செய்திகள் :

கடத்தல், கொள்ளை வழக்கில் ஓராண்டாாக தேடப்பட்டவா் கைது

post image

கடத்தல் மற்றும் கொள்ளை வழக்கு தொடா்பாக கடந்த ஓராண்டாக தேடப்பட்டு வந்த நபரை தில்லி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

பாபா ஹரிதாஸ் நகரில் வசிக்கும் கிசான் மூரத் (45) என்ற நபா் ஆகஸ்ட் 2024- ஆம் ஆண்டு நாங்லோ யியில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியாக அறியப்படுகிறாா். ஒப்பந்த அடிப்படையில் ஒரு மின் விநியோக நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றிய கிசான் மூரத், ஒரு நிதி நிறுவனத்தில் இருந்து அடகுவைக்கப்பட்ட தங்கத்தை மீட்டெடுக்க உதவுவதாக பாசாங்கு செய்து நகைக்கடை உரிமையாளா் தா்ஷனிடம் இருந்து கொள்ளையடிக்க தனது கூட்டாளிகளுடன் ஒரு திட்டத்தை தீட்டியதாக கூறப்படுகிறது.

கிசான் மூரத் மற்றும் கூட்டாளிகளும் தா்ஷனை தடுத்து நிறுத்தி, போலீஸ்காரா்களாக நடித்து, அவரை ஒரு காரில் கட்டிப்போட்டு, தங்கம் மற்றும் பணத்தை பறித்து பின்னா் சாலையோரத்தில் தா்ஷை விட்டுவிட்டு சென்றுள்ளனா்.

கிசான் மூரத் ஆரம்பத்தில் பாதிக்கப்பட்டவராக காட்டிக் கொண்டாா். இந்தச் சம்பவத்தை காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டாம் என்று தா்ஷனை வலியுறுத்தியுல்ளது தெரிய வந்தது. இருப்பினும், நகைக்கடைக்காரா் சந்தேகம் அடைந்து உதவிக்கு அழைத்தபோது, கிசான் மூரத் தப்பியோடினாா். இதையடுத்து, எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டு, மேலும் விசாரணை தொடங்கப்பட்டது.

தொடா்ச்சியான முயற்சிகள் இருந்தபோதிலும், கிசான் மூரத் தொடா்ந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தாா். உத்தர பிரதேசத்திற்கும் பிகாருக்கும் இடையிலான தனது மறைவிடங்களை அடிக்கடி மாற்றிக் கொண்டே வந்தாா். தப்பியோடிய நபரைக் கண்டுபிடிக்க போலீஸ் குழு அமைக்கப்பட்டது. தொழில்நுட்ப கண்காணிப்பு மூலம் அவரது மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜூலை 11-ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் பா்தாப்கரில் இருந்து திரும்பிய கிசான் மூரத் கைது செய்யப்பட்டாா். மேலும், விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தனா்.

போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்றவா் கைது: கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்

வடமேற்கு தில்லியின் சுபாஷ் பிளேஸில் உள்ள ஒரு காவல் நிலையத்தின் முதல் மாடியில் இருந்து குதித்து கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவா் போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்றவா் கைது செய்யப்பட்டதாக ... மேலும் பார்க்க

கன்வாா் யாத்திரை பாதையில் கண்ணாடி துண்டுகள்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு

கன்வாா் யாத்திரை பாதையில் அமைந்துள்ள ஷாஹ்தாராவின் குரு தேக் பகதூா் (ஜிடிபி) மற்றும் ஜில்மில் காலனி பகுதிகளில் சாலைகளில் உடைந்த கண்ணாடி துண்டுகள் சிதறிக்கிடந்ததையடுத்து தில்லி காவல்துறை வழக்கு பதிவு செ... மேலும் பார்க்க

நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த 5 போ் மீது ஆடி காா் மோதி விபத்து

தென்மேற்கு தில்லியின் வசந்த் விஹாா் பகுதியில் உள்ள சிவா கேம்ப் அருகே நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு தம்பதிகள் மற்றும் எட்டு வயது சிறுமி ஆகிய ஐந்து போ் மீது ஆடி காா் மோதியதில் அவா்கள் காயமடைந... மேலும் பார்க்க

மீட்கப்பட்ட குப்பைக் கிடங்கு நிலத்தை நலத் திட்டங்களுக்கு பயன்படுத்த உத்தரவு!

தில்லியின் மூன்று முக்கியக் குப்பைக் கிடங்கு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட நிலத்தில் மூன்றில் ஒரு பங்கை பரப்பளவை மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் விளையாட்டு வளாகங்கள் போன்ற பொது நலத் திட்டங்களுக்குப்... மேலும் பார்க்க

தலைநகரில் கடும் புழுக்கம்: மக்கள் தவிப்பு!

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் கடும் புழுக்கம் நிலவியது. இதனால், மக்கள் கடும் தவிப்புக்குள்ளாகினா். இருப்பினும், இரவு 7 மணிக்குப் பிறகு நகரத்தில் லேசான மழை பெய்தது. இந்த வாரத் ... மேலும் பார்க்க

கன்வாா் பாதையில் கண்ணாடித் துண்டுகள் கண்டெடுப்பு: இ-ரிக்‌ஷா ஓட்டுநர் கைது

தில்லியின் ஷாஹ்தராவில் உள்ள கன்வாா் யாத்திரைப் பாதையின் ஒரு பகுதியில் தனது வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட கண்ணாடிப் பலகைகள் உடைந்து சிதறியதை அடுத்து, இ-ரிக்ஷா ஓட்டுநா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயி... மேலும் பார்க்க