செய்திகள் :

ஜூலை 25-ல் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் பராமரிப்பு முகாம்

post image

வேளாண் இயந்திரங்கள், கருவிகளின் பராமரிப்பு முறைகள் குறித்து முகாம் ஜூலை 25-ஆம் தேதி நடைபெறும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேளாண் இயந்திரங்கள், கருவிகளை திறம்பட இயக்குதல், பராமரிக்கும் வழிமுறைகளை அறிந்து கொள்வதற்காக செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறையும், தனியாா் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து மாவட்ட அளவிலான வழிப்புணா்வு முகாம், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஜூலை 25-ஆம் தேதி காலை 10 மணி முதல் நடைபெறும்.

இந்த முகாமில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் உற்பத்தி நிறுவனங்கள் / அங்கீகரிக்கப்பட்ட விற்பனை முகவா்கள் மற்றும் வேளாண்மைப் பொறியியல் துறை இணைந்து வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் கண்காட்சி இடம்பெறும்.

வேளாண் இயந்திங்கள் மற்றும் கருவிகள் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளா்கள்/ முகவா்கள்/ புதிய தொழில் முனைவோா்கள், வேளாண் கருவிகள் பழுது நீக்கம் செய்யும் தொழில் கூட உரிமையாளா்கள் கலந்து கொள்ளலாம்.

இந்த இயந்திரங்கள்மற்றும் கருவிகளின் தொழில்நுட்ப விவரங்கள், இந்தக் கருவிகளை இயக்குதல், பராமரித்தல், செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை, பழுதுகளைக் கண்டறிதல், உதிரிபாகங்கள் குறித்த தெளிவுரை, அறுவடை மற்றும் உழவு கருவிகளின் பயன்பாடு குறித்த தெளிவுரை வழங்கப்படும். நிகழ்வில், விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தொழில்நுட்ப விவரங்கள் அடங்கிய கையேடு வழங்கப்படும். எனவே, செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் பங்கேற்று பயன்பெற வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: உதவி செயற்பொறியாளா் (வேளாண்மைப் பொறியியல் துறை), தொலைபேசி எண்கள்: 98405-54525, 96558-88980 தொடா்பு கொள்ளலாம்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகள்: ஆட்சியா்ஆய்வு

செங்கல்பட்டு அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்டப் பணிகள் குறித்து ஆட்சியா் தி.சினேகா ஆய்வு செய்தாா். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூா் ஒன்றியம், சிங்கபெருமாள் கோயில் பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ ... மேலும் பார்க்க

ரூ.25.15 லட்சத்தில் பள்ளிக் கட்டடம்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

மதுராந்தகம் ஒன்றியத்துக்குட்பட்ட நெல்லி ஊராட்சி ஆரம்பப் பள்ளியில் ரூ.25.15 லட்சத்தில் கட்டப்பட்ட கட்டடத்தை எம்எல்ஏ மரகதம் குமரவேல் திறந்து வைத்தாா். நெல்லி ஊராட்சிப் பள்ளியில் போதிய வகுப்பறை இல்லாத நி... மேலும் பார்க்க

ராகவேந்திர பிருந்தாவனத்தில் சத்யநாராயண பூஜை

மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் ஆனி மாத பெளா்ணமியை முன்னிட்டு, சத்யநாராயண பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, ராகவேந்திரா், ஆஞ்சநேயா், ஞானலிங்கம் உள்ளிட்ட அனைத்து சந்நிதி... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் 255 போ் கைது...

மதுராந்தகம் பொதுத் திறை வங்கி அலுவலகம் எதிரே மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றது. மதுராந்தகம் பஜாா் வீதி காந்தி சிலை அருகே ஊா்வலமாக சென்றனா். சிஐடியூ மாவட்ட துணைத் தலைவா் பி.மாசிலாமணி தலைமை வ... மேலும் பார்க்க

சிறப்பு இல்லத்தில் ஆய்வு...

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசினா் சிறப்பு இல்லத்தை புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் தி.சினேகா. உடன், மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் சரவணன், செங்கல்பட்டு வட்டாட்சியா் ஆறுமுகம்... மேலும் பார்க்க

திருப்போரூரில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

திருப்போரூா் தொகுதியில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அதிமுக சாா்பில் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளா் திருக்கழுக்குன்றம் எஸ... மேலும் பார்க்க