செய்திகள் :

பள்ளிகளில் ‘ப’ வடிவு இருக்கைகள்: "கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்?" - அன்புமணி காட்டம்

post image

கேரளாவில் சமீபத்தில் வெளியான `ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்' என்ற திரைப்படத்தால், பள்ளிகளில் கடைசி பென்ச் மாணவர்கள் என்ற பாகுபாட்டைக் களையும் நோக்கில் வகுப்பறைகளில் `ப' வடிவில் இருக்கைகளைச் சோதனை முறையில் அங்குச் சில பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.

இதைக் கண்டு தமிழக பள்ளி கல்வித்துறையும், மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் வகுப்பறையின் அளவைப் பொருத்து ப வடிவ இருக்கை வசதியைச் செய்ய முடிவெடுத்தது. அதனால், மாவட்ட கல்வி அலுவலர்களும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள தலைமை ஆசிரியர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பினர்.

ப வடிவில் பள்ளி வகுப்பறை இருக்கைகள்
ப வடிவில் பள்ளி வகுப்பறை இருக்கைகள்

இந்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி, "‘ப’ வடிவில் இருக்கைகளை அமைப்பது இருக்கட்டும்... முதலில் வகுப்பறைகளும், ஆசிரியர்களும் இருப்பதை உறுதி செய்யுங்கள்" என்று அரசை வலியுறுத்தியிருக்கிறார்.

இது குறித்து அறிக்கையில் அன்புமணி, "தமிழ்நாட்டில் பள்ளி வகுப்பறைகளில் மாணவர் இருக்கைகள் 'ப' வடிவில் அமைக்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநரகம் ஆணை பிறப்பித்துள்ளது.

அனைத்து மாணவர்களும் முதல் வரிசை மாணவர்களாகக் கருதப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன் என்ற மலையாளத் திரைப்படத்தில் வலியுறுத்தப்பட்ட கருத்துக்குச் செயல்வடிவம் கொடுக்க முயல்வதில் தவறு இல்லை.

ஆனால், ப வடிவத்தில் இருக்கைகளை அமைப்பதில் நிறைகள் இருப்பதைப் போலவே குறைகளும் உள்ளன.

இந்த முறையை மலையாள திரைப்படமும், தமிழக அரசும் வலியுறுத்துவதற்குப் பல பத்தாண்டுகளுக்கு முன்பே அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

இந்த முறையில் அனைத்து மாணவர்களும் முதல் வரிசை மாணவர்களாகக்கருதப்படுவார்கள் என்பது மாணவர்களின் மனநிலையை மேம்படுத்தக்கூடும், கற்றல் - கற்பித்தல் என்பது கலந்துரையாடலாக அமையும் என்பவை சாதகமான அம்சங்கள்.

 அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

எனினும், பெரும்பான்மையான வகுப்பறைகள் 20 அடி அகலமும், 20 அடி நீளமும் கொண்டவையாகவே உள்ளன.

இந்த வகுப்பறைகளில் ப வடிவில் அதிக அளவாக 20 முதல் 24 மாணவர்களை மட்டுமே அமர வைக்க முடியும்; அதற்கும் கூடுதலாக மாணவர்கள் இருந்தால் அனைவரிடத்திலும் ஆசிரியர்கள் கவனம் செலுத்த முடியாது;

வகுப்பறையின் இரு புறமும் அமர்ந்துள்ள மாணவர்கள் கரும்பலகையைப் பார்த்து எழுதுவதற்கு கழுத்தை ஒருபுறமாகத் திருப்பி வைத்திருக்க வேண்டும் என்பதால் அவர்களுக்கு கழுத்து வலி ஏற்படும்.

மாணவர்கள் எதிரெதிராக அமர்ந்திருக்கும் போது கவனச் சிதறல்கள் ஏற்படும் என்பன போன்ற பாதகமான அம்சங்களும் உள்ளன.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்... மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு அடிப்படைத் தேவை ஆசிரியர்களும், வகுப்பறைகளும் தான்.

ஆனால், தமிழ்நாடு முழுவதும் 3,800 தொடக்கப்பள்ளிகளில் 5 வகுப்புகளைக் கையாள்வதற்குத் தலா ஓர் ஆசிரியர் மட்டுமே உள்ளனர்.

மீதமுள்ள 25,618 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சராசரியாக ஒரு பள்ளிக்கு 2.5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இவ்வளவு குறைவான விகிதத்தில் ஆசிரியர்களை வைத்துக் கொண்டு அரசுப் பள்ளிகளில் தரமான கல்வியை எவ்வாறு வழங்க முடியும்?

பெரும்பான்மையான பள்ளிகளில் வகுப்பறைக் கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் தான் உள்ளன.

பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய வகுப்பறைகள் கட்ட ரூ.7500 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் எத்தனை வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளன என்பது அரசுக்கே வெளிச்சம்.

புதிய வகுப்பறை கட்டிடங்களிலும் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுவது வாடிக்கையாகி விட்டது.

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

மாணவர்களுக்குத் தரமான கல்வி வழங்கப்பட வேண்டும் என்றால் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மட்டும் குறைந்தது ஒரு லட்சம் வகுப்பறைகள் கட்டப்படுவதுடன், ஒரு லட்சம் ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட வேண்டும்.

அதை விடுத்து ப வடிவில் இருக்கைகளை அமைப்போம் என்பதெல்லாம் கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்? என்பதற்கு இணையான நகைச்சுவையாகவே அமையும். எனவே, தமிழக அரசு நகைச்சுவை செய்வதை விடுத்து கல்வி வளர்ச்சியில் உண்மையான அக்கறையைக் காட்ட வேண்டும்." என்று அறிவுறுத்தியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

திருப்பரங்குன்றம் குடமுழுக்கு: "மதுரை மாவட்டம் முழுவதும் விடுமுறை வேண்டும்" - ராஜன் செல்லப்பா

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழாவிற்கு தூத்துக்குடி மாவட்டம் முழுக்க விடுமுறை அளிக்கப்பட்டது. அதேபோல திருப்பரங்குன்றம் குடமுழுக்கிற்கும் மதுரை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும்... மேலும் பார்க்க

வேலூர்: சதுப்பேரியில் படகு சவாரி, இரண்டு செயற்கை தீவுகள்... வேலூரில் புதிய டூரிஸ்ட் பாயிண்ட்!

வேலூர் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்திருக்கும் சதுப்பேரி ஏரியைச் சுற்றுலா தளமாக மாற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. வேலூர் சேண்பாக்கம் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள சதுப்பேரியி... மேலும் பார்க்க

TVK: "ஜெய்பீம் படம் பார்த்து அழுத முதல்வர் உண்மையைப் பார்த்தும் அழவில்லையே" - ஆதவ் அர்ஜுனா

சிவகங்கையில் காவல்துறை சித்ரவதையால் உயிரிழந்த அஜித்குமாரின் உயிரிழப்புக்கு நீதிகேட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில், சென்னை, சிவானந்தம் சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.தவெக ஆர்ப்பாட்டம்இந்... மேலும் பார்க்க

Vijay: "விளம்பர அரசு Sorryம்மா அரசாக மாறிவிட்டது" - ஸ்டாலினைக் கடுமையாகச் சாடிய விஜய்

சிவகங்கையில் காவல்துறை சித்ரவதையால் உயிரிழந்த அஜித் குமாரின் உயிரிழப்புக்கு நீதிகேட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில், சென்னை, சிவானந்தம் சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஆர்ப்பாட்டத்தில் த... மேலும் பார்க்க

பாஜக: "தமிழகம் வர அமித்ஷா விமானம் ஏறினாலே திமுக-விற்கு நடுக்கம் ஏற்படுகிறது" - நயினார் நாகேந்திரன்

மதுரை எப்போதும் திமுகவிற்கு ராசியில்லாதது, எங்களுக்கு ராசியானது, தமிழகத்தில் மீனாட்சியம்மன் ஆட்சியை உருவாக்குவோம் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.மதுரை மாநகராட்சியில் நடைபெற... மேலும் பார்க்க

Vijay: ஆர்ப்பாட்டத்துக்கு வரும் தவெக தொண்டர்களைக் கைது செய்கிறதா போலீஸ்? கொதிக்கும் நிர்வாகிகள்!

சிவகங்கையில் நடந்த காவல் மரணத்தைக் கண்டித்து தவெக சார்பில் இன்று, சென்னை, சிவானந்தம் சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.10 மணிக்குத் தொடங்கவிருக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜ... மேலும் பார்க்க