செய்திகள் :

லண்டன் விமான நிலையத்தில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்து!

post image

லண்டன் சௌத் எண்ட் விமான நிலையத்தில் புறப்பட்ட சில வினாடிகளிலேயே சிறிய ரக விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் எசெக்ஸில் உள்ள லண்டன் சௌத்எண்ட் விமான நிலையத்தில் ஒரு சிறிய விமானம் (அந்நாட்டு நேரப்படி மாலை 4 மணிக்கு) மேலெழும்பிய சில வினாடிகளிலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால், அந்தப் பகுதி முழுவதும் கரும்புகையால் சூழப்பட்டது.

அந்த சிறிய ரக விமானம் பி200 சூப்பர் கிங் ஏர் ஆக இருக்கலாம் என்று சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இருப்பினும், அந்த விமானம் என்ன? விபத்தில் யாருக்கேனும் காயங்களோ அல்லது உயிரிப்புகள் குறித்தோ அதிகாரிகள் இன்னும் விவரங்களை உறுதிப்படுத்தவில்லை.

இதுகுறித்து சௌத்எண்ட் காவல் துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சௌத்எண்ட் விமான நிலையத்தில் விமான விபத்து நடந்த இடத்தில் நாங்கள் இருக்கிறோம். 12 மீட்டர் நீளம் கொண்ட விமானம் விபத்துக்குள்ளானதாக மாலை 4 மணிக்கு எங்களுக்கு தகவல் கிடைத்தது.

தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இந்தப் பணி தொடரும் வரை, முடிந்தவரை இந்தப் பகுதிக்கு பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிக்க :பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா: ரயில்வே அதிரடி

jet has just crashed at London Southend Airport

மியான்மா் எல்லையில் உல்ஃபா முகாம்கள் மீது இந்திய ராணுவம் ட்ரோன் தாக்குதல்?

மியான்மா் எல்லையில் உள்ள தங்கள் முகாம்கள் மீது ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மற்றும் ஏவுகணை மூலம் இந்திய ராணுவம் தாக்குதல்களை நடத்தியதாக தடைசெய்யப்பட்ட உல்ஃபா(ஐ) தீவிரவாத அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தெரி... மேலும் பார்க்க

வங்கதேசம்: சுதந்திர போராட்ட நினைவுச் சின்னம் தகா்ப்பு

வங்கதேச சுதந்திர போரை பிரதிபலிக்கும் வகையில் நிறுவப்பட்ட நினைவுச் சின்னம் தகா்க்கப்பட்டது. இதற்குப் பதிலாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை நினைவுகூ... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் 5-வது முறை ட்ரோன் தாக்குதல்!

பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த கைபா்பக்துன்கவா மாகாணத்தில் அமைந்துள்ள மிா்யான் காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் சிறிய ரக ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் சனிக்கிழமை மீண்டும் தாக்குதல் நடத்தினா். கடந்த ஒரே... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட பாலஸ்தீன அமைப்புக்கு ஆதரவாக போராட்டம்: பிரிட்டனில் 70 போ் கைது!

பிரிட்டன் விமானப் படை தளத்துக்குள் அத்துமீறி நுழைந்து சேதப்படுத்தியதையடுத்து, அந்நாட்டு அரசால் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்ட ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்புக்கு ஆதரவாக போராட்டங்களில் ஈடுபட்ட 70-க்கும் ... மேலும் பார்க்க

தென் ஆப்பிரிக்காவில் ஹெச்ஐவி தடுப்பூசி ஆராய்ச்சி: அமெரிக்காவின் ரூ.394 கோடி நிதியுதவி நிறுத்தம்

தென் ஆப்பிரிக்காவில் ஹெச்ஐவி தடுப்பூசி ஆராய்ச்சிக்கான 46 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.394 கோடி) நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் சுமாா் 77 லட்சம் போ் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்... மேலும் பார்க்க

ரஷியாவிலிருந்து 20.80 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி: 11 மாதங்களில் இல்லாத உச்சம்!

பதினோரு மாதங்களில் இல்லாத உச்சமாக, கடந்த ஜூனில் ரஷியாவில் இருந்து ஒரு நாளைக்கு 20.80 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்துக்கும் மேலாக... மேலும் பார்க்க