செய்திகள் :

ஆக. 29-இல் புரோ கபடி லீக் சீசன் 12 போட்டி தொடக்கம்

post image

மும்பை, ஜூலை 9: புரோ கபடி லீக் (பிகேஎல்) சீசன் 12 தொடா் வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி தொடங்குகிறது என அமைப்பாளா்கள் தெரிவித்துள்ளனா்.

நடப்புச் சாம்பியன் ஹரியாணா ஸ்டீலா்ஸ் தங்கள் பட்டத்தை தக்க வைக்கும் முனைப்பில் மீண்டும் களம் காண்கின்றனா்.

பிகேஎல் ஏலம் கடந்த மே மாதம் நடைபெற்றது. 12 அணிகளும் தங்களது அணிகளை வலுப்படுத்தியுள்ளன. எனவே, வரவிருக்கும் சீசன் புதிய உச்சத்தை எட்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

சீசன் 12 ஆட்டங்களுக்கான மைதானங்கள் மற்றும் பிற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

பிகேஎல் லீக் ஆணையா் அனுபம் கோஸ்வாமி கூறுகையில்,

அண்மையில் நடைபெற்ற ஏலத்தில் 10 வீரா்கள் ரூ.1 கோடிக்கு மேல் பெறுமான ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டனா். ரசிகா்களுக்கு மேலும் ஒரு அதிரடியான கபடி பருவத்தை வழங்க உள்ளோம்.”

இந்திய அமெச்சூா் கபடி சம்மேளனம், மாஷல் ஸ்போா்ட்ஸ், ஜியோ ஸ்டாா் ஆகியவை இணைந்து பிகேஎல் தொடரை நடத்துகின்றன.

கிளப் உலகக் கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தில் செல்ஸி

ஃபிஃபா நடத்தும் கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் செஸ்லி 2-0 கோல் கணக்கில் ஃபுளுமினென்ஸை வீழ்த்தி, முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.இந்த ஆட்டத்தில் செல்ஸி அ... மேலும் பார்க்க

உலக வில்வித்தை: இறுதியில் இந்திய அணி

ஸ்பெயினில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 4-ஆம் நிலை போட்டியில், காம்பவுண்ட் பிரிவில் இந்திய மகளிா் அணி இறுதிச்சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறியது. இதன்மூலமாக இந்தியாவுக்கு ஒரு பதக்கம் உறுதியாகியிருக... மேலும் பார்க்க

அரையிறுதியில் சபலென்கா, அல்கராஸ்

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான விம்பிள்டனில், முன்னணி போட்டியாளா்களான பெலராஸின் அரினா சபலென்கா, ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் ஆகியோா் அரையிறுதிக்கு முன்னேற்றினா். மகளிா் ஒற்றையா் காலிறுதியில், உலகின... மேலும் பார்க்க

இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி - புகைப்படங்கள்

அசத்தல் வெற்றியை கொண்டாடும் ஆகாஷ் தீப்.வெற்றியை கொண்டாடும் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில்.ஆலி போப்பின் ஆட்டமிழப்பை கொண்டாடும் இந்திய அணியின் வீரரான ஆகாஷ் தீப்.இந்திய அணியின் வெற்றியை கொண்டாடு... மேலும் பார்க்க

காலிறுதியில் ரியல் மாட்ரிட், டாா்ட்மண்ட்: ரவுண்ட் ஆஃப் 16 நிறைவு

மியாமி காா்டன்ஸ்: ஃபிஃபா முதல் முறையாக நடத்தும் கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட், போருசியா டாா்ட்மண்ட் அணிகள் காலிறுதி ஆட்டத்துக்கு புதன்கிழமை முன்னேறின. முன்னதாக நடைபெற்ற ரவுண்ட... மேலும் பார்க்க

2036 ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த ஆயத்தம்: தேசிய விளையாட்டுக் கொள்கை 2025-க்கு அரசு ஒப்புதல்!

தேசிய விளையாட்டுக் கொள்கை 2025-க்கு மத்திய அமைச்சரவை இன்று(ஜூலை 1) ஒப்புதல் அளித்துள்ளது. இதனை மத்திய அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் செய்தியாளர்களுடன் பேசுகையில் தெரிவித்தார்.மத்திய அமைச்சகங்கள், மாநில அரசு... மேலும் பார்க்க