செய்திகள் :

இஸ்ரேல் தாக்குதல்: ராஃபாவில் 3 மாதங்களில் 28,500 கட்டடங்கள் தகர்ப்பு!

post image

காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 19 பேர் இன்று (ஜூலை 13) கொல்லப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை (ஜூலை 12) காலை முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காஸா - இஸ்ரேல் இடையே கடந்த 21 மாதங்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இருதரப்பினருக்கும் இடையிலான போரை மீண்டும் இடைநிறுத்தம் செய்வதற்காகவும், எஞ்சியுள்ள பிணைக்கைதிகளை விடுவிப்பதற்காகவும் இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட நட்பு நாடுகள் அறிவுறுத்தி வருகின்றன.

வடக்கு காஸாவின் பெயித் ஹனோன் பகுதியில் கட்டடங்களைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் 40 குண்டுகளை வீசியதாகவும், இஸ்லாமிய பல்கலைக் கழகம் அருகேவுள்ள கட்டடங்களைக் குறிவைத்தும் தாக்குதலை நடத்தியதாகவும் காஸா தெரிவித்துள்ளது.

இதேபோன்று தெற்கு ராஃபாவில் அரசுக்கு சொந்தமான கட்டடங்களைக் குறிவைத்தும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. மேலும், தெற்கு காஸாவில் பல்வேறு முகாம்களில் உள்ள 6 லட்சம் மக்களை இடப்பெயர்வு செய்யவுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. இதற்காக தொடர் தாக்குதல்களை நடத்தி அச்சுறுத்தும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளது.

கத்தாரைச் சேர்ந்த சர்வதேச ஊடகம் (அல்ஜஸீரா) நடத்திய ஆய்வில், ஐக்கிய நாடுகள் அவைக்குச் சொந்தமான செயற்கைக்கோள் மையத்தில் உள்ள தரவுகளின்படி, ராஃபாவின் செயற்கைக்கோள் புகைப்படத்தில், 2025 ஏப்ரல் 4 நிலவரப்படி இடிக்கப்பட்ட கட்டடங்களின் எண்ணிக்கை 15,800 ஆக இருந்த நிலையில், ஜூலை 4 நிலவரப்படி 28,600 ஆக அதிகரித்துள்ளது.

காஸாவின் மீது தொடர் தாக்குதல்களில் இஸ்ரேல் ஈடுபட்டு வருவதன் தீவிரத்தையே இந்தத் தரவுகள் குறிப்பிடுவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க |கழிப்பறையில் புகைபிடித்த இளம் ஜோடியால் 17 மணி நேரம் தாமதமான விமானம்!

Israeli attack: 28,500 buildings demolished in Rafah in 3 months!

லண்டன் விமான நிலையத்தில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்து!

லண்டன் சௌத் எண்ட் விமான நிலையத்தில் புறப்பட்ட சில வினாடிகளிலேயே சிறிய ரக விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் எசெக்ஸில் உள்ள லண்டன் சௌத்எண்ட் விமான ந... மேலும் பார்க்க

கழிப்பறையில் புகைப்பிடித்த இளம் ஜோடியால் 17 மணி நேரம் தாமதமான விமானம்!

மெக்ஸிகோவில் இருந்து லண்டன் சென்றுக்கொண்டிருந்த விமானத்தின் கழிப்பறையில் இளம் ஜோடி ஒன்று, வெளியே வராமல் தொடர்ந்து புகைப்பிடித்துக்கொண்டிருந்ததால், விமானப் பயணம் 17 மணி நேரம் தாமதமானது.விமான ஊழியர்கள் ... மேலும் பார்க்க

உள்ளூர் விமானம் என நினைத்து செளதி சென்ற பாகிஸ்தான் இளைஞர்!

பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உள்ளூர் விமானம் என நினைத்து, செளதி அரேபியா சென்ற சம்பவம் பலரிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.லாகூரில் இருந்து கராச்சி செல்ல, விமானம் இவ்வளவு நேரம் பறக்கிறதே என சக பயண... மேலும் பார்க்க

வட கொரியாவுக்கு ஸ்கெட்ச் போடும் 3 நாடுகள்! துணைநிற்கும் ரஷியா!

வட கொரியாவுக்கு எதிரான போர் ஒத்திகை நடவடிக்கைக்கு ரஷியாவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.கொரிய தீபகற்பத்தில் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளை வட கொரியா நடத்துவதால், அவ்வப்போது பதற்றத்தைத் தூண்டுகின்றது.இந... மேலும் பார்க்க

காஸாவில் மேலும் 32 போ் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை இரவில் முதல் நடத்திய தாக்குதலில் 4 சிறுவா்கள் உள்பட 32 போ் உயிரிழந்தனா். டேய்ா் அல்-பாலா நகரில் மட்டும் இஸ்ரேல் குண்டுவீச்சில் 13 போ் உயிரிழந்ததாகவும் அவா்களில... மேலும் பார்க்க

எவின் சிறைத் தாக்குதலில் 5 கைதிகள் உயிரிழப்பு: ஈரான்

ஈரான் தலைநகா் டெஹ்ரான் அருகே உள்ள எவின் சிறையில் இஸ்ரேல் கடந்த மாதம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 கைதிகள் கொல்லப்பட்டனா்; சிலா் தப்பியோடினா் என்று அந்த நாட்டு ஊடகங்கள் சனிக்கிழமை தெரிவித்தன. இது கு... மேலும் பார்க்க