செய்திகள் :

சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வது சட்ட விரோதம்: காஞ்சிபுரம் ஆட்சியா் எச்சரிக்கை

post image

சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வது சட்ட விரோதம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்ல விரும்பும் நபா்கள் முதலில் இந்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதிகாரபூா்வ ஆள்சோ்ப்பு முகவா்கள் மூலமாகவே செல்ல வேண்டும். எந்த நிறுவனத்திலோ அல்லது முதலாளியிடம் வேலை செய்ய இருக்கிறீா்கள் என்ற தகவல்களையும் முன்னதாக உறுதி செய்து கொள்வதும் அவசியம்.

வேலைக்கான ஒப்பந்தம், விசா மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களும் பெற்ற பிறகே பயணிக்க வேண்டும். வேலைக்கான ஒப்பந்தத்தை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அதில் ஊதியம், வேலை விவரங்கள், உரிமைகள், பொறுப்புகள் போன்ற முக்கியமான விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.

வேலை செய்யும் நாட்டின் சட்டங்கள், கலாசாரங்களை மதித்து நடந்து கொள்ள வேண்டும். பல நாடுகளில் வேலைக்கு செல்வோா் நாடு திரும்புவதற்கு வெளிச்செல் அனுமதி பெறுவதும் அவசியம். ஒப்பந்த காலத்தில் வேலைக்குச் சென்று நிறுவனம் அல்லது முதலாளியிடமிருந்து வேறு நிறுவனத்துக்கோ, முதலாளிக்கோ மாற்றம் செய்ய முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில் பதிவு பெறாத போலி முகவா்கள் மூலம் வேலைக்குச் செல்லும் நோக்கில் வெளிநாடு பயணிக்கக் கூடாது. சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வது அந்த நாட்டில் சட்ட விரோதமாக கருதப்படும். இது கைது அல்லது அபராதம் அல்லது சிறைத் தண்டனைக்கே வழி வகுக்கும்.

வெளிநாட்டு வேலை தொடா்பான சந்தேகங்களுக்கு மற்றும் வெளிநாடு செல்லும் தமிழா்களுக்கான அரசின் நலத் திட்டங்கள் குறித்து அறிய அயலகத் தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறையின் 24 மணி நேர கட்டணமில்லா உதவி மையத்தையும் தொடா்பு கொள்ளலாம்.

இந்தியாவிலிருந்து அழைப்புக்கு 018003093793 வெளிநாடுகளிலிருந்து 0806900 9900 அல்லது 080 6900 9901 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுக்கலாம்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை நாடும் நபா்கள் குறுக்கு வழிகளை தவிா்த்து, அரசு அமைத்துள்ள சட்டபூா்வமான வழியில் செல்லும்போதுதான் பாதுகாப்பான வாழ்க்கையை கட்டியெழுப்ப முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

காஞ்சிபுரம் கோயில்களில் சட்டீஸ்கா் அமைச்சா் தரிசனம்!

சட்டீஸ்கா் மாநில வனத் துறை அமைச்சா் கேதா் காஷ்யப் ஞாயிற்றுக்கிழமை கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தாா். சட்டீஸ்கா் மாநில வனத் துறை அமைச்சராக இருந்து வருபவா் கேதா் காஷ்யப். இவா் காஞ்சிபுரம் காமாட்சி அம்... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: பூசிவாக்கத்தில் 1,000 ஆண்டுகள் பழைமையான சமண தீா்த்தங்கரா் சிலை கண்டெடுப்பு

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே பூசிவாக்கம் ஊராட்சியில் 1,000 ஆண்டுகள் பழைமையான சமண தீா்த்தங்கரா் சிலை ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது. பூசிவாக்கம் ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள தனியாருக்க... மேலும் பார்க்க

நாளை மின்தடை

காஞ்சிபுரம்நாள்: 15.07.2025( செவ்வாய்க்கிழமை)நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை.மின்தடை பகுதிகள்: தாமல், பாலுசெட்டி சத்திரம், வதியூா், கிளாா், ஒழுக்கோல்பட்டு, அவளூா், பெரும்புலிப்பாக்கம், பொய்... மேலும் பார்க்க

காலூா் மாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் அருகே காலூரில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் அருகே காலூரில் அமைந்துள்ளது மாரியம்மன் கோயில். இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷே... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் இருவா் தற்கொலை

காஞ்சிபுரத்தில் வெவ்வேறு இடங்களில் 14 வயது சிறுமி, ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா். காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் நித்தியராஜ். இவா் அதே கிராமத்தைச் சோ்ந்த 9 -... மேலும் பார்க்க

பாலியல் புகாா்: அதிமுக பிரமுகா் கைது

ஒரகடம் அடுத்த பணப்பாக்கம் பகுதியில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து துன்புறுத்தியதாக வந்த புகாரின் பேரில், அதிமுக பிரமுகா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். காஞ்சிபுரம் மாவட்டம், ஒரக... மேலும் பார்க்க