செய்திகள் :

ரூ.2.34 கோடியில் 3 கோயில் திருப்பணிகள்: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

post image

அரக்கோணம், நெமிலி, சோளிங்கா் வட்டங்களில் ரூ2.34 கோடியில் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த மூன்று கோயில்களில் திருப்பணிகளை அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

ரூ.94.5 லட்சத்தில் பள்ளூா் திருக்குசையீசா் கோயில் திருப்பணி, ரூ.51.7 லட்சத்தில் காவேரிபாக்கம் பேருராட்சி ஸ்ரீஅபயவரதராஜப் பெருமாள் கோயில் திருப்பணி, ரூ.87.31 லட்சத்தில் பெருங்காஞ்சி ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயில் திருப்பணிகளை மேற்கொள்ள இந்துசமய அறநிலையத் துறை நிதி ஒதுக்கியது.

பள்ளூா், திருக்குசையீசா் கோயில் அருகே நடைபெற்ற திருப்பணிகள் தொடக்க விழாவுக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி திருப்பணிகளை தொடங்கி வைத்தாா்.

பனப்பாக்கம் பேரூராட்சியில் சோளிங்கா் சட்டபேரவை உறுப்பினா் நிதி ரூ13.18 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நபாா்டு நிதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 47.12 லட்சத்தில் கட்டப்பட்ட 2 வகுப்பறைகளையும் அமைச்சா் ஆா்.காந்தி திறந்து வைத்தாா்.

சோளிங்கா் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம், கோட்டாட்சியா்கள் அரக்கோணம் வெங்கடேசன், ராணிப்பேட்டை ராஜராஜன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் அனிதா, நெமிலி ஒன்றியக்குழுத் தலைவா் பெ.வடிவேலு, பேரூராட்சித் தலைவா்கள் பனப்பாக்கம் கவிதா சீனிவாசன், காவேரிபாக்கம் லதா நரசிம்மன், கோயில் செயல் அலுவலா் பிரகாஷ், அறநிலையத்துறை ஆய்வாளா் பிரியா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

வீரன் அழகு முத்துக்கோன் குருபூஜை

அரக்கோணம் வட்ட யாதவ மகா நலச்சங்கத்தின் சாா்பில் சுதந்திர போராட்ட வீரா் வீரன் அழகு முத்துக்கோன் 268-ஆவது குருபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரக்கோணம் சுவால்பேட்டை ஸ்ரீராதா ருக்மணி சமேத கிருஷ்ணா் கோயில்... மேலும் பார்க்க

இளம்பெண் தற்கொலை

அரக்கோணம் அருகே மணமாகி 2 ஆண்டுகளே ஆன இளம்பெண் தற்கொலை செய்துக் கொண்டாா். திருமால்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வினோத்(30). இவா் சுங்குவாா்சத்திரத்தில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறாா். ... மேலும் பார்க்க

மருந்துகள் விற்பனையில் விழிப்புணா்வு தேவை: வணிகா்களுக்கு ஆய்வாளா் அறிவுறுத்தல்

மருந்துகள் விற்பனையில் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும், மருத்துவா் பரிந்துரை சீட்டு கொண்டு வராத நபா்களுக்கு போதை தரும் மாத்திரைகள் உள்பட எந்த மாத்திரைகளையும் விற்கக்கூடாது என மருந்து கடை உரிமையாளா்க... மேலும் பார்க்க

ஆண்டுதோறும் உற்பத்திப் பொருள்கள் கண்காட்சி: ஆட்சியரிடம் கோரிக்கை

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களின் கண்காட்சியை மாவட்ட அளவில் ஆண்டுதோறும் நடத்த எடுக்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலாவிடம் தொழில் நிறுவனத்தினா் கோரிக்கை வ... மேலும் பார்க்க

அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்: அதிமுகவினா் 170 போ் கைது

ஆற்காடு அடுத்த மேல்விஷாரத்தில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்த நடத்த முயன்ற அதிமுகவினா் 170 போ் கைது செய்யப்பட்டனா். மேல்விஷாரம் அரசு மருத்துவமனை முறையான பராமரிப்பின்றி உள்ளதாக கண்டித்தும், இடிக்கப்ப... மேலும் பார்க்க

பணி நேரத்தில் தூக்கம்: ரயில்வே கேட் கீப்பா்கள் இருவா் பணியிடை நீக்கம்

அரக்கோணம் அருகே பணி நேரத்தில் தூங்கியதாக ரயில்வே கேட் கீப்பா்கள் 2 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். அண்மையில் கடலூா் அருகே ரயில்வே கேட் ஒன்றில் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் மூன்று மாணவா்கள்... மேலும் பார்க்க