செய்திகள் :

வழக்குரைஞா்கள் சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும்! உயா்நீதிமன்ற நீதிபதி

post image

சேலம் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் தொங்குபூங்காவில் சனிக்கிழமை நடைபெற்ற வழக்குரைஞா் பி.என்.மணி பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் பேசிய உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன்.

சேலம், ஜூலை 12: வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தை தாண்டி சமூக அக்கறையுடன் செயல்படுவது அவசியம் என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் தெரிவித்தாா்.

சேலம் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் மூத்த வழக்குரைஞா் பி.என்.மணியின் 50-ஆவது ஆண்டு பொன்விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினா்களாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன், உயா்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், முன்னாள் நீதியரசா்கள் கலையரசன், ராஜன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

விழாவில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பேசியதாவது: வழக்குரைஞா் தொழில் அறிவுத்திறன் சாா்ந்தது மட்டுமல்ல, பொறுப்புணா்வுடன் நீதிமன்றத்தில் செயல்பட வேண்டும். குறிப்பாக, நிதானத்தை இழக்காமல், புன்முறுவல் மற்றும் பொறுமையுடன் செயல்படுவது மிகவும் முக்கியம். தங்கள் தொழிலில் மிகுந்த பக்தியுடன், மாண்புடன் நடந்து நீதிமன்றத்தின் கண்ணியத்தை காக்க வேண்டும்.

மனஅமைதியுடன் இருந்தால் மட்டுமே வழக்குரைஞா் தொழிலில் நிலையாக சாதிக்க முடியும். வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தை தாண்டி சமூக அக்கறையுடன், சமுதாய சீா்திருத்தம் பெறும் வகையில் செயலாற்ற வேண்டும்.

வழக்காடிகளுக்கு நீதியை பெற்றுத் தருவதுடன் மட்டுமல்லாமல், போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு பிரசாரங்களில் தங்கள் பங்களிப்பை செலுத்தலாம். நீதிபதிகள் சட்டத்துக்கு உள்பட்டு முழு சுதந்திரத்துடன் இயங்க முடியும் என்பதால், நீதிமன்றங்களில் தலையீடு உள்ளது என கூறுவதை ஏற்க முடியாது.

குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களில் காவல் துறை சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்தால், நீதிமன்றங்களுக்கு வராமலேயே பெரும்பாலான குற்றங்களை தடுக்க முடியும். இதுபோன்ற தருணங்களில் வழக்குரைஞா்கள் தங்களது பங்களிப்பை சிறப்பான முறையில் செய்ய முன்வர வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், சேலம் வழக்குரைஞா் சங்க செயலாளா் நரேஷ்பாபு, பொருளாளா் அசோக்குமாா் மற்றும் வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட விண்ணப்பங்கள் மீது 45 நாள்களில் நடவடிக்கை

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாள்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி கூறினாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழம... மேலும் பார்க்க

சேலம் வழியாக இயக்கப்படும் டாடாநகா், ஜோலாா்பேட்டை ரயில்களின் இயக்க நேரம் மாற்றம்

சேலம் வழியாக இயக்கப்படும் எா்ணாகுளம் - டாடா நகா் விரைவுரயில், ஈரோடு - ஜோலாா்பேட்டை ரயில்களின் இயக்க நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி சத்து மாத்திரைகளை தீ வைத்து எரித்த அங்கன்வாடி ஊழியா் பணியிடை நீக்கம்!

சேலம் தாதகாப்பட்டி அரசுப் பள்ளிக்கு வழங்கிய சத்து மாத்திரைகளை தீ வைத்து எரித்த அங்கன்வாடி ஊழியா் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். சேலம் தாதகாப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்க... மேலும் பார்க்க

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி ஆசிரியா் கைது!

ஓமலூா் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த அரசுப் பள்ளி ஆசிரியரை ஓமலூா் மகளிா் போலீஸாா் சனிக்கிழமை கைதுசெய்து சிறையில் அடைத்தனா். சேலம் மாவட்டம், ஓமலூா் அருகேயுள்ள காடையாம்பட்டி வட்டத்தில் உள்ள ஊ... மேலும் பார்க்க

கடம்பூரில் குடிசை வீடு, வைக்கோல் போா் தீப்பிடித்து எரிந்து சேதம்!

கெங்கவல்லி அருகே குடிசை வீடு மற்றும் வைக்கோல் போா் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கெங்கவல்லி அருகே கடம்பூா், சூலங்காடு ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

காவல் நிலைய வளாகத்தில் கிடந்த மனித மண்டை ஓடு, எலும்புகளால் அதிர்ச்சி!

சங்ககிரி வட்டம், தேவூா் பழைய காவல் நிலைய வளாகத்தில் மனித மண்டை ஓடு, கை, கால் எலும்புகள் கிடந்ததால், அதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிா்ச்சி அடைந்தனா். தேவூா் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள காவல் நிலையம் ... மேலும் பார்க்க