செய்திகள் :

வேலூர்: சதுப்பேரியில் படகு சவாரி, இரண்டு செயற்கை தீவுகள்... வேலூரில் புதிய டூரிஸ்ட் பாயிண்ட்!

post image

வேலூர் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்திருக்கும் சதுப்பேரி ஏரியைச் சுற்றுலா தளமாக மாற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

வேலூர் சேண்பாக்கம் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள சதுப்பேரியில் படகு சவாரியுடன் கூடிய இரண்டு செயற்கை தீவுகள் அமைத்து சுற்றுலா தளமாக மாற்றும் பணிகள் நீர்வளத்துறையின் சார்பில் ரூபாய் 19 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.

தற்போது வேலூர் கோட்டையும், அமிர்தி உயிரியல் பூங்காவும் தான் வேலூர் மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலா தளங்களாக உள்ளன. இங்குதான் சுற்றுலாப் பயணிகளும், பொது மக்களும் தங்களுடைய விடுமுறை தினத்தில் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் புதிய சுற்றுலா தளம் அமைக்கப்பட வேண்டும் என்பது வேலூர் மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

இந்நிலையில் சதுப்பேரி, கழிஞ்சூர் ஏரிகளைப் புனரமைத்து சுற்றுலா தளமாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது குறித்து செயற்பொறியாளர் பாலாஜியிடம் கேட்டபொழுது, “250 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த சதுப்பேரியை ரூ.19 கோடி மதிப்பீட்டில் சுற்றுலாத் தளமாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, சதுப்பேரியில் இருந்து 6.5 மீட்டர் ஆழத்திற்கு வண்டல் மண் அகற்றப்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் கூடுதலாக மழைநீரைச் சேமிக்க ஏரியை ஆழப்படுத்தி வருகிறோம்.

ஏரியின் கரை ஓரங்களில் பொது மக்கள் நடைப்பயிற்சியை மேற்கொள்ள 1.5 கிமீ தூரத்திற்கு நடைபாதை அமைக்கப்பட உள்ளது. நடைபாதை இரண்டு புறங்களிலும் தடுப்பு கம்பிகள் நடப்பட உள்ளன.

நடைபாதை முழுவதும் மின் விளக்குகள் பொருத்தப்பட உள்ளன. சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக இரண்டு செயற்கை தீவுகள் சதுப்பெரியின் மையத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன. இங்கு மண் நிரப்பி அரிய வகை மரங்கள் நடப்பட உள்ளன.

தோட்டக்கலைத் துறை சார்பாக மரம், செடிகள் நட்டு ஏராளமான உள்ளூர் மற்றும் புலம் பெயரும் பறவைகளை ஏரிக்குள் ஈர்க்கும் திட்டம் வைத்து உள்ளோம்.

நீர்த்தேக்கத்தின் தெற்கு பகுதியில் குடியிருப்புகள் உள்ளதால் அங்குச் சிலர் ஏரியின் உள்ளே குப்பைகளை வீசி விட்டுச் செல்வதாகத் தகவல் கிடைத்து உள்ளது. எனவே அவற்றைத் தடுத்து ஏரியைப் பாதுகாக்க 1,700 மீட்டர் தூரத்திற்கு இரண்டு மீட்டர் உயர இரும்பு வேலி அமைக்கப்படும்.

மேலும் ஏரிக்கரையின் அருகிலேயே குழந்தைகள் விளையாடுவதற்கு விளையாட்டு பூங்காவும் அமைய உள்ளது. இந்தப் பணிகள் அனைத்தும் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவு அடைந்து 2026 தொடக்கத்தில் இந்த சதுப்பேரி மக்கள் பயன்பாட்டிற்கு வரும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

திருப்பரங்குன்றம் குடமுழுக்கு: "மதுரை மாவட்டம் முழுவதும் விடுமுறை வேண்டும்" - ராஜன் செல்லப்பா

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழாவிற்கு தூத்துக்குடி மாவட்டம் முழுக்க விடுமுறை அளிக்கப்பட்டது. அதேபோல திருப்பரங்குன்றம் குடமுழுக்கிற்கும் மதுரை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும்... மேலும் பார்க்க

பள்ளிகளில் ‘ப’ வடிவு இருக்கைகள்: "கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்?" - அன்புமணி காட்டம்

கேரளாவில் சமீபத்தில் வெளியான `ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்' என்ற திரைப்படத்தால், பள்ளிகளில் கடைசி பென்ச் மாணவர்கள் என்ற பாகுபாட்டைக் களையும் நோக்கில் வகுப்பறைகளில் `ப' வடிவில் இருக்கைகளைச் சோதனை முறையில் ... மேலும் பார்க்க

TVK: "ஜெய்பீம் படம் பார்த்து அழுத முதல்வர் உண்மையைப் பார்த்தும் அழவில்லையே" - ஆதவ் அர்ஜுனா

சிவகங்கையில் காவல்துறை சித்ரவதையால் உயிரிழந்த அஜித்குமாரின் உயிரிழப்புக்கு நீதிகேட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில், சென்னை, சிவானந்தம் சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.தவெக ஆர்ப்பாட்டம்இந்... மேலும் பார்க்க

Vijay: "விளம்பர அரசு Sorryம்மா அரசாக மாறிவிட்டது" - ஸ்டாலினைக் கடுமையாகச் சாடிய விஜய்

சிவகங்கையில் காவல்துறை சித்ரவதையால் உயிரிழந்த அஜித் குமாரின் உயிரிழப்புக்கு நீதிகேட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில், சென்னை, சிவானந்தம் சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஆர்ப்பாட்டத்தில் த... மேலும் பார்க்க

பாஜக: "தமிழகம் வர அமித்ஷா விமானம் ஏறினாலே திமுக-விற்கு நடுக்கம் ஏற்படுகிறது" - நயினார் நாகேந்திரன்

மதுரை எப்போதும் திமுகவிற்கு ராசியில்லாதது, எங்களுக்கு ராசியானது, தமிழகத்தில் மீனாட்சியம்மன் ஆட்சியை உருவாக்குவோம் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.மதுரை மாநகராட்சியில் நடைபெற... மேலும் பார்க்க

Vijay: ஆர்ப்பாட்டத்துக்கு வரும் தவெக தொண்டர்களைக் கைது செய்கிறதா போலீஸ்? கொதிக்கும் நிர்வாகிகள்!

சிவகங்கையில் நடந்த காவல் மரணத்தைக் கண்டித்து தவெக சார்பில் இன்று, சென்னை, சிவானந்தம் சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.10 மணிக்குத் தொடங்கவிருக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜ... மேலும் பார்க்க