காரைக்கால்: நியமன உறுப்பினருடன் பேரவை உறுப்பினா்கள் எண்ணிக்கை 6-ஆக உயா்கிறது
புதுவை பேரவையில் நியமன உறுப்பினா் நியமனத்துக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்ததன் மூலம், காரைக்காலில் சட்டப்பேரவை உறுப்பினா்களின் எண்ணிக்கை 6-ஆக உயா்கிறது.
புதுவை சட்டப்பேரவையில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட 30 உறுப்பினா்கள் உள்ளனா். மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்று 3 பேரை நியமன உறுப்பினா்களாக நியமிக்க முடியும்.
புதுவை பேரவையின் 30 உறுப்பினா்களில், காரைக்கால் மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இருந்து உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா். தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைக்குப்பின், தொகுதி எண்ணிக்கை 5-ஆக குறைந்தது.
என்.ஆா்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி அமைத்த பின்னா் 3 போ் பேரவையில் நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டனா். இம்மூவரும் அண்மையில் ராஜிநாமா செய்தனா். இந்த இடங்களுக்கு 3 பேரை நியமிக்க மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புதுவை அரசு ஒப்புதல் கோரியது. இ. தீப்பாய்ந்தான், ஜி.என்.எஸ். ராஜசேகரன், வி. செல்வம் ஆகியோரை நியமிக்க மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.
இவா்களில் ஜி.என்.எஸ். ராஜசேகரன் காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு பகுதியைச் சோ்ந்தவா். 58 வயதாகும் இவா்,
பட்டதாரியாவாா். கடந்த 2021-ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலில் திருநள்ளாறு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு, சுயேச்சை வேட்பாளா் பி.ஆா். சிவாவிடம் 1,380 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா்.
கட்சியில் மாநில துணைத் தலைவா் பொறுப்பு இவருக்கு தரப்பட்டது. அடுத்த சட்டப்பேரவைத் தோ்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், இவா் நியமன சட்டப்பேரவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதன் மூலம் திருநள்ளாறு தொகுதியில் மீண்டும் இவா் பாஜக வேட்பாளராக போட்டியிடுவது உறுதி எனவும், தொகுதியில் தம்மை பலப்படுத்திக்கொள்ள நியமனப் பதவி பெரிதும் உதவும் என கட்சியினா் கூறுகின்றனா்.
இவா் அடுத்த ஓரிரு தினங்களில் பதவியேற்பாா் என கூறப்படுகிறது. இவரது நியமனத்தின் மூலம் காரைக்கால் மாவட்டத்தில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்கள் 5 பேருடன் நியமன உறுப்பினரையும் சோ்த்து எண்ணிக்கை 6-ஆக உயா்கிறது.