செய்திகள் :

புதுச்சேரியைச் சேர்ந்த உலக அழகி தற்கொலை

post image

புதுச்சேரியைச் சேர்ந்த உலக அழகி சான் ரேச்சல், தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாள்களாக சிறுநீரக பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதிக அளவு ரத்த அழுத்த மாத்திரைகளை விழுங்கி இன்று (ஜூலை 13) தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

நிறத்தை பொருட்படுத்தாமல் தனது திறமையின் காரணமாக மாடலிங் துறையில் அசத்திவந்த சங்கர பிரியா என்னும் சான் ரேச்சல் புதுச்சேரியிலுள்ள காராமணி குப்பத்தில் வசித்துவந்துள்ளார்.

கடந்த சில நாள்களாக சிறுநீரக பிரச்னை காரணமாக ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். இதனிடையே, இன்று தனது வீட்டில் அதிக எண்ணிக்கையிலான ரத்த அழுத்த மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

பேஷன் நிகழ்ச்சிகள் பலவற்றை நடத்தியதில் ஏற்பட்ட இழப்பு காரணமாக உயிரை மாய்த்துக்கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து புதுச்சேரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

உலக அழகி

2020-2021 ஆண்டுகளில் மிஸ் பாண்டிச்சேரி, 2019-ல் மிஸ் டார்க் குயின் தமிழ்நாடு, அதே ஆண்டில் மிஸ் பெஸ்ட் ஆட்டிட்யூட் என பல பட்டங்களை வென்றுள்ள ரேச்சல், கருப்பழகி பிரிவில் உலக அழகி பட்டத்தையும் வென்றுள்ளார்.

இதையும் படிக்க | ஏரியில் விளையாடிய 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி!

Miss World San Rachel from Puducherry commits suicide

மீனவர்களை விடுவிக்க அவசர நடவடிக்கை தேவை: மத்திய அமைச்சருக்கு கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ... மேலும் பார்க்க

இரவில் சென்னை உள்பட 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ... மேலும் பார்க்க

ஈரோட்டில் ஆசியாவின் மிக உயரமான முருகன் சிலை அமைக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு

ஈரோடு : ஈரோட்டில் உள்ள திண்டல் முருகன் கோயிலில் ஆசியாவின் மிக உயரமான முருகன் சிலை அதாவது (186 அடி அளவு) நிறுவப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு இன்று தெரிவித்தார்.ஈரோட்டில் உள்ள திண... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 15 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ... மேலும் பார்க்க

பள்ளிகளில் "ப" வடிவ இருக்கை அமைப்பு மாணவர்களை பாதிக்கும்- தமிழிசை விமர்சனம்

பள்ளிகளில் "ப" வடிவ இருக்கை அமைப்பு மாணவர்களை பாதிக்கும் என்று முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழக பள்ளிகளில் வகுப்பறைகளில் "ப" வடிவ ... மேலும் பார்க்க

ஜூலை 16, 17-ல் சென்னையில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்!

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜூலை 16, 17 ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப... மேலும் பார்க்க