செய்திகள் :

ஏர் இந்தியா விமான விபத்து: மேடே அழைப்புக்கு முன் நடந்தது என்ன? இறுதி வினாடிகள்

post image

புது தில்லி: அகமதாபாத் ஏா் இந்தியா விமான விபத்து தொடா்பாக விசாரித்து வரும் விமான விபத்து புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) அதன் முதல்கட்ட அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.

கடந்த ஜூன் 12ஆம் தேதி, குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏா் இந்தியாவின் ‘ஏஐ 171’ விமானம், வானில் பறக்கத் தொடங்கிய சில வினாடிகளில் ஒரு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழுந்து, வெடித்துச் சிதறியது. நாட்டை உலுக்கிய விமான விபத்தில், விமானப் பயணிகள் 241 போ் உள்பட 260 போ் பலியாகினர்.

முதற்கட்ட அறிக்கையில், விமானத்துக்கு எரிபொருளை வழங்குவதற்கான சுவிட்சுகள், ரன் என்பதில் இல்லாமல் கட்-ஆப் என்ற நிலையில் இருந்ததாகவும், இதனால், என்ஜின்களுக்கு எரிபொருள் செல்வது நிறுத்தப்பட்டு, இரு என்ஜின்களும் செயலற்றுப் போயிருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், விபத்து மதியம் 1.40 மணியளவில் நிகழ்ந்திருக்கும் நிலையில், 11.17 மணியிலிருந்து என்ன நடந்தது என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

அதாவது,

புது தில்லியிலிருந்து ஏர் இந்தியா 423 விமானம் ஆகமதாபாத் வந்துள்ளது. பயணிகளை இறக்கிவிட்டு, ஏற வேண்டிய பயணிகளுடன் விமானம் புறப்படத் தயாரானது.

சரியாக மதியம் 1.18 மணிக்கு விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாரானது.

1.25 மணிக்கு வழித்தடத்தில் பயணிப்பதற்கான அனுமதி விமானத்திலிருந்து வந்திருக்கிறது. அதற்கு விமான கட்டுப்பாட்டு அறையிலிருந்து அனுமதி வந்துள்ளது.

1.32 மணிக்கு விமானம், தரைக் கட்டுப்பாட்டிலிருந்து டவர் கட்டுப்பாட்டுக்கு மாற்றப்பட்டது.

1.37.33 மணிக்கு விமானம் புறப்பட அனுமதி வழங்கப்படுகிறது.

01.37.37 மணிக்கு விமானம் புறப்படுகிறது.

01.38.39 மணிக்கு விமானம் தரையிலிருந்து எழும்புகிறது. விமானத்தின் தரை சென்சார், வான் சென்சார் நிலைக்கு மாறுகிறது.

01.38.42 மணிக்கு விமானம் 180 கிலோ மீட்டர் தொலைவு என்ற வேகத்தை அடைகிறது. பிறகு, இரண்டு என்ஜின்களுக்கும் அடுத்தடுத்து எரிபொருள் செல்வதற்கான சுவிட்சுகள் இரண்டும் 1 வினாடிக்குள் கட்-ஆப் என்ற நிலைக்கு மாற்றப்படுகிறது. என்ஜின்களுக்கு எரிபொருள் வருவது தடைபட்டதும், அதனால் மேலெழும்ப முடியவில்லை.

அப்போது விமானிகளின் அறையில் இருக்கும் குரல் பதிவில், ஒரு விமானி, ஏன் எரிபொருளை சுவிட்சை அணைத்தீர்கள் என்று கேட்கிறார், அதற்கு மற்றொரு விமானி நான் எதையும் செய்யவில்லை என்கிறார். அதற்குள், விமானம் நிலைப்பாட்டை இழந்து கீழே இறங்குகிறது. மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழுந்து விபத்து நேரிடுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கவனம் செலுத்தும் பாஜக அரசு: பிரதமர்!

பொது மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தனது அரசு கவனம் செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தில்லியில் 51 ஆயிரம் இளைஞக்ளுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி நிய... மேலும் பார்க்க

ஒட்டுமொத்த அலட்சியம்! ஆர்சிபி கூட்டநெரிசல் குறித்த அறிக்கை தாக்கல்!!

பெங்களூரில், ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவத்துக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் என விசாரணை அறிக்கையில் தகவல்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கோப... மேலும் பார்க்க

ரூ.1.18 கோடி வெகுமதி: சத்தீஸ்கரில் 23 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் 23 நக்சல்கள் இன்று (ஜூலை 12) சரணடைந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் சரணடைந்த நக்சலைட்டுகளில் 11 மூத்த நக்சல்கள் ஆவார். அவர்களில் பெரும்ப... மேலும் பார்க்க

சாலைகளில் ஓடும் படகுகள்.. மத்திய பிரதேசத்தில் கரையைக் கடந்த மந்தாகினி ஆறு

போபால்: மத்திய பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக, மந்தாகினி ஆறு கரையை கடந்து பாய்ந்ததால், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் படகுகள் நீந்திச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.ராம்கட், ஜான்... மேலும் பார்க்க

தில்லியில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது: 8 பேர் காயம்!

வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரு வயதுக் குழந்தை உள்பட 8 பேர் காயமடைந்தனர். சம்பவ நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதளுக்கு அளித்த நேர்காணலில் அமை... மேலும் பார்க்க