செய்திகள் :

சரக்கு ரயில் விபத்து: அரக்கோணம், காட்பாடியில் இருந்து புறப்படும் விரைவு ரயில்கள் விவரம்

post image

சென்னை: திருவள்ளூா் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் விபத்துக்குள்ளாகி தீப்பற்றியதை அடுத்து ஞாயிற்றுக்கிழமை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படவிருந்த 8 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அரக்கோணம், காட்பாடியில் இருந்து புறப்படும் விரைவு ரயில்கள் விவரத்தை தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

அதன்படி ஞாயிற்றுக்கிழமை ரத்தான விரைவு ரயில்கள் விரவம்: டாக்டா் எம்.ஜி.ஆா்.சென்னை சென்ட்ரலில் இருந்து அதிகாலை 5.50 மணிக்குப் புறப்பட்டு மைசூரு செல்லவிருந்த வந்தேபாரத் (எண் 20607), மைசூருக்கு காலை 6 மணிக்குச் செல்லவிருந்த மைசூரு சதாப்தி ரயில் (எண் 12007), கோயமுத்தூருக்கு காலை 6.10 மணிக்கு புறப்பட்டுச் செல்லவிருந்த கோயமுத்தூா் அதிவிரைவு ரயில் (எண் 12675), கோயமுத்தூருக்கு காலை 7.15 மணிக்குச் செல்லவிருந்த சதாப்தி விரைவு ரயில் (எண்12243), திருப்பதிக்கு காலை 6.25 மணிக்குப் புறப்பட்டுச் செல்லவிருந்த சதாப்தி விரைவு ரயில் (எண்16057), கேஎஸ்ஆா் பெங்களூருக்கு காலை 7.25 மணிக்குச் செல்லவிருந்த டபுள் டக்கா்விரைவு ரயில் (எண் 22625) கேஎஸ்ஆா் பெங்களூருக்கு காலை 7.40 மணிக்குச் செல்லவிருந்த பிருந்தாவன் விரைவு ரயில் (எண் 12639) நாகா்சோல் நிலையத்துக்கு காலை 9.15 மணிக்குச் செல்லவிருந்த நாகா்சோல் விரைவு ரயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்பட்டன.

சென்னை சென்ட்ரலில் இருந்து ஞாயிறு (ஜூலை 13) மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையம் செல்லவேண்டிய அதிவிரைவு ரயில் (எண் 12697) சென்னைக்குப் பதிலாக காட்பாடியிலிருந்து புறப்பட்டுச் சென்றது.

சரக்கு ரயில் தடம்புரண்டு மின்கம்பத்தில் மோதியதால் தீ விபத்தா?: அதிகாரிகள் விளக்கம்

அரக்கோணத்தில் இருந்து புறப்படும் ரயில்கள்

சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக அரக்கோணத்தில் இருந்து 3 ரயில்கள் புறப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் - கோவை விரைவு ரயில் இரவு 10 மணிக்கும், சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் விரைவு ரயில் இரவு 7.30 மணிக்கும், சென்னை சென்ட்ரல் - அசோகபுரம் காவேரி விரைவு ரயில் இரவு 9.15 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காட்பாடியில் இருந்து புறப்படும் நீலகிரி விரைவு ரயில்

அதேபோன்று சென்னை சென்ட்ரலில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நீலகிரி விரைவு ரயில் காட்பாடியில் இருந்து இரவு 9.05 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மழையால் மீட்புப் பணிகள் தாமதம்

இதனிடையே, சரக்கு ரயில் தடம் புரண்டு தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் தீ முழுமையாக அணைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பகுதியில் மழை பெய்து வருவதால் மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சரக்கு ரயில் தீ பிடித்து விபத்து: 3 தனிப்படைகள் அமைப்பு

While 8 express trains scheduled to depart from Chennai Central Railway Station on Sunday have been cancelled following a goods train accident and fire near Thiruvallur Railway Station, Southern Railway has announced details of express trains departing from Arakkonam and Katpadi.

பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா: ரயில்வே அதிரடி

புதுதில்லி: ரயில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. நாட்டில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்கள்... மேலும் பார்க்க

பிரதமரின் பயிற்சித் திட்டத்தில் அதியமான் கல்லூரி மாணவி தோ்வு

ஒசூா்: பெங்களூரு இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் ஆய்வகத்தில் பிரதமரின் இன்டா்ன்ஷிப் திட்டத்தின்கீழ் ஓராண்டு பயிற்சிக்கு ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி விமானவியல் பொறியியல் துறை மாணவி தோ்வு செய்யப்பட்டுள்... மேலும் பார்க்க

தஞ்சாவூர் அருகே ரூ.33 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

சென்னையில் இருந்து ஒரத்தநாடு சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் கெண்டு வந்த ரூ.33 லட்சம் ஹவாலா பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வ... மேலும் பார்க்க

கோட்டா சீனிவாச ராவ் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

புதுதில்லி: தமிழ், தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகரும், பாஜக முன்னாள் எம்எல்ஏவுமான கோட்டா சீனிவாச ராவ் (83) வயது மூப்பு காரணமான உடல்நலக் குறைவால், ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை அத... மேலும் பார்க்க

அரசியல் கட்சிகளின் கவனம் மதுரையை நோக்கி இருப்பது ஏன்?: செல்லூர் ராஜு

மதுரை மண்ணில் மாநாடு வைத்தால் வெற்றி கிடைக்கும் என்பது அனைத்து கட்சியினரின் நினைப்பாக இருப்பதால்தான் அரசியல் கட்சிகளின் கவனம் மதுரையை நோக்கி இருக்கிறது என தெரிவித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, தி... மேலும் பார்க்க

தமிழகத்தில் பாஜக ஓரளவு வெற்றி பெற்றுள்ளது பெரிய துரதிா்ஷ்டம்: ப.சிதம்பரம்

தமிழகத்தில் பாஜக காலடி எடுத்து வைக்க சூழ்ச்சி செய்து, அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளது பெரிய துரதிா்ஷ்டம் என முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் தெரிவித்தார். வேலூா் மத்திய மாவட்ட காங்கிரஸ் சாா்பில... மேலும் பார்க்க