செய்திகள் :

கழிப்பறையில் புகைப்பிடித்த இளம் ஜோடியால் 17 மணி நேரம் தாமதமான விமானம்!

post image

மெக்ஸிகோவில் இருந்து லண்டன் சென்றுக்கொண்டிருந்த விமானத்தின் கழிப்பறையில் இளம் ஜோடி ஒன்று, வெளியே வராமல் தொடர்ந்து புகைப்பிடித்துக்கொண்டிருந்ததால், விமானப் பயணம் 17 மணி நேரம் தாமதமானது.

விமான ஊழியர்கள் மற்றும் விமானியின் அறிவுறுத்தலையும் பொருட்படுத்தாது அந்த இளம் ஜோடி கழிப்பறையில் இருந்து வெளியே வராததால், பாதியிலேயே விமானம் தரையிறக்கப்பட்டது. 17 மணி நேர போராட்டத்துக்குப் பிறகே விமானத்தில் இருந்த மற்ற பயணிகள் திட்டமிட்டபடி அழைத்துச்செல்லப்பட்டனர்.

இங்கிலாந்தைச் சேர்ந்த டியூஐ விமான நிறுவனம், ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்க நாடுகளுக்கு பயணச் சேவையை வழங்கி வருகிறது.

அந்தவகையில், மெக்ஸிகோவில் இருந்து நேற்று பயணிகளுடன் லண்டன் சென்றுக்கொண்டிருந்த விமானத்தில், இளம் ஜோடி ஒன்று கழிப்பறையில் இருந்து நீண்ட நேரமாக வெளியே வரவில்லை என்றும், அவர்கள் தொடர்ந்து புகைப்பிடித்துக்கொண்டிருப்பதாகவும் விமானிக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதன் பிறகு, கழிப்பறையில் உள்ள இருவர் வெளியே வருமாறு விமானி அறிவுறுத்தியுள்ளார். ஆனால், மது போதையில் இருந்ததாகக் கூறப்படும் அந்த இளம் ஜோடி அறிவுறுத்தலைப் பொருட்படுத்தவில்லை.

மூன்று மணிநேரமாக பலமுறை அறிவுறுத்திய பிறகும் அவர்கள் வராததால், மெக்ஸிகோ எல்லையில் இருந்து வட அமெரிக்காவில் உள்ள மெய்ன் என்ற இடத்திற்கு விமானத்தை திருப்புவதாக விமானி அறிவித்துள்ளார். திட்டமிடப்படாத இடத்தில் விமானம் தரையிறக்கப்பட்டதால், விமானத்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர்.

17 மணி நேரத்துக்குப் பிறகு இரவு 9.30 மணியளவில் அந்த ஜோடி வெளியே வந்துள்ளது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய பயணிகள், விரைவில் விமானத்தை இயக்க கோரிக்கை வைத்தனர். சக பயணிகளிடம் மன்னிப்பு கோரிய விமானி, பின்னர் விமானத்தை இயக்கிச் சென்றதாக லண்டனைச் சேர்ந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க | உள்ளூர் விமானம் என நினைத்து செளதி சென்ற பாகிஸ்தான் இளைஞர்!

Drunk couple's four-hour smoking session in plane toilet leaves others stranded at 'warzone' airport for 17 hours

இஸ்ரேல் தாக்குதல்: ராஃபாவில் 3 மாதங்களில் 28,500 கட்டடங்கள் தகர்ப்பு!

காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 19 பேர் இன்று (ஜூலை 13) கொல்லப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை (ஜூலை 12) காலை முதல் இஸ்ரேல்... மேலும் பார்க்க

உள்ளூர் விமானம் என நினைத்து செளதி சென்ற பாகிஸ்தான் இளைஞர்!

பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உள்ளூர் விமானம் என நினைத்து, செளதி அரேபியா சென்ற சம்பவம் பலரிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.லாகூரில் இருந்து கராச்சி செல்ல, விமானம் இவ்வளவு நேரம் பறக்கிறதே என சக பயண... மேலும் பார்க்க

வட கொரியாவுக்கு ஸ்கெட்ச் போடும் 3 நாடுகள்! துணைநிற்கும் ரஷியா!

வட கொரியாவுக்கு எதிரான போர் ஒத்திகை நடவடிக்கைக்கு ரஷியாவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.கொரிய தீபகற்பத்தில் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளை வட கொரியா நடத்துவதால், அவ்வப்போது பதற்றத்தைத் தூண்டுகின்றது.இந... மேலும் பார்க்க

காஸாவில் மேலும் 32 போ் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை இரவில் முதல் நடத்திய தாக்குதலில் 4 சிறுவா்கள் உள்பட 32 போ் உயிரிழந்தனா். டேய்ா் அல்-பாலா நகரில் மட்டும் இஸ்ரேல் குண்டுவீச்சில் 13 போ் உயிரிழந்ததாகவும் அவா்களில... மேலும் பார்க்க

எவின் சிறைத் தாக்குதலில் 5 கைதிகள் உயிரிழப்பு: ஈரான்

ஈரான் தலைநகா் டெஹ்ரான் அருகே உள்ள எவின் சிறையில் இஸ்ரேல் கடந்த மாதம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 கைதிகள் கொல்லப்பட்டனா்; சிலா் தப்பியோடினா் என்று அந்த நாட்டு ஊடகங்கள் சனிக்கிழமை தெரிவித்தன. இது கு... மேலும் பார்க்க

டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 129-ஆக உயா்வு

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 129-ஆக உயா்ந்துள்ளது. அந்த மாகாணத்தின் மத்தியப் பகுதி முழுவதும் தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக, குவாடலூப் நதியில... மேலும் பார்க்க