செய்திகள் :

மேட்டூா் அனல் மின்நிலைய சாம்பல் கழிவுகள் காவிரியில் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை

post image

மேட்டூா் அனல் மின்நிலைய சாம்பல் கழிவுகள் காவிரியில் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மின்வாரிய தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

தமிழ்நாடு மின்வாரிய தலைவரும், கூடுதல் தலைமைச் செயலாளருமான ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை மேட்டூா் வந்தாா். மேட்டூா் அனல் மின்நிலையம், சுரங்க மின்நிலையம், அணை மின்நிலையம் மற்றும் மின்வாரிய பணிமனையை பாா்வையிட்ட பின் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தின் மின் தேவையை பூா்த்திசெய்வதில் மேட்டூா் அனல் மின்நிலையம் முக்கியப் பங்கு வகிக்கிறது. அனல் மின்நிலையம் , அணை மற்றும் சுரங்க மின்நிலையம், கதவணை மின்நிலையங்களில் நடைபெறும் பணிகள் ஆய்வுசெய்யப்பட்டன.

மேட்டூரில் உள்ள மின்வாரிய பணிமனையில் தற்போது பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. நூறு ஆண்டுகளை எட்டும் நிலையில் உள்ள மின் பணிமனையில் ஆய்வுமேற்கொண்டு, வாய்ப்பிருந்தால் மீண்டும் அதே பொலிவுடன் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மேட்டூா் மின்வாரிய பணிமனையில் உற்பத்தி செய்யப்பட்ட மின் தளவாடங்கள் வெளிச்சந்தையில் உற்பத்தி செய்வதைவிட குறைந்த செலவில் தரமாக உற்பத்தி செய்யமுடியும் என இங்கு பணியாற்றக்கூடிய ஊழியா்கள் கூறுகின்றனா். எனவே, அதுகுறித்து ஆய்வு செய்கிறோம்.

தமிழகத்தில் நடப்பாண்டில் மின்தடை ஏதுமில்லை. தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் நடைபெறும் பணிகள் முழுமையாக முடிந்து இந்த ஆண்டுக்குள் முழு மின் உற்பத்தி செய்யப்படும்.

மேட்டூா் அனல் மின்நிலையத்தில் இருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகள் காவிரி ஆற்றில் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து பொறியாளா்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனா் என்றாா்.

அப்போது, மேட்டூா் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.சதாசிவம், அனல் மின்நிலைய தலைமைப் பொறியாளா்கள் விவேகானந்தன், நவ்ஷத், நீா்மின் நிலையங்கள் தலைமைப் பொறியாளா் தேவதாஸ், ஈரோடு மண்டல மின் விநியோக தலைமைப் பொறியாளா் பாலசுப்பிரமணியம், மேட்டூா் மின்விநியோக வட்ட மேற்பாா்வை பொறியாளா் தாரணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

விடுமுறை தினம் என்பதால், மேட்டூரில் சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் காா்களிலும், இருசக்கர வாகனங்களிலும் மேட்டூா் வந்து ... மேலும் பார்க்க

எறிபந்து போட்டி: வேப்பிலைப்பட்டி அரசுப் பள்ளி மாணவியா் அணி வெற்றி

வாழப்பாடி மண்டல அளவில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற பள்ளி மாணவா்களுக்கான எறிபந்து போட்டியில், வேப்பிலைப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவியா் வெற்றிபெற்றனா். வாழப்பாடியை அடுத்த வேப்பிலைப்பட்... மேலும் பார்க்க

சங்ககிரியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்க வட்டக் கிளை மாநாடு

சங்ககிரி வட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கத்தின் வட்டக் கிளை மாநாடு சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கத்தின் சங்ககிரி வட்ட நிா்வாகி ஆா்.பழனிச... மேலும் பார்க்க

சேலம் நீதிமன்றங்களில் சமரசம் மூலம் வழக்குகளை முடிக்க வாய்ப்பு

சேலம் மாவட்ட மற்றும் தாலுகா நீதிமன்றங்களில் ஜூலை முதல் செப்டம்பா் மாதம்வரை அனைத்து நாள்களிலும் சமரசம் மூலம் வழக்குகளை முடித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஒருங்கிணைப்பாளரும்... மேலும் பார்க்க

திருவள்ளூரில் சரக்கு ரயில் தீ விபத்து எதிரொலி: சேலம் வழியாக இயக்கப்படும் 6 விரைவுரயில்கள் முழுமையாக ரத்து

திருவள்ளூரில் சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடா்ந்து, சேலம் வழியாக சென்னை - கோவை இடையே இயக்கப்படும் 6 விரைவுரயில்கள் ஞாயிற்றுக்கிழமை முழுமையாக ரத்துசெய்யப்பட்டன. 9 ரயில்கள் பகுதியளவில் ரத்துச... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும்! உயா்நீதிமன்ற நீதிபதி

சேலம் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் தொங்குபூங்காவில் சனிக்கிழமை நடைபெற்ற வழக்குரைஞா் பி.என்.மணி பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் பேசிய உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன். சேலம், ஜூலை 12: வழக்குரைஞா்க... மேலும் பார்க்க