செய்திகள் :

``ரயில்வே கேட் பகுதிகளில் கேமராக்கள் பொருத்த வேண்டும்'' -ரயில்வே அமைச்சகத்தின் அதிரடி உத்தரவுகள்!

post image

கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. வேனில் நான்கு பேர் பயணித்தாகக் கூறப்படும் நிலையில், 3 பேர் உயிரிழந்திருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா, தம்பி உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்த விசாரணையில், "எங்கள் முதல்கட்ட விசாரணையில் செம்மங்குப்பம் ரயில்வே கேட்டை கேட் கீப்பர் மூடத் துவங்கியபோது, வேன் டிரைவர் வேனை வேகமாக இயக்கியிருக்கிறார். அதனால்தான் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. கேட் மூடப்படவில்லை என்பதும், ஆளில்லா ரயில்வே கேட் என்பது உண்மைக்கு புறம்பான தகவல்’ என்றும் தெரிவித்திருக்கிறது தெற்கு ரயில்வே.

மேலும், கேட் கீப்பர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் மொழி தெரியவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டதால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் பணி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

கடலூர்: பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து
கடலூர்: பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து

ஆனால், எஸ்.பி ஜெயக்குமார்ர், "அந்தப் பள்ளி வேனில் நான்கு மாணவர்கள் மட்டுமே இருந்தனர். அதில் இருவர் உயிரிழந்துவிட்டனர். கேட் போடாததால்தான் நான் போனேன் என்று கூறுகிறார் வேன் டிரைவரான சங்கர். அதனால் முழுமையான விசாரணை நடத்திய பிறகே விபத்துக்கான காரணம் தெரிய வரும்" என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பாதுகாப்பு தொடர்பான சில நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்.

அதில், "அனைத்து ரயில்வே கேட் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். கேமராக்கள் பொருத்தப்படும் பகுதிக்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.

ரயில்வே கேட்களை இண்டர் லாக்கிங் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மாற்ற வேண்டும். இண்டர் லாக்கிங்கிற்கு மாற்றப்படாத பகுதிகளில், ரயில்வே கேட்களை தினமும் ஆய்வு செய்ய வேண்டும்.

அஸ்வினி வைஷ்ணவ்

இண்டர் லாக்கிங் இல்லாத பகுதிகளில் ரயில் வருவதை ஒலிபெருக்கி மூலம் அறிவிக்க வேண்டும். பொதுமக்களே மூடி, திறக்கும் ரயில்வே கேட்களை கண்டறிந்து கணக்கெடுக்க வேண்டும்.

பொதுமக்கள் அதிகம் கூடும் ரயில்வே கேட்கள் மற்றும் அடிக்கடி பிரச்னைகள் வரக்கூடிய இடங்களில் பாதுகாப்பு பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள். இதுகுறித்து ஆய்வுசெய்ய 15 நாள் பாதுகாப்பு ஆய்வு இயக்கம் இன்று (10 ஜூலை) முதல் தொடங்கப்படவுள்ளது.

சாத்தியமான இடங்களில் லெவல் கிராசிங்குகளை அகற்றுவதற்காக, சாலை மேம்பாலம் (ROB), சாலைக்கு அடியில் பாலங்கள் (RUB) மற்றும் வரையறுக்கப்பட்ட உயர சுரங்கப்பாதைகள் (LHS) ஆகியவற்றை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் துரிதப்படுத்தப்படும்.

அனைத்து LC வாயில்களிலும் வேகத்தடைகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் ஒழுங்குபடுத்தப்படும்." என்று அறிவித்திருக்கிறது ரயில்வே அமைச்சகம்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

வேலூர்: கோட்டையின் நடைபாதையில் ஏற்பட்ட பள்ளம்; அச்சத்துடன் நடந்து செல்லும் பாதசாரிகள்!

வேலூரின் அடையாளமாக விளங்கக்கூடிய வேலூர் கோட்டைக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வேலூர் கோட்டையை முழுவதுமாக சுற்றி வர கோட்டை சுற்று சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்தச் சாலையின... மேலும் பார்க்க

``என் வீட்டிலேயே ஒட்டுக் கேட்கும் கருவியை வைத்துள்ளனர்'' - பாமக ராமதாஸ் பரபரப்புக் குற்றச்சாட்டு

ராமதாஸ் - அன்புமணி மோதல் விவகாரம் முடிவுறாத கதையாகநீண்டுகொண்டிருக்கிறது. இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்த வண்ணமிருக்கிறார்கள்.இந்தக் கருத்து மோதலில் ராமதாஸ், தன் பெயரை அன்புமணியின் பெயருக... மேலும் பார்க்க

Bengaluru: சாலையில் அனுமதி இன்றி பெண்களை வீடியோ எடுத்த இன்ஃப்ளூயன்சர்... காவல்துறை எடுத்த நடவடிக்கை!

இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வீடியோக்களைப் பதிவிட்டு வரும் பலர், அனுமதியின்றி சாலைகளில் இருக்கும் பெண்களை, குழந்தைகளை வீடியோ எடுத்துப் பதிவிடுவது தொடர்ந்து பல சர்ச்சைகளை ஏற்படுத்... மேலும் பார்க்க

`எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவும் சதிச் செயல்தான் செய்தார்களா?’ - எடப்பாடி பழனிசாமிக்கு சேகர் பாபு பதிலடி

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் வருமானத்தை வைத்து, கல்லூரிகளையும், பல்கலைக்கழகங்களையும் எப்படி தொடங்கலாம், கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது சதி செயல் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி ... மேலும் பார்க்க

Trump Tariffs: பிரேசில் இறக்குமதிகளுக்கு 50% வரி வித்த அமரிக்கா; அதிர்ச்சியில் உலக நாடுகள்!

டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின்னர் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை, மீண்டு அமெரிக்காவை ஆகச் சிறந்த நாடாக மாற்றுவோம் என்ற கொள்கைகளை முன்நிறுத்தி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவை உலக ந... மேலும் பார்க்க

"4 சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகளுக்கு அனுமதி கிடையாது!" - நீதிமன்றம் உத்தரவு; பயணிகள் அச்சம்

தமிழகம் முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 70-க்கும் அதிகமான இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த சுங்கச்சாவடிகளின் வழியாகப் பயணம் செய்வதற்கு கார், வேன், லாரி, பேருந்துகள் உள்ளிட்டவை சுங... மேலும் பார்க்க