செய்திகள் :

Trump Tariffs: பிரேசில் இறக்குமதிகளுக்கு 50% வரி வித்த அமரிக்கா; அதிர்ச்சியில் உலக நாடுகள்!

post image

 டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின்னர் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை, மீண்டு அமெரிக்காவை ஆகச் சிறந்த நாடாக மாற்றுவோம் என்ற கொள்கைகளை முன்நிறுத்தி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவை உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் கிளப்பிய வண்ணமிருக்கின்றன.

வரி விவகாரத்தில் சீனாவுக்கு 300% வரி என தெரிவித்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தார் ட்ரம்ப். இதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்கப் பொருள்கள் மீதான வரியை பல மடங்கு உயர்த்தியது.

டொனால்டு ட்ரம்ப்

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கான வரி விதிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்திருந்தார். 90 நாள்களாக இருந்த இந்த அவகாசம் நேற்றுடன் முடிவடைந்ததால் இதனை மேலும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் லிபியா, ஈராக், அல்ஜீரியா, இலங்கை, புருனே, மால்டோவாமற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 7 நாடுகள் மீதான பொருள்களின் இறக்குமதி வரியை அதிரடியாக உயர்த்தியிருக்கிறார். குறிப்பாக, அல்ஜீரியா, லிபியா, ஈராக் மற்றும் இலங்கை நாடுகளின் பொருள்களுக்கு அதிகபட்சமாக 30 சதவீதம் வரை பரஸ்பர வரி விதிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்கா, பிரேசில்

இந்நிலையில் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுக்கு ட்ரம்ப் எழுதியுள்ள கடிதத்தில், "ஆகஸ்ட் 1 முதல் பிரேசிலிய இறக்குமதிகளுக்கு 50% வரி விதிக்கப்படும்" என்று டிரம்ப் அறிவித்திருக்கிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் இந்த அதிரடி வரி விதிப்பு நடவடிக்கையால் உலகநாடுகள் அதிர்ச்சியில் இருக்கின்றன. மேலும், காப்பர், பார்மா பொருட்கள் மீதான 50% வரி விதிப்பு நடைமுறைக்கு வந்தால் இந்தியா பெருமளவு பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

ஆட்டோ தொழிலாளர்களைக் கண்டுகொள்ளாத மாநில அரசும்; OLA, UBER-க்குச் சாதகமான மத்திய அரசும் | In-Depth

சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் மக்களின் பயன்பாட்டுக்கு அரசுப் பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து சேவைகள் இருந்தாலும், ஆட்டோ, டாக்சி போன்ற தன... மேலும் பார்க்க

வேலூர்: கோட்டையின் நடைபாதையில் ஏற்பட்ட பள்ளம்; அச்சத்துடன் நடந்து செல்லும் பாதசாரிகள்!

வேலூரின் அடையாளமாக விளங்கக்கூடிய வேலூர் கோட்டைக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வேலூர் கோட்டையை முழுவதுமாக சுற்றி வர கோட்டை சுற்று சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்தச் சாலையின... மேலும் பார்க்க

``என் வீட்டிலேயே ஒட்டுக் கேட்கும் கருவியை வைத்துள்ளனர்'' - பாமக ராமதாஸ் பரபரப்புக் குற்றச்சாட்டு

ராமதாஸ் - அன்புமணி மோதல் விவகாரம் முடிவுறாத கதையாகநீண்டுகொண்டிருக்கிறது. இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்த வண்ணமிருக்கிறார்கள்.இந்தக் கருத்து மோதலில் ராமதாஸ், தன் பெயரை அன்புமணியின் பெயருக... மேலும் பார்க்க

Bengaluru: சாலையில் அனுமதி இன்றி பெண்களை வீடியோ எடுத்த இன்ஃப்ளூயன்சர்... காவல்துறை எடுத்த நடவடிக்கை!

இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வீடியோக்களைப் பதிவிட்டு வரும் பலர், அனுமதியின்றி சாலைகளில் இருக்கும் பெண்களை, குழந்தைகளை வீடியோ எடுத்துப் பதிவிடுவது தொடர்ந்து பல சர்ச்சைகளை ஏற்படுத்... மேலும் பார்க்க

`எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவும் சதிச் செயல்தான் செய்தார்களா?’ - எடப்பாடி பழனிசாமிக்கு சேகர் பாபு பதிலடி

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் வருமானத்தை வைத்து, கல்லூரிகளையும், பல்கலைக்கழகங்களையும் எப்படி தொடங்கலாம், கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது சதி செயல் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி ... மேலும் பார்க்க

``ரயில்வே கேட் பகுதிகளில் கேமராக்கள் பொருத்த வேண்டும்'' -ரயில்வே அமைச்சகத்தின் அதிரடி உத்தரவுகள்!

கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. வேனில் நான்கு பேர் பயணித்தாகக் கூறப்படும் நிலையில், 3 பேர் உயிரிழந்திருகி... மேலும் பார்க்க