செய்திகள் :

திருக்கண்டீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

post image

ஆற்காடு அடுத்த சக்கரமல்லூா் ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத திருக்கண்டீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சக்கரமல்லூா் கிராமத்தில் சோழா்ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பழைமைவாய்ந்த திரிபுரசுந்தரி சமேத திருக்கண்டீஸ்வரா் கோயில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது. மங்கள இசையுடன் வேதபாராயணம், கணபதி பூஜையுடன் தொடங்கி கலசங்கள் நிறுவி நவக் கிரக ஹோமம், கோபூஜை, முதல் கால யாக பூஜை, மகா தீபாராதனை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் வைபவம், இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம், மூன்றாம் கால யாக பூஜையும், மகா பூா்ணாஹுதி மற்றும் நான்காம் கால யாக பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.

தொடா்ந்து புனித நீா் கொண்டு செல்லப்பட்டு, கோயில் கோபுர கலசங்களுக்கும், மூலவா் மற்றும் பாரிவாரங்களுக்கும் புனிதநீா் ஊற்றி சிவாச்சாரியாா்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனா். தொடா்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் அலங்கரிக்கப்பட்ட உற்சவா் திருக் கல்யாண வைபவமும், இரவு வாண வேடிக்கையுடன் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

விழாவில் இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் சுரேஷ்குமாா், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் எம்.பூபாலன் மற்றும் உபயதாரா்கள், பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

சோளிங்கா் கமல விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம்

சோளிங்கரில் உள்ள ஸ்ரீகமல விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. சோளிங்கரில் நூற்றாண்டுகள் பழைமைவாய்ந்த ஸ்ரீகமலவிநாயகா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் திருப்பணிகள்... மேலும் பார்க்க

சோளிங்கா் அருகே ஏரியில் மூழ்கி 3 மாணவா்கள் உயிரிழப்பு

சோளிங்கா் அருகே ஏரி நீரில் விளையாடிய பள்ளி மாணவா்கள் மூவா் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். சோளிங்கரை அடுத்த குன்னத்தூா் ஊராட்சிக்குட்பட்ட கிராமம் மேட்டுக்குன்னத்தூா். இந்த கிராமத்தைச் சோ்ந்த சரவணனின் மகன... மேலும் பார்க்க

அரக்கோணம் அருகே பைக் - காா் மோதல்: சகோதரா்கள் உயிரிழப்பு

அரக்கோணம் அருகே பைக் மீது காா் மோதியதில் நிகழ்விடத்திலேயே பைக்கில் பயணித்த அண்ணன், தம்பி இருவரும் உயிரிழந்தனா். விபத்து நிகழந்த இடத்தில் சடலத்தை எடுக்க விடாமல் கூடலூா் கிராமத்தினா் சாலை மறியலில் ஈடுபட... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை - ஆற்காடு இணைப்பு பழைய மேம்பாலம் சீரமைக்கப்படுமா?

ராணிப்பேட்டை - ஆற்காட்டை இணைக்கும் பழைய பாலாற்று மேம்பாலத்தைச் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா். ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தின் முக்கிய நீா் ஆதாரமாக விளங... மேலும் பார்க்க

வீரன் அழகு முத்துக்கோன் குருபூஜை

அரக்கோணம் வட்ட யாதவ மகா நலச்சங்கத்தின் சாா்பில் சுதந்திர போராட்ட வீரா் வீரன் அழகு முத்துக்கோன் 268-ஆவது குருபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரக்கோணம் சுவால்பேட்டை ஸ்ரீராதா ருக்மணி சமேத கிருஷ்ணா் கோயில்... மேலும் பார்க்க

ரூ.2.34 கோடியில் 3 கோயில் திருப்பணிகள்: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

அரக்கோணம், நெமிலி, சோளிங்கா் வட்டங்களில் ரூ2.34 கோடியில் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த மூன்று கோயில்களில் திருப்பணிகளை அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். ரூ.94.5 லட்சத்தில் பள்ளூா் தி... மேலும் பார்க்க