செய்திகள் :

லெபனானில் ஹிஸ்புல்லா கட்டமைப்புகள் தகர்ப்பு! இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு!

post image

லெபனான் நாட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில், ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படையின் கட்டமைப்புகள் மற்றும் ஆயுதக்கிடங்குகள் தகர்க்கப்பட்டுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படையின் கட்டமைப்புகள், ஆயுதக்கிடங்குகள் ஆகியவற்றை, தங்களது படைகள் கண்டுபிடித்து தகர்த்துள்ளதாக, இஸ்ரேல் ராணுவம் இன்று (ஜூலை 9) அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதேபோன்று, லப்பவுனே பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கனரக ஏராளமான வெடிகுண்டுகள், ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கண்டுபிடித்துள்ளதாகவும், நிலத்தடி ஆயுதக்கிடங்கு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் அப்பகுதிகளில் ஹிஸ்புல்லா படையினர் மீண்டும் தங்களை நிலைநிறுத்திக்கொள்வதைத் தடுப்பதற்காக நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து ஹிஸ்புல்லா தரப்பில் இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

முன்னதாக, இருதரப்புக்கும் இடையில் கடந்த நவம்பர் மாதம் முதல் போர்நிறுத்தம் அமலிலுள்ள நிலையிலும், லெபனானில் ஹிஸ்புல்லாவின் கட்டமைப்புகளைத் தகர்ப்பதாகக் கூறி இஸ்ரேல் ராணுவம் அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தி வருகின்றது.

இருப்பினும், தெற்கு லெபனானில் உள்ள வீடுகள், அரசு ஊழியர்கள் மற்றும் மக்களின் அத்தியாவசிய கட்டமைப்புகள் ஆகியவற்றின் மீதும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

It has been reported that the structures and weapons depots of the Hezbollah rebel group have been destroyed in Israeli attacks in Lebanon.

இதையும் படிக்க: சீனா: கனமழையால் முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! 7000 பேர் வெளியேற்றம்!

பாகிஸ்தான் - சீனா - வங்கதேசம் கைகோப்பது இந்தியாவுக்கு நல்லதல்ல: முப்படை தலைமைத் தளபதி எச்சரிக்கை

பாகிஸ்தான், சீனா, வங்கதேசம் ஆகிய நாடுகள் கூட்டு சோ்வது, இந்தியாவின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு நலன்களில் தீவிர விளைவை ஏற்படுத்தக் கூடும் என்று முப்படை தலைமைத் தளபதி அனில் செளஹான் எச்சரித்துள்ளாா... மேலும் பார்க்க

இந்தியா-நமீபியா இடையே 4 ஒப்பந்தங்கள் - பிரதமா், அதிபா் முன்னிலையில் கையொப்பம்

இந்தியா-நமீபியா இடையே சுகாதாரம், தொழில்முனைவு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த 4 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. நமீபிய தலைநகா் விண்ட்ஹோக்கில் அந்நாட்டு பெண் அதிபா் நெடும்போ நான்டி என்டியெயிட்வாவ... மேலும் பார்க்க

போப் பதினான்காம் லியோவுடன் உக்ரைன் அதிபர் சந்திப்பு!

இத்தாலி தலைநகர் ரோமில், உக்ரைன் அதிபர் விளாதிமீர் ஸெலன்ஸ்கி, போப் பதினான்காம் லியோவை சந்தித்து, ரஷியாவுடனான போரின் பாதிப்புகள் குறித்து உரையாடியுள்ளார். ரோமில் வரும் ஜூலை 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் ... மேலும் பார்க்க

சீனா: கனமழையால் முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! 7000 பேர் வெளியேற்றம்!

சீனாவின் யுன்னான் மாகாணத்திலுள்ள ஜாவோடொங் எனும் மலை நகரத்தில் பெய்து வரும் கனமழையால் 5 பேர் மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஜாவோடொங் நகரத்தில், கடந்த ஜூலை 8 ஆம் தேதி முதல் கனமழை பெய்து வருகின்றத... மேலும் பார்க்க

பயங்கரவாதியல்ல, குடிமகன்! வசமாக சிக்கிய பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர்!

தொலைக்காட்சி நேரலை ஒன்றில் பங்கேற்ற பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர், பயங்கரவாதியை, சாதாரண குடிமகன் என்று நம்ப வைக்க முயன்று, வசமாக சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய... மேலும் பார்க்க

சீனா - நேபாளம் எல்லையில் வெள்ளம்: 9 பேர் பலி..20 பேர் மாயம்! தேடுதல் பணி தீவிரம்!

சீனா மற்றும் நேபாளம் ஆகிய இருநாடுகளின், எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 9 பேர் பலியாகியதுடன், 20 பேர் மாயமானதாகக் கூறப்படுகிறது. சீனாவில் பருவமழை தீவிரமடைந்து, கடந்த ஜூலை 7 ஆம் தேதி இரவு தொ... மேலும் பார்க்க