செய்திகள் :

உள்ளூர் விமானம் என நினைத்து செளதி சென்ற பாகிஸ்தான் இளைஞர்!

post image

பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உள்ளூர் விமானம் என நினைத்து, செளதி அரேபியா சென்ற சம்பவம் பலரிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

லாகூரில் இருந்து கராச்சி செல்ல, விமானம் இவ்வளவு நேரம் பறக்கிறதே என சக பயணிகளிடம் கேட்டபோதே அவருக்கு உண்மை தெரியவந்துள்ளது.

விமான டிக்கெட் பரிசோதனைக் குழுவினர் டிக்கெட்டை பரிசோதனை செய்து அனுப்பியதில் அலட்சியத்துடன் செயல்பட்டதால், கடவுச்சீட்டு கூட இல்லாமல் அவர் தவறுதலாக செளதி வரை சென்றுள்ளார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஷாஸேன் என்ற இளைஞர் லாகூரில் இருந்து கராச்சி செல்வதற்காக உள்ளூர் விமானத்தில் செல்வதற்காக டிக்கெட் எடுத்துள்ளார். ஆனால், உள்ளூர் விமான முனையத்தில் அருகருகே இரண்டு விமானங்கள் இருந்ததால், அவர் தவறான விமானத்தில் ஏறியுள்ளார்.

ஆனால், இடையே டிக்கெட் பரிசோதனைக் குழுவினரும் விமானப் பணியாளர்களும் டிக்கெட்டை பரிசோதனை செய்தே அவரை இருக்கையில் அமரவைத்துள்ளனர்.

தனது தவறை அங்கிருந்த பணியாளர்கள் சுட்டிக்காட்டத் தவறிவிட்டதால், பெரும் துன்பத்தை அனுபவித்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கராச்சிக்கு செல்ல விமானம் நீண்ட நேரமாக பறப்பதாக சக பயணிகளிடம் கேட்டபோது, அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் அவரிடம் உண்மையைக் கூறியுள்ளனர். இந்த விமானம் செளதி அரேபியா செல்வதாகவும், அதனால் நீண்ட நேர பயணம் எடுத்துக்கொள்ளும் விமானம் இது எனவும் சக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

அதன் பிறகே ஷாஸேனுக்கு உண்மை தெரியவந்துள்ளது. தான் செய்த தவறை விமான டிக்கெட் பரிசோதகர்கள் யாரும் சுட்டிக்காட்டவில்லை எனக் குறிப்பிட்டு, பணியாளர்கள் மீது குற்றம் சாட்டி விமான நிறுவனத்துக்கு அவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பயண செலவுகளை திரும்பத் தர வலியுறுத்தியும், இதனால் ஏற்பட்ட அலைச்சல் மற்றும் மன உளைச்சலுக்கு இழப்பீடு கோரியும் அவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக பாகிஸ்தான் உள்துறை கட்டுப்பாட்டில் உள்ள தேசிய புலனாய்வு முகமை விசாரணை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதையும் படிக்க | மேகாலயா தேனிலவு கொலை வழக்கு: 2 பேருக்கு ஜாமீன் !

Pakistani man boards wrong flight in Lahore then lands in Saudi Arabia, WITHOUT passport

இஸ்ரேல் தாக்குதல்: ராஃபாவில் 3 மாதங்களில் 28,500 கட்டடங்கள் தகர்ப்பு!

காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 19 பேர் இன்று (ஜூலை 13) கொல்லப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை (ஜூலை 12) காலை முதல் இஸ்ரேல்... மேலும் பார்க்க

கழிப்பறையில் புகைப்பிடித்த இளம் ஜோடியால் 17 மணி நேரம் தாமதமான விமானம்!

மெக்ஸிகோவில் இருந்து லண்டன் சென்றுக்கொண்டிருந்த விமானத்தின் கழிப்பறையில் இளம் ஜோடி ஒன்று, வெளியே வராமல் தொடர்ந்து புகைப்பிடித்துக்கொண்டிருந்ததால், விமானப் பயணம் 17 மணி நேரம் தாமதமானது.விமான ஊழியர்கள் ... மேலும் பார்க்க

வட கொரியாவுக்கு ஸ்கெட்ச் போடும் 3 நாடுகள்! துணைநிற்கும் ரஷியா!

வட கொரியாவுக்கு எதிரான போர் ஒத்திகை நடவடிக்கைக்கு ரஷியாவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.கொரிய தீபகற்பத்தில் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளை வட கொரியா நடத்துவதால், அவ்வப்போது பதற்றத்தைத் தூண்டுகின்றது.இந... மேலும் பார்க்க

காஸாவில் மேலும் 32 போ் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை இரவில் முதல் நடத்திய தாக்குதலில் 4 சிறுவா்கள் உள்பட 32 போ் உயிரிழந்தனா். டேய்ா் அல்-பாலா நகரில் மட்டும் இஸ்ரேல் குண்டுவீச்சில் 13 போ் உயிரிழந்ததாகவும் அவா்களில... மேலும் பார்க்க

எவின் சிறைத் தாக்குதலில் 5 கைதிகள் உயிரிழப்பு: ஈரான்

ஈரான் தலைநகா் டெஹ்ரான் அருகே உள்ள எவின் சிறையில் இஸ்ரேல் கடந்த மாதம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 கைதிகள் கொல்லப்பட்டனா்; சிலா் தப்பியோடினா் என்று அந்த நாட்டு ஊடகங்கள் சனிக்கிழமை தெரிவித்தன. இது கு... மேலும் பார்க்க

டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 129-ஆக உயா்வு

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 129-ஆக உயா்ந்துள்ளது. அந்த மாகாணத்தின் மத்தியப் பகுதி முழுவதும் தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக, குவாடலூப் நதியில... மேலும் பார்க்க