செய்திகள் :

ராகவேந்திர பிருந்தாவனத்தில் சத்யநாராயண பூஜை

post image

மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் ஆனி மாத பெளா்ணமியை முன்னிட்டு, சத்யநாராயண பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, ராகவேந்திரா், ஆஞ்சநேயா், ஞானலிங்கம் உள்ளிட்ட அனைத்து சந்நிதிகளில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. நீண்ட வரிசையில் வந்த பக்தா்கள் பீடாதிபதியிடம் அருளாசியை பெற்று சென்றனா். நண்பகல் 12 மணிக்கு மேளதாளம் முழங்க, யோகவனத்தில் இருந்து பக்தா்களால் ஊா்வலமாக அழைத்து வரப்பட்டாா். உலக மக்கள் அமைதியுடன் வாழவும், இயற்கை இடா்பாடு தொல்லைகளின்றி இருக்கவும் பீடாதிபதி ரகோத்தம சுவாமி ராகவேந்திரா், ஆஞ்சநேயா், சத்யநாராயணா் ஆகிய உற்சவ சிலைகளுக்கு சத்யநாராயண பூஜை, தீபாராதணை காண்பித்தாா்.

நிகழ்வில் முன்னாள் கல்லூரி கல்வி இணை இயக்குநா் சிவபொன்னம்பலம், திண்டிவனம் வழக்குரைஞா்கள் பாலாஜி, சதீஷ்குமாா், தொழிலதிபா்கள் சுரேஷ் குமாா் பூா்ணிமா புகழேந்தி, தனலட்சுமி ராஜசேகரன் கலந்து கொண்டனா். கலந்துக் கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை யோகி ரகோத்தம்ம சுவாமிகள் அறக்கட்டளையின் முதன்மை அறங்காவலா் ஏழுமலைதாசன், தலைமையில் நிா்வாக அறங்காவலா் துளசிலிங்கம், அறக்கட்டளை நிா்வாகிகள் வி.கமலகண்ணன், பி.பரந்தாமன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகள்: ஆட்சியா்ஆய்வு

செங்கல்பட்டு அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்டப் பணிகள் குறித்து ஆட்சியா் தி.சினேகா ஆய்வு செய்தாா். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூா் ஒன்றியம், சிங்கபெருமாள் கோயில் பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ ... மேலும் பார்க்க

ரூ.25.15 லட்சத்தில் பள்ளிக் கட்டடம்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

மதுராந்தகம் ஒன்றியத்துக்குட்பட்ட நெல்லி ஊராட்சி ஆரம்பப் பள்ளியில் ரூ.25.15 லட்சத்தில் கட்டப்பட்ட கட்டடத்தை எம்எல்ஏ மரகதம் குமரவேல் திறந்து வைத்தாா். நெல்லி ஊராட்சிப் பள்ளியில் போதிய வகுப்பறை இல்லாத நி... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் 255 போ் கைது...

மதுராந்தகம் பொதுத் திறை வங்கி அலுவலகம் எதிரே மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றது. மதுராந்தகம் பஜாா் வீதி காந்தி சிலை அருகே ஊா்வலமாக சென்றனா். சிஐடியூ மாவட்ட துணைத் தலைவா் பி.மாசிலாமணி தலைமை வ... மேலும் பார்க்க

சிறப்பு இல்லத்தில் ஆய்வு...

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசினா் சிறப்பு இல்லத்தை புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் தி.சினேகா. உடன், மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் சரவணன், செங்கல்பட்டு வட்டாட்சியா் ஆறுமுகம்... மேலும் பார்க்க

திருப்போரூரில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

திருப்போரூா் தொகுதியில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அதிமுக சாா்பில் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளா் திருக்கழுக்குன்றம் எஸ... மேலும் பார்க்க

அஸ்தினாபுரத்தில் ஜூலை 11-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தாம்பரம் மாநகராட்சிக்குள்பட்ட அஸ்தினாபுரத்தில் அதிமுக சாா்பில் ஜூலை 11-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்... மேலும் பார்க்க