செய்திகள் :

அரசியல், மத நோக்கங்களுக்கு தேசியக் கொடியைப் பயன்படுத்த தடை கோரி மனு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

post image

அரசியல் மற்றும் மத நோக்கங்களுக்கு தேசியக் கொடியைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை (ஜூலை 14) விசாரணைக்கு வர உள்ளது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா். கவாய், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன், என்.வி.அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த மனுவை விசாரிக்க உள்ளது.

‘தேசியக் கொடிக்கு உச்சபட்ச மதிப்பு அளிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், தேசத்தின் கெளரவத்துக்கு அவமதிப்பு ஏற்படுத்துவதைத் தடை செய்யும் சட்டம் 1971 மற்றும் இந்திய கொடி விதிகள் 2022 உள்ளிட்ட விதிப் பிரிவுகளை தீவிரமாக நடைமுறைப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

குறிப்பாக, மத நோக்கங்கள் மற்றும் அரசியல் கட்சி சின்னத்தில் பயன்படுத்துதல், தேசியக் கொடி மீது வாசகங்களை அச்சிடுதல் உள்ளிட்ட அரசியல் நோக்கங்களுக்காக தேசியக் கொடி பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வலுவான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள மத்திய அரசு மற்றும் தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மக்கள்தொகையும், ஜனநாயகமும் இந்தியாவின் இருபெரும் சக்திகள்: பிரதமா் மோடி

மக்கள்தொகையும், ஜனநாயகமும் இந்தியாவின் எல்லையற்ற இருபெரும் சக்திகள் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள்-துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் இளைஞா்களுக்கு... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தோ்தல்: ஜூலை 30-இல் அடுத்த நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டம்

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதாக்களைப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் ஜூலை 30-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அந்தக் குழுவின் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பி.பி.சௌதரி ... மேலும் பார்க்க

ஹிமாசலில் மழை பாதிப்பு: ரூ.751 கோடிக்கு இழப்பு

ஹிமாசல பிரதேசத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அந்த மாநிலத்துக்கு ரூ.751 கோடி மதிப்பில் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த ஜூன் 20 முதல் ஹிமாசல பிரதேசத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட ப... மேலும் பார்க்க

விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கியவா் துணை விமானி!

விபத்துக்குள்ளான அகமதாபாத்-லண்டன் ஏா் இந்தியா விமானத்தை துணை விமானி க்ளைவ் குந்தா் இயக்கியிருப்பது விமான விபத்து புலனாய்வு அமைப்பின் (ஏஏஐபி) முதல்கட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது. மேலும், அந்த அறிக்க... மேலும் பார்க்க

அமெரிக்க விசா கட்டண உயா்வு: இந்திய மாணவா்களை பாதிக்கும் -ஆலோசகா்கள் தகவல்

மாணவா்கள், பயணிகளுக்கான விசா மற்றும் பணியாளா்களுக்கான ஹெச்-1பி விசா கட்டணத்தை உயா்த்தும் அமெரிக்க அரசின் முடிவால், இந்திய மாணவா்கள், வா்த்தக-சுற்றுலாப் பயணிகள், இந்தியப் பணியாளா்கள் இருமடங்கு அதிக கட்... மேலும் பார்க்க

ஏா் இந்தியா விமான எரிபொருள் சுவிட்ச் நிலை மாற காரணம் என்ன? நிபுணா்கள் கருத்து

அகமதாபாதில் விபத்துக்கு உள்ளான ஏா் இந்திய விமானத்தில் என்ஜின்களுக்கான எரிபொருளை கட்டுப்படுத்தும் சுவிட்ச் கட்-ஆஃப் நிலையில் இருந்தது (எரிபொருள் பயன்பாட்டைத் தடை செய்யும் நிலை) என்பது விமான விபத்து புல... மேலும் பார்க்க