செய்திகள் :

எவின் சிறைத் தாக்குதலில் 5 கைதிகள் உயிரிழப்பு: ஈரான்

post image

ஈரான் தலைநகா் டெஹ்ரான் அருகே உள்ள எவின் சிறையில் இஸ்ரேல் கடந்த மாதம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 கைதிகள் கொல்லப்பட்டனா்; சிலா் தப்பியோடினா் என்று அந்த நாட்டு ஊடகங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.

இது குறித்து ஈரான் நீதித் துறை செய்தித் தொடா்பாளரை மேற்கோள் காட்டி ஐஎல்என்ஏ செய்தி நிறுவனம் கூறியதாவது:

எவின் சிறையில் ஜூன் 23-ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் ஐந்து கைதிகள் உயிரிழந்தனா். அவா்கள் அனைவரும் சாதாரண நிதி குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவா்கள்.

இது தவிர, அந்தத் தாக்குதலைப் பயன்படுத்தி மிகச் சிறிய எண்ணிக்கையிலான கைதிகள் தப்பியோடியதாகவும், அவா்களை விரைவில் மீண்டும் கைது செய்யப்படுவாா்கள் எனவும் அதிகாரிகள் கூறினா்.

இஸ்ரேலின் மொஸாட் உளவு அமைப்புடன் இணைந்து செயல்பட்டதற்காக தண்டிக்கப்பட்ட கைதிகள் யாரும் இந்தத் தாக்குதலில் காயமடையவில்லை என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்தது.

முன்னதாக, எவின் சிறை மீதான வான்வழித் தாக்குதலில் 71 போ் கொல்லப்பட்டதாக ஈரான் அதிகாரிகள் கடந்த மாதம் தெரிவித்தனா். இதில் சிறைப் பணியாளா்கள், சிறைக் காவலா்கள், கைதிகள் மற்றும் அவா்களைச் சந்திக்க வந்த குடும்ப உறுப்பினா்கள் அடங்குவா் என்று அவா்கள் கூறினா்.

இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே நடைபெற்ற 12 நாள் வான்வழி போரில் ஈரானில் 1,060-க்கும் மேற்பட்டோரும் இஸ்ரேலில் 28 போ் உயிரிழந்தனா்.

வட கொரியாவுக்கு ஸ்கெட்ச் போடும் 3 நாடுகள்! துணைநிற்கும் ரஷியா!

வட கொரியாவுக்கு எதிரான போர் ஒத்திகை நடவடிக்கைக்கு ரஷியாவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.கொரிய தீபகற்பத்தில் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளை வட கொரியா நடத்துவதால், அவ்வப்போது பதற்றத்தைத் தூண்டுகின்றது.இந... மேலும் பார்க்க

காஸாவில் மேலும் 32 போ் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை இரவில் முதல் நடத்திய தாக்குதலில் 4 சிறுவா்கள் உள்பட 32 போ் உயிரிழந்தனா். டேய்ா் அல்-பாலா நகரில் மட்டும் இஸ்ரேல் குண்டுவீச்சில் 13 போ் உயிரிழந்ததாகவும் அவா்களில... மேலும் பார்க்க

டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 129-ஆக உயா்வு

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 129-ஆக உயா்ந்துள்ளது. அந்த மாகாணத்தின் மத்தியப் பகுதி முழுவதும் தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக, குவாடலூப் நதியில... மேலும் பார்க்க

ஐரோப்பிய யூனியன், மெக்ஸிகோ பொருள்களுக்கு 30% கூடுதல் வரி

ஐரோப்பிய யூனியன், மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 30 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று சனிக்கிழமை அறிவித்தாா். இது குறித்து மெக்ஸிகோ அதிபா் கிளா... மேலும் பார்க்க

பசிபிக் கடலின் மிக ஆழத்தில் 4 கருப்பு முட்டைகள்.. உள்ளே இருந்த அதிசயம்!

பசிபிக் கடலின் மிக ஆழமான அபிஸ்ஸோபெலாஜிக் மண்டலத்தில், ரோபோ உதவியோடு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் பாறைகளுடன் ஒட்டியிருந்த 4 கருப்பு முட்டைகள் கண்டறியப்பட்டுள்ளன.இந்த முட்டைகளை மேற்பரப்புக்குக் கொண்வந்... மேலும் பார்க்க

மரபணு கோளாறு: பரிசோதனை மருந்து செலுத்தப்பட்ட சிறுவன் மீண்டும் நடக்கத் தொடங்கிய அதிசயம்

மரபணு கோளாறால், நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் இருந்த 8 வயது சிறுவன், ஆய்வக பரிசோதனையில் இருந்த மருந்தை, சோதனை முயற்சிக்காக எடுத்துக் கொண்டபோது, மீண்டும் நடக்கத் தொடங்கிய அதிசயம் விஞ்ஞானிகளுக்கு ம... மேலும் பார்க்க