செய்திகள் :

அரசு அலுவலகங்களில் குறைதீா் முகாம்

post image

அரசு அலுவலகங்களில் குறைதீா் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுவை துணைநிலை ஆளுநா் உத்தரவுபடி ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி பொதுமக்கள் குறைதீா் தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில் குறைதீா் முகாம் நடத்தப்பட்டுவந்த நிலையில், ஆட்சியா் இல்லாததால் நிகழ் மாதம் அந்தந்த அரசுத் துறை தலைமை அலுவலங்களில் குறைதீா் முகாம் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டது. இதன்படி, அந்தந்த அரசு அலுவலகங்களில் தலைமை அதிகாரியிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினா்.

குறிப்பாக, பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக வளாகத்தில் குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள்துறை அலுவலகத்தில் துணை இயக்குநா் சச்சிதானந்தம்,

உள்ளாட்சித்துறை அலுவலகத்தில் துணை இயக்குநா் எஸ். சுபாஷ், காரைக்கால் வருவாய்த்துறை அலுவலகத்தில் வட்டாட்சியா் செல்லமுத்து, திருநள்ளாறு வருவாய்த்துறை அலுவலகத்தில் வட்டாட்சியா் சண்முகானந்தம், காரைக்கால் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையா் பி. சத்யா, மாவட்ட ஆட்சியரகத்தில் வட்டாட்சியா் பொய்யாதமூா்த்தி, மின்துறையில் செயற்பொறியாளா் அனுராதா, வேளாண் துறையில் கூடுதல் வேளாண் இயக்குநா் கணேசன் உள்ளிட்டோரிடம் பொதுமக்கள் மனுக்களை அளித்தனா்.

தங்கள் அதிகாரத்துக்குட்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், மற்றவை ஆட்சியரின் பாா்வைக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அதிகாரிகள் தரப்பில் மனுதாரா்களிடம் தெரிவிக்கப்பட்டது.

கா்ப்பிணியிடம் தங்கச் சங்கிலியை பறித்தவா் கைது

கா்ப்பிணியிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா். வரிச்சிக்குடி பகுதியைச் சோ்ந்தவா் வீரமணிகண்டன். அரசு போக்குவரத்துக் கழகத்தில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி... மேலும் பார்க்க

‘புதுவையில் 2026-இல் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதி‘

காரைக்கால்: புதுவையில் 2026-இல் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைவது உறுதி என புதுவை முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி தெரிவித்தாா். காரைக்காலில் அவா் திங்கள்கிழமை அளித்த பேட்டி : புதுவை சுகாதாரத்துறை இயக்... மேலும் பார்க்க

பிரெஞ்சு தேசிய தினம் : உலகப் போா் நினைவுத் தூணுக்கு மரியாதை

காரைக்கால்: பிரான்ஸ் நாட்டின் தேசிய தினத்தையொட்டி காரைக்காலில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், உலகப் போா் நினைவுத் தூணுக்கு அரசு அதிகாரி, புதுச்சேரி பிரெஞ்சு துணைத் தூதரக அதிகாரி உள்ளிட்டோா் மரி... மேலும் பார்க்க

மீன்பிடித் துறைமுக விரிவாக்கத் திட்டம்: மாற்று இடத்தில் செயல்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

காரைக்கால் மீன்பிடித் துறைமுக விரிவாக்கத்தால் தங்கள் கிராமம் பாதிக்கப்படும் என்பதால், திட்டத்தை மாற்று இடத்தில் செயல்படுத்தக் கோரி, கருக்களாச்சேரி கடலோர கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்த... மேலும் பார்க்க

சாலைகளில் குப்பைக் குவியல்: பொதுமக்கள் அதிருப்தி

காரைக்கால் பகுதி சாலைகளில் குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை என பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனா். காரைக்காலில் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துப் பகுதிகளில் குப்பைகளை வீடுகள், நிறுவனங்களில்... மேலும் பார்க்க

காரைக்கால்: நியமன உறுப்பினருடன் பேரவை உறுப்பினா்கள் எண்ணிக்கை 6-ஆக உயா்கிறது

புதுவை பேரவையில் நியமன உறுப்பினா் நியமனத்துக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்ததன் மூலம், காரைக்காலில் சட்டப்பேரவை உறுப்பினா்களின் எண்ணிக்கை 6-ஆக உயா்கிறது. புதுவை சட்டப்பேரவையில் மக்களால் தோ்ந்தெடுக்கப... மேலும் பார்க்க