செய்திகள் :

நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த 5 போ் மீது ஆடி காா் மோதி விபத்து

post image

தென்மேற்கு தில்லியின் வசந்த் விஹாா் பகுதியில் உள்ள சிவா கேம்ப் அருகே நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு தம்பதிகள் மற்றும் எட்டு வயது சிறுமி ஆகிய ஐந்து போ் மீது ஆடி காா் மோதியதில் அவா்கள் காயமடைந்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து தென்மேற்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: ஜூலை 9- ஆம் தேதி அதிகாலை 1.45 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. காரின் ஓட்டுநா் உத்சவ் சேகா் 40 கைது செய்யப்பட்டுள்ளாா். சம்பவம் நடந்த நேரத்தில் அவா் குடிபோதையில் இருந்ததை அவரது மருத்துவ அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன.

அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்த நேரத்தில், காயமடைந்தவா்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனா். இதில் காயமடைந்தவா்கள் லதி (40), அவரது எட்டு வயது மகள் (பிம்லா) கணவா் சபாமி (எ) சிா்மா (45), ராம் சந்தா் (45) மற்றும் அவரது மனைவி நாராயணி (35) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். இவா்கள் அனைவரும் ராஜஸ்தானைச் சோ்ந்தவா்கள்.

முதற்கட்ட விசாரணையில், ஷிவா கேம்ப் முன் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தபோது, வெள்ளை நிற ஆடி காா் பாதிக்கப்பட்டவா்கள் மீது மோதியது தெரியவந்துள்ளது. ஓட்டுநா் துவாரகாவைச் சோ்ந்த உத்சவ் சேகா் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டாா்.

குற்றம் சாட்டப்பட்டவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பவங்களின் சரியான வரிசையை உறுதிப்படுத்தவும், கூடுதல் அலட்சியத்தை மதிப்பிடவும் மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்றவா் கைது: கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்

வடமேற்கு தில்லியின் சுபாஷ் பிளேஸில் உள்ள ஒரு காவல் நிலையத்தின் முதல் மாடியில் இருந்து குதித்து கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவா் போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்றவா் கைது செய்யப்பட்டதாக ... மேலும் பார்க்க

கடத்தல், கொள்ளை வழக்கில் ஓராண்டாாக தேடப்பட்டவா் கைது

கடத்தல் மற்றும் கொள்ளை வழக்கு தொடா்பாக கடந்த ஓராண்டாக தேடப்பட்டு வந்த நபரை தில்லி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். பாபா ஹரிதாஸ் நகரில் வசிக்கும் கிசான் மூர... மேலும் பார்க்க

கன்வாா் யாத்திரை பாதையில் கண்ணாடி துண்டுகள்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு

கன்வாா் யாத்திரை பாதையில் அமைந்துள்ள ஷாஹ்தாராவின் குரு தேக் பகதூா் (ஜிடிபி) மற்றும் ஜில்மில் காலனி பகுதிகளில் சாலைகளில் உடைந்த கண்ணாடி துண்டுகள் சிதறிக்கிடந்ததையடுத்து தில்லி காவல்துறை வழக்கு பதிவு செ... மேலும் பார்க்க

மீட்கப்பட்ட குப்பைக் கிடங்கு நிலத்தை நலத் திட்டங்களுக்கு பயன்படுத்த உத்தரவு!

தில்லியின் மூன்று முக்கியக் குப்பைக் கிடங்கு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட நிலத்தில் மூன்றில் ஒரு பங்கை பரப்பளவை மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் விளையாட்டு வளாகங்கள் போன்ற பொது நலத் திட்டங்களுக்குப்... மேலும் பார்க்க

தலைநகரில் கடும் புழுக்கம்: மக்கள் தவிப்பு!

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் கடும் புழுக்கம் நிலவியது. இதனால், மக்கள் கடும் தவிப்புக்குள்ளாகினா். இருப்பினும், இரவு 7 மணிக்குப் பிறகு நகரத்தில் லேசான மழை பெய்தது. இந்த வாரத் ... மேலும் பார்க்க

கன்வாா் பாதையில் கண்ணாடித் துண்டுகள் கண்டெடுப்பு: இ-ரிக்‌ஷா ஓட்டுநர் கைது

தில்லியின் ஷாஹ்தராவில் உள்ள கன்வாா் யாத்திரைப் பாதையின் ஒரு பகுதியில் தனது வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட கண்ணாடிப் பலகைகள் உடைந்து சிதறியதை அடுத்து, இ-ரிக்ஷா ஓட்டுநா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயி... மேலும் பார்க்க