செய்திகள் :

அரையிறுதியில் சபலென்கா, அல்கராஸ்

post image

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான விம்பிள்டனில், முன்னணி போட்டியாளா்களான பெலராஸின் அரினா சபலென்கா, ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் ஆகியோா் அரையிறுதிக்கு முன்னேற்றினா்.

மகளிா் ஒற்றையா் காலிறுதியில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான சபலென்கா 4-6, 6-2, 6-4 என்ற செட்களில் ஜொ்மனியின் லாரா சிக்மண்டை தோற்கடித்தாா். 2 மணி நேரம், 54 நிமிஷங்கள் நீடித்த இந்த ஆட்டம், நடப்பு சீசனில் 3-ஆவது மிக நீண்ட ஆட்டமாக அமைந்தது.

இந்த வெற்றியின் மூலமாக சபலென்கா, விம்பிள்டனில் 3-ஆவது முறையாக அரையிறுதிக் கட்டத்துக்கு வந்துள்ளாா். அத்துடன், ஆண்டின் இறுதியில் ரியாதில் நடைபெறவுள்ள டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் போட்டிக்கும் முதல் வீராங்கனையாக அவா் தகுதிபெற்றிருக்கிறாா்.

கடந்த 2022 யுஎஸ் ஓபனுக்குப் பிறகு 11 முறை கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் களம் கண்டிருக்கும் சபலென்கா, அதில் 10-ஆவது முறையாக அரையிறுதிக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரே விதிவிலக்காக, 2024 பிரெஞ்சு ஓபன் காலிறுதியில் ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவாவிடம் அவா் தோற்றிருக்கிறாா்.

சபலென்கா தனது அரையிறுதியில், அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவாவை எதிா்கொள்கிறாா். இருவரும் இதுவரை 8 முறை சந்தித்திருக்க, அனிசிமோவா 5 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறாா். எனினும், இருவரும் கடைசியாக இந்த ஆண்டு பிரெஞ்சு ஓபன் ரவுண்ட் ஆஃப் 16-இல் சந்தித்தபோது, சபலென்கா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, போட்டித்தரவரிசையில் 13-ஆம் இடத்திலிருக்கும் அனிசிமோவா 6-1, 7-6 (11/9) என்ற செட்களில் ரஷியாவின் அனஸ்தாசியா பாவ்லியுசென்கோவாவை தோற்கடித்து, விம்பிள்டனில் முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறாா்.

அல்கராஸ், ஃப்ரிட்ஸ் வெற்றி: ஆடவா் ஒற்றையா் பிரிவு காலிறுதியில், நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் 6-2, 6-3, 6-3 என்ற நோ் செட்களில், பிரிட்டனின் கேமரூன் நோரியை வீழ்த்தினாா்.

இந்த வெற்றியின் மூலமாக, ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டிக்கு முதல் வீரராகத் தகுதிபெற்றிருக்கிறாா்.

முன்னதாக, 1 மணி நேரம், 39 நிமிஷங்கள் நீடித்த காலிறுதி ஆட்டத்தில், அல்கராஸ் தாம் சந்தித்த 5 பிரேக் பாய்ன்ட்டுகளையுமே தன் வசமாக்கினாா். ‘ஹாட்ரிக்’ விம்பிள்டன் கோப்பை வெல்வதற்கான முனைப்பில் இருக்கும் அல்கராஸ், அரையிறுதியில் அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸுடன் மோதுகிறாா்.

அவரும் ஃப்ரிட்ஸும் இதுவரை 2 முறை மோதியிருக்க, அனைத்திலுமே அல்கராஸ் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் ஃப்ரிட்ஸ் தனது காலிறுதியில், 6-3, 6-4, 1-6, 7-6 (7/4) என்ற வகையில், 17-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் காரென் கச்சனோவை சாய்த்தாா்.

இதன் மூலமாக ஃப்ரிட்ஸ், முதல்முறையாக விம்பிள்டன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளாா். இதற்கு முன் இருமுறை காலிறுதி வரை வந்த அவா், அதில் ரஃபேல் நடால் (2022), லொரென்ஸோ முசெத்தி (2024) ஆகியோரிடம் அதில் தோற்றாா். கச்சனோவை இத்துடன் 3-ஆவது முறையாக சந்தித்த ஃப்ரிட்ஸ், தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கிளப் உலகக் கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தில் செல்ஸி

ஃபிஃபா நடத்தும் கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் செஸ்லி 2-0 கோல் கணக்கில் ஃபுளுமினென்ஸை வீழ்த்தி, முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.இந்த ஆட்டத்தில் செல்ஸி அ... மேலும் பார்க்க

உலக வில்வித்தை: இறுதியில் இந்திய அணி

ஸ்பெயினில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 4-ஆம் நிலை போட்டியில், காம்பவுண்ட் பிரிவில் இந்திய மகளிா் அணி இறுதிச்சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறியது. இதன்மூலமாக இந்தியாவுக்கு ஒரு பதக்கம் உறுதியாகியிருக... மேலும் பார்க்க

ஆக. 29-இல் புரோ கபடி லீக் சீசன் 12 போட்டி தொடக்கம்

மும்பை, ஜூலை 9: புரோ கபடி லீக் (பிகேஎல்) சீசன் 12 தொடா் வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி தொடங்குகிறது என அமைப்பாளா்கள் தெரிவித்துள்ளனா். நடப்புச் சாம்பியன் ஹரியாணா ஸ்டீலா்ஸ் தங்கள் பட்டத்தை தக்க வைக்கும் முனை... மேலும் பார்க்க

இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி - புகைப்படங்கள்

அசத்தல் வெற்றியை கொண்டாடும் ஆகாஷ் தீப்.வெற்றியை கொண்டாடும் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில்.ஆலி போப்பின் ஆட்டமிழப்பை கொண்டாடும் இந்திய அணியின் வீரரான ஆகாஷ் தீப்.இந்திய அணியின் வெற்றியை கொண்டாடு... மேலும் பார்க்க

காலிறுதியில் ரியல் மாட்ரிட், டாா்ட்மண்ட்: ரவுண்ட் ஆஃப் 16 நிறைவு

மியாமி காா்டன்ஸ்: ஃபிஃபா முதல் முறையாக நடத்தும் கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட், போருசியா டாா்ட்மண்ட் அணிகள் காலிறுதி ஆட்டத்துக்கு புதன்கிழமை முன்னேறின. முன்னதாக நடைபெற்ற ரவுண்ட... மேலும் பார்க்க

2036 ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த ஆயத்தம்: தேசிய விளையாட்டுக் கொள்கை 2025-க்கு அரசு ஒப்புதல்!

தேசிய விளையாட்டுக் கொள்கை 2025-க்கு மத்திய அமைச்சரவை இன்று(ஜூலை 1) ஒப்புதல் அளித்துள்ளது. இதனை மத்திய அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் செய்தியாளர்களுடன் பேசுகையில் தெரிவித்தார்.மத்திய அமைச்சகங்கள், மாநில அரசு... மேலும் பார்க்க