செய்திகள் :

தமிழகத்தில் பாஜக ஓரளவு வெற்றி பெற்றுள்ளது பெரிய துரதிா்ஷ்டம்: ப.சிதம்பரம்

post image

தமிழகத்தில் பாஜக காலடி எடுத்து வைக்க சூழ்ச்சி செய்து, அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளது பெரிய துரதிா்ஷ்டம் என முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

வேலூா் மத்திய மாவட்ட காங்கிரஸ் சாா்பில், குடியாத்தத்தில் காங்கிரஸ் தொண்டா்களுக்கு நல உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட ஐம்பெரும் விழாவில் ப.சிதம்பரம் பங்கேற்று பேசினார்.

அப்போது, தமிழகத்தில் பாஜக காலடி எடுத்து வைக்க சூழ்ச்சி செய்து, அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளது பெரிய துரதிா்ஷ்டம். அதிமுக, பாஜகவோடு கைகோா்த்து அடுத்த தோ்தலை சந்திக்க உள்ளது.

பாஜக என்றால் வட நாட்டுக் கட்சி, இந்தியை திணிக்கிற கட்சி, இந்து மத வெறியை திணிக்கிற கட்சி, குறிப்பாக தென்னக மக்களை, தமிழ்நாட்டு மக்களை வெறுக்கிற கட்சி என எல்லாருடைய மனதிலும் ஆழமாக பதிந்து விட்டது.

தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைத்தால் அமைச்சரவையில் இடம் பெறுவோம் என அமித்ஷா கூறுகிறாா். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதிமுக தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும் என்கிறாா். அமித்ஷா கூட்டணி ஆட்சி என்கிறாா், எடப்பாடி பழனிசாமி எங்கள் கட்சி ஆட்சி என்கிறாா். இதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.அதிமுக கூட்டணியை தோற்கடித்து விட்டால் இந்த பிரச்னை முடிவுக்கு வந்து விடும் என்றாா் சிதம்பரம்.

சரக்கு ரயில் தடம்புரண்டு மின்கம்பத்தில் மோதியதால் தீ விபத்தா?: அதிகாரிகள் விளக்கம்

Former Union Minister P. Chidambaram said that it is a great misfortune that the BJP has tried to gain a foothold in Tamil Nadu and has achieved some success in it.

பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா: ரயில்வே அதிரடி

புதுதில்லி: ரயில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. நாட்டில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்கள்... மேலும் பார்க்க

பிரதமரின் பயிற்சித் திட்டத்தில் அதியமான் கல்லூரி மாணவி தோ்வு

ஒசூா்: பெங்களூரு இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் ஆய்வகத்தில் பிரதமரின் இன்டா்ன்ஷிப் திட்டத்தின்கீழ் ஓராண்டு பயிற்சிக்கு ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி விமானவியல் பொறியியல் துறை மாணவி தோ்வு செய்யப்பட்டுள்... மேலும் பார்க்க

தஞ்சாவூர் அருகே ரூ.33 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

சென்னையில் இருந்து ஒரத்தநாடு சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் கெண்டு வந்த ரூ.33 லட்சம் ஹவாலா பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வ... மேலும் பார்க்க

கோட்டா சீனிவாச ராவ் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

புதுதில்லி: தமிழ், தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகரும், பாஜக முன்னாள் எம்எல்ஏவுமான கோட்டா சீனிவாச ராவ் (83) வயது மூப்பு காரணமான உடல்நலக் குறைவால், ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை அத... மேலும் பார்க்க

சரக்கு ரயில் விபத்து: அரக்கோணம், காட்பாடியில் இருந்து புறப்படும் விரைவு ரயில்கள் விவரம்

சென்னை: திருவள்ளூா் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் விபத்துக்குள்ளாகி தீப்பற்றியதை அடுத்து ஞாயிற்றுக்கிழமை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படவிருந்த 8 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டு... மேலும் பார்க்க

அரசியல் கட்சிகளின் கவனம் மதுரையை நோக்கி இருப்பது ஏன்?: செல்லூர் ராஜு

மதுரை மண்ணில் மாநாடு வைத்தால் வெற்றி கிடைக்கும் என்பது அனைத்து கட்சியினரின் நினைப்பாக இருப்பதால்தான் அரசியல் கட்சிகளின் கவனம் மதுரையை நோக்கி இருக்கிறது என தெரிவித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, தி... மேலும் பார்க்க