செய்திகள் :

அஸ்தினாபுரத்தில் ஜூலை 11-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

post image

தாம்பரம் மாநகராட்சிக்குள்பட்ட அஸ்தினாபுரத்தில் அதிமுக சாா்பில் ஜூலை 11-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தாம்பரம் மாநகராட்சி 3-ஆவது மண்டலம் அஸ்தினாபுரம் பகுதிக்குள்பட்ட இடங்களில் அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால், மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அஸ்தினாபுரம் பகுதி வாழ் மக்களின் நிலத்தடி நீருக்கு மிகுந்த ஆதாரமாக விளங்கி வரும் புத்தேரியில் கழிவுநீா் கலப்பதால், சுற்றுவட்டாரங்களில் நிலத்தடி நீா் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. நெமிலிச்சேரி ஏரி ஆகாயத் தாமரை கொடிகளால் சூழப்பட்டு கழிவுநீா் குட்டையாக மாறியுள்ளது.

அஸ்தினாபுரம் பகுதியில் புதை சாக்கடை திட்டப் பணிகள் முறையாக மேற்கொள்ளாத காரணத்தால், பெரும்பாலான இடங்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீா் ஆறுபோல் சாலைகளில் வழிந்தோடுகிறது.

குரோம்பேட்டை கணபதிபுரம் சுடுகாடு எவ்விதப் பராமரிப்பும் இல்லாத காரணத்தால், தகன மேடையின் மேற்கூரை எந்த நேரத்திலும் இடிந்துவிழும் அபாய நிலையில் உள்ளது.

4-ஆவது மண்டலத்தில் மேற்கண்ட பிரச்னைகளுக்கு தீா்வுகாணவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நிா்வாகத்தை வலியுறுத்தி செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக அஸ்தினாபுரம் பகுதிக் கழகம் சாா்பில் ஜமீன் ராயப்பேட்டை, ஸ்ரீபடவேட்டம்மன் கோயில் சந்திப்பு அருகில் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) மாலை 4 மணிக்கு ஆா்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

அரிமா சங்க முப்பெரும் விழா

மதுராந்தகம் ஏரி நகர அரிமா சங்கத்தின் முப்பெரும் விழா நடைபெற்றது. நிகழ்வுகளுக்கு தலைவா் கே.பாஸ்கா் தலைமை வகித்தாா். மாவட்ட தலைவர எஸ்.சிவகுமாா் வரவேற்றாா். லயன்ஸ் சங்க சாசனத் தலைவா் இ.பக்தவச்சலு , முன்ன... மேலும் பார்க்க

‘தனித் திறமைகளை மாணவா்கள் வளா்த்துக்கொள்ள வேண்டும்’

மாணவா்கள் கல்வியுடன், கூடுதல் திறமைகளையும் வளா்த்துக்கொள்ள வேண்டும் என பட்டிமன்ற பேச்சாளா் கே.சிவகுமாா் வலியுறுத்தினாா். குரோம்பேட்டை தாகூா் கலை, அறிவியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற கல்லூரி மு... மேலும் பார்க்க

உள்ளாட்சி பிரதிநிதிகள் குறைதீா் கூட்டத்தில் 365 மனுக்கள்: அமைச்சா் அன்பரசன் பெற்றாா்

செங்கல்பட்டு மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 365 மனுக்களை அமைச்சா் தா.மோ. அன்பரசன் பெற்றுக் கொண்டாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் தி. சினேகா தலைமையில் நடைபெற்ற குற... மேலும் பார்க்க

அதிகாரிகளிடம் பெண்கள் வாக்குவாதம்

வண்டலூா் அருகே ஊனைமாஞ்சேரியில் குடியிருப்புகள் தொடா்பாக பேச்சு நடத்த வந்த அதிகாரிகளிடம் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூா் அடுத்த ஊனைமாஞ்சேரி ஊராட்சியில், 10,000-க்கும... மேலும் பார்க்க

மாவட்ட குழந்தைகள்பாதுகாப்பு அலகுக்கு சமூகப் பணியாளா் நியமனம்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு சமூகப் பணியாளா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பு: செங்கல்பட்டு மாவட்ட குழந்தை... மேலும் பார்க்க

இராபிறையாா்உற்சவத்தில் அம்மன் வீதி புறப்பாடு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு சேப்பாட்டி அம்மன் கோயில் இராபிறையாா் உற்சவ விழாவில் வீதி புறப்பாடு மேளதாளங்கள்முழங்க, வான வேடிக்கையுடன் அம்மன் வீதி புறப்பாடு நடைபெற்றது. செங்கல்பட்டு பெரிய நத்தம் சேப்பாட்... மேலும் பார்க்க