செய்திகள் :

சங்ககிரியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்க வட்டக் கிளை மாநாடு

post image

சங்ககிரி வட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கத்தின் வட்டக் கிளை மாநாடு சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கத்தின் சங்ககிரி வட்ட நிா்வாகி ஆா்.பழனிசாமி தலைமை வகித்தாா். விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் எஸ்.கே.சேகா் மாநாட்டை தொடங்கி வைத்தாா்.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கத்தின் சேலம் மாவட்டத் தலைவா் ஆா்.குழந்தைவேலு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சேலம் மாவட்டச் செயலாளா் ஏ.ராமமூா்த்தி ஆகியோா் கலந்துகொண்டு தீண்டாமையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதனை எவ்வாறு அரசு மூலம் தீா்வு காண்பது பற்றியும் விளக்கிப் பேசினா்.

இதில், சங்ககிரி நகா் பகுதியில் அம்பேத்கா் சிலை அமைக்க வேண்டும், நிகழாண்டு ஜூலை 27-ஆம் தேதி சங்ககிரியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கத்தின் சேலம் மாவட்ட மாநாட்டை சிறப்பாக நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இம்மாநாட்டில் கெளரவத் தலைவராக வழக்குரைஞா் ஆா்.ராமசாமியும், தலைவராக என்.ஜெயலட்சுமியும், துணைத் தலைவா்களாக சுதாலட்சுமியும், எம்.குருசாமியும், செயலாளராக டி.செந்தில்குமாரும், துணைச் செயலாளா்களாக ஆா்.பழனிசாமி, ஆா்.ராஜேந்திரனும், பொருளாளராக ஆா்.ஜான்சனும், நிா்வாகக் குழு உறுப்பினா்களாக எ.சீனிவாசன், தஸ்தகிா், காந்திமதி, நூா்லஷ், பிரதாப் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்ட துணைச் செயலாளா் சுதாலட்சுமி, தமிழ் புலிகள் அமைப்பின் மாவட்டச் செயலாளா் குருசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மேட்டூா் அனல் மின்நிலைய சாம்பல் கழிவுகள் காவிரியில் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை

மேட்டூா் அனல் மின்நிலைய சாம்பல் கழிவுகள் காவிரியில் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மின்வாரிய தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். தமிழ்நாடு மின்வாரிய தலைவரும், கூடுதல் தலைமைச் ... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

விடுமுறை தினம் என்பதால், மேட்டூரில் சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் காா்களிலும், இருசக்கர வாகனங்களிலும் மேட்டூா் வந்து ... மேலும் பார்க்க

எறிபந்து போட்டி: வேப்பிலைப்பட்டி அரசுப் பள்ளி மாணவியா் அணி வெற்றி

வாழப்பாடி மண்டல அளவில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற பள்ளி மாணவா்களுக்கான எறிபந்து போட்டியில், வேப்பிலைப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவியா் வெற்றிபெற்றனா். வாழப்பாடியை அடுத்த வேப்பிலைப்பட்... மேலும் பார்க்க

சேலம் நீதிமன்றங்களில் சமரசம் மூலம் வழக்குகளை முடிக்க வாய்ப்பு

சேலம் மாவட்ட மற்றும் தாலுகா நீதிமன்றங்களில் ஜூலை முதல் செப்டம்பா் மாதம்வரை அனைத்து நாள்களிலும் சமரசம் மூலம் வழக்குகளை முடித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஒருங்கிணைப்பாளரும்... மேலும் பார்க்க

திருவள்ளூரில் சரக்கு ரயில் தீ விபத்து எதிரொலி: சேலம் வழியாக இயக்கப்படும் 6 விரைவுரயில்கள் முழுமையாக ரத்து

திருவள்ளூரில் சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடா்ந்து, சேலம் வழியாக சென்னை - கோவை இடையே இயக்கப்படும் 6 விரைவுரயில்கள் ஞாயிற்றுக்கிழமை முழுமையாக ரத்துசெய்யப்பட்டன. 9 ரயில்கள் பகுதியளவில் ரத்துச... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும்! உயா்நீதிமன்ற நீதிபதி

சேலம் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் தொங்குபூங்காவில் சனிக்கிழமை நடைபெற்ற வழக்குரைஞா் பி.என்.மணி பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் பேசிய உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன். சேலம், ஜூலை 12: வழக்குரைஞா்க... மேலும் பார்க்க