ஈரோட்டில் ஆசியாவின் மிக உயரமான முருகன் சிலை அமைக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு
ஈரோடு : ஈரோட்டில் உள்ள திண்டல் முருகன் கோயிலில் ஆசியாவின் மிக உயரமான முருகன் சிலை அதாவது (186 அடி அளவு) நிறுவப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு இன்று தெரிவித்தார்.
ஈரோட்டில் உள்ள திண்டல் முருகன் கோயிலில், மாநில வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் எஸ். முத்துசாமியுடன் சேகர்பாபு, நிறுவலுக்கான முன்மொழியப்பட்ட இடத்தை ஆய்வு செய்ய, ஈரோட்டில் இருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ள திண்டலில் உள்ள வேலாயுதசாமி கோவிலுக்குச் சென்றார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, ரூ.30 கோடி செலவில் சிமெண்டினால் ஆன முழு அளவிலான சிலையை, சமீபத்திய தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது என்றார்.
இதற்கிடையில் கட்டுமானப் பணிகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது என்றார்.
இதையும் படிக்க: திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தீ பிடித்து விபத்து: மீட்புப் பணிகள் மும்முரம்!