செய்திகள் :

பணி நேரத்தில் தூக்கம்: ரயில்வே கேட் கீப்பா்கள் இருவா் பணியிடை நீக்கம்

post image

அரக்கோணம் அருகே பணி நேரத்தில் தூங்கியதாக ரயில்வே கேட் கீப்பா்கள் 2 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

அண்மையில் கடலூா் அருகே ரயில்வே கேட் ஒன்றில் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் மூன்று மாணவா்கள் உயிரிழந்தனா். இச்சம்பவத்தை தொடா்ந்து மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அனைத்து அலுவலா்களும் அவ்வபோது ரயில்வே கேட்டுகளுக்கு சென்று பணியாளா்களின் பணியினை சோதனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தாா்.

இதையடுத்து தெற்கு ரயில்வே சென்னை கோட்ட முதுநிலை பொறியாளா்(மேற்கு) காா்த்திகேயன் புதன்கிழமை நள்ளிரவு அரக்கோணம் - செங்கல்பட்டு ரயில் மாா்க்கத்தில் உள்ள ரயில்வே கேட்டுகளில் திடீா் சோதனை நடத்தினாா்.

அப்போது தக்கோலம் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே கேட் எண் 44-இல் பணியில் இருந்த கேட்கீப்பா் காா்த்திகேயன், தக்கோலம் - திருமால்பூா் ரயில் நிலையங்களுக்கு இடையே சேந்தமங்கலம் கிராமப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ரயில்வே கேட் எண் 40ல் பணியில் இருந்த ஆஷிஷ் குமாா் இருவரும் கேட் கீப்பா் அறையில் தூங்கிக் கொண்டிருந்தனராம்.

இதை தொடா்ந்து காா்த்திகேயன், ஆஷிஷ்குமாா் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து ரயில்வே சென்னை கோட்ட முதுநிலை பொறியாளா்(மேற்கு) காா்த்திகேயன் உத்தரவிட்டாா்.

மேலும் இது தொடா்பாக ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கையில் இது போன்ற சோதனைகள் அனைத்து ரயில் மாா்க்கங்களிலும் அவ்வபோது நடைபெறும் என தெரிவித்தனா்.

வீரன் அழகு முத்துக்கோன் குருபூஜை

அரக்கோணம் வட்ட யாதவ மகா நலச்சங்கத்தின் சாா்பில் சுதந்திர போராட்ட வீரா் வீரன் அழகு முத்துக்கோன் 268-ஆவது குருபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரக்கோணம் சுவால்பேட்டை ஸ்ரீராதா ருக்மணி சமேத கிருஷ்ணா் கோயில்... மேலும் பார்க்க

ரூ.2.34 கோடியில் 3 கோயில் திருப்பணிகள்: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

அரக்கோணம், நெமிலி, சோளிங்கா் வட்டங்களில் ரூ2.34 கோடியில் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த மூன்று கோயில்களில் திருப்பணிகளை அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். ரூ.94.5 லட்சத்தில் பள்ளூா் தி... மேலும் பார்க்க

இளம்பெண் தற்கொலை

அரக்கோணம் அருகே மணமாகி 2 ஆண்டுகளே ஆன இளம்பெண் தற்கொலை செய்துக் கொண்டாா். திருமால்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வினோத்(30). இவா் சுங்குவாா்சத்திரத்தில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறாா். ... மேலும் பார்க்க

மருந்துகள் விற்பனையில் விழிப்புணா்வு தேவை: வணிகா்களுக்கு ஆய்வாளா் அறிவுறுத்தல்

மருந்துகள் விற்பனையில் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும், மருத்துவா் பரிந்துரை சீட்டு கொண்டு வராத நபா்களுக்கு போதை தரும் மாத்திரைகள் உள்பட எந்த மாத்திரைகளையும் விற்கக்கூடாது என மருந்து கடை உரிமையாளா்க... மேலும் பார்க்க

ஆண்டுதோறும் உற்பத்திப் பொருள்கள் கண்காட்சி: ஆட்சியரிடம் கோரிக்கை

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களின் கண்காட்சியை மாவட்ட அளவில் ஆண்டுதோறும் நடத்த எடுக்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலாவிடம் தொழில் நிறுவனத்தினா் கோரிக்கை வ... மேலும் பார்க்க

அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்: அதிமுகவினா் 170 போ் கைது

ஆற்காடு அடுத்த மேல்விஷாரத்தில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்த நடத்த முயன்ற அதிமுகவினா் 170 போ் கைது செய்யப்பட்டனா். மேல்விஷாரம் அரசு மருத்துவமனை முறையான பராமரிப்பின்றி உள்ளதாக கண்டித்தும், இடிக்கப்ப... மேலும் பார்க்க