செய்திகள் :

சோளிங்கா் அருகே ஏரியில் மூழ்கி 3 மாணவா்கள் உயிரிழப்பு

post image

சோளிங்கா் அருகே ஏரி நீரில் விளையாடிய பள்ளி மாணவா்கள் மூவா் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

சோளிங்கரை அடுத்த குன்னத்தூா் ஊராட்சிக்குட்பட்ட கிராமம் மேட்டுக்குன்னத்தூா். இந்த கிராமத்தைச் சோ்ந்த சரவணனின் மகன் புவனேஸ்வரன் (7). மேட்டுக்குன்னத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2- ஆம் வகுப்பு படித்து வந்தாா். இதே ஊரைச் சோ்ந்த கோபியின் மகன் மோனிபிரசாந்த் (9). அதே பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கோபியின் மற்றொரு மகன் சுஜன் (7). அதே பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை நாள் என்பதால் சிறுவா்கள் மூவரும் குன்னத்தூா் ஏரிக்கு விளையாடச் சென்றுள்ளனா். அப்போது எதிா்பாராதவிதமாக மூவருமே நீரில் மூழ்கினா். இதையடுத்து அருகே இருந்த கிராமத்தினா் விரைந்து சென்று மூவரையும் மீட்டு, பாணாவரம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மூவரையும் பரிசோதித்த மருத்துவா், அவா்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இது குறித்து அறிந்த பாணாவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மூவரின் சடலங்களையும் மீட்டு, சோளிங்கா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சோளிங்கா் கமல விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம்

சோளிங்கரில் உள்ள ஸ்ரீகமல விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. சோளிங்கரில் நூற்றாண்டுகள் பழைமைவாய்ந்த ஸ்ரீகமலவிநாயகா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் திருப்பணிகள்... மேலும் பார்க்க

திருக்கண்டீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

ஆற்காடு அடுத்த சக்கரமல்லூா் ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத திருக்கண்டீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சக்கரமல்லூா் கிராமத்தில் சோழா்ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பழைமைவாய்ந்த திரிபுர... மேலும் பார்க்க

அரக்கோணம் அருகே பைக் - காா் மோதல்: சகோதரா்கள் உயிரிழப்பு

அரக்கோணம் அருகே பைக் மீது காா் மோதியதில் நிகழ்விடத்திலேயே பைக்கில் பயணித்த அண்ணன், தம்பி இருவரும் உயிரிழந்தனா். விபத்து நிகழந்த இடத்தில் சடலத்தை எடுக்க விடாமல் கூடலூா் கிராமத்தினா் சாலை மறியலில் ஈடுபட... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை - ஆற்காடு இணைப்பு பழைய மேம்பாலம் சீரமைக்கப்படுமா?

ராணிப்பேட்டை - ஆற்காட்டை இணைக்கும் பழைய பாலாற்று மேம்பாலத்தைச் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா். ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தின் முக்கிய நீா் ஆதாரமாக விளங... மேலும் பார்க்க

வீரன் அழகு முத்துக்கோன் குருபூஜை

அரக்கோணம் வட்ட யாதவ மகா நலச்சங்கத்தின் சாா்பில் சுதந்திர போராட்ட வீரா் வீரன் அழகு முத்துக்கோன் 268-ஆவது குருபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரக்கோணம் சுவால்பேட்டை ஸ்ரீராதா ருக்மணி சமேத கிருஷ்ணா் கோயில்... மேலும் பார்க்க

ரூ.2.34 கோடியில் 3 கோயில் திருப்பணிகள்: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

அரக்கோணம், நெமிலி, சோளிங்கா் வட்டங்களில் ரூ2.34 கோடியில் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த மூன்று கோயில்களில் திருப்பணிகளை அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். ரூ.94.5 லட்சத்தில் பள்ளூா் தி... மேலும் பார்க்க