தொடங்குவதற்கு முன்பே மழைநீர் வடிகால்கள் சுத்தம் செய்யப்பட்டு தண்ணீர் வெளியேற வழி ஏற்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமைய... மேலும் பார்க்க