செய்திகள் :

Ahmedabad Plane Crash: 'விமானம் கிளம்பியதும் இரு இன்ஜின்களும்...' - வெளியானது முதல்கட்ட அறிக்கை

post image

அகமதாபாத்தில் ஏர் இந்தியா போயிங் 747 விமான விபத்து கடந்த ஜூன் 12-ம் தேதி நடந்தது.

இதில் பயணம் செய்த ஒருவரைத் தவிர 241 பேர் உயிரிழந்தனர்.

இந்த விமானத்தின் கருப்புப் பெட்டி டெல்லி ஆய்வகத்தின் ஆய்வு செய்யப்பட்டது. அதன் முதல்கட்ட அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.

அகமதாபாத் விமான விபத்து
அகமதாபாத் விமான விபத்து

அதில் இன்ஜின் குறித்து கூறப்பட்டுள்ளதாவது...

விமானம் கிளம்பிய சில நொடிகளிலேயே இரண்டு இன்ஜின்களும் செயல்பாட்டை இழந்துள்ளன. இதற்கு இன்ஜின்களுக்குச் செல்ல வேண்டிய எரிவாயு நின்றதே காரணம்.

விமானம் கிளம்பிய ஒரு நொடியிலேயே, இன்ஜினுக்குப் போக வேண்டிய எரிவாயு 'RUN'-ல் இருந்து 'CUTOFF'-ற்குச் சென்றுள்ளது.

இதை காக்பிட்டில் இருந்த விமானிகளின் பேச்சும் உறுதி செய்துள்ளன.

விமானிகள் பேச்சு

காக்பிட் ஆடியோவைக் கேட்கும்போது, ஒரு விமானி இன்னொரு விமானியிடம், 'ஏன் அதை கட் ஆஃப் செய்தீர்கள்?' என்று கேட்கிறார். அதற்கு இன்னொருவர், 'நான் செய்யவில்லை' என்று கூறுகிறார்.

இன்ஜின் செயல்பாட்டை நிறுத்தியதும், புரொப்பல்லர் போன்ற சின்ன கருவி, Ram Air Turbine எமர்ஜென்சி கால உதவியாக வேலை செய்ய தொடங்கியுள்ளது.

Ram Air Turbine
Ram Air Turbine

ராம் ஏர் டர்பைன் என்பது அவசரகாலத்தில் உதவும் இன்ஜின் போன்ற கருவியாகும்.

இதை விமான விபத்து விசாரணை பணியகம் ஆய்வு செய்த சி.சி.டி.வி கேமராக்களிலும் உறுதியாகி உள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Ahmedabad Plane Crash: 'ஏர் இந்தியா இந்த ஆய்வைச் செய்யவில்லை' - முதல்கட்ட அறிக்கை தகவல்

கடந்த ஜூன் 12-ம் தேதி, அகமதாபாத்தில் போயிங் 747 விமான விபத்து ஏற்பட்டது. இந்த விமானத்திற்கான முதல்கட்ட அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.எரிவாயுவில் எதாவது பிரச்னையா? விமானத்தில் இருந்து எரிவாயு சுத்தமா... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash: 'அது சரியாக வேலை செய்யவில்லை; காரணம்...' - முதல்கட்ட அறிக்கை சொல்வது என்ன?

அகமதாபாத் விமான விபத்தின் முதல்கட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது விமான விபத்து விசாரணைப் பணியகம்.அந்த அறிக்கையில், "விமானம் கிளம்பிய ஒரு நொடியிலேயே, இரு இன்ஜின்களுக்கும் செல்ல வேண்டிய எரிவாயு நின்றுள்ளது... மேலும் பார்க்க

Gaur: ``மனித தவறுகளால் மரண வேதனையில் துடிக்கும் காட்டுமாடுகள்'' - வனத்துறை சொல்வதென்ன?

ஆசியாவின் மிகப்பெரிய மாட்டினமாக அறியப்படும் இந்திய காட்டுமாடுகளின் (Indian Gaur) எண்ணிக்கை நீலகிரியில் கணிசமாக காணப்படுகின்றன. வனங்களில் அந்நிய களைத்தாவரங்களின் ஆக்கிரமிப்பு, வாழ்விடம் மற்றும் வழித்தட... மேலும் பார்க்க

கோத்தகிரி: நாவல் பழம் பறிக்க மரத்தில் ஏறிய கணவன்; கர்ப்பிணி மனைவி கண்முன்னே நொடியில் நடந்த துயரம்!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள தவிட்டுமேடு பகுதியைச் சேர்ந்தவர் 36 வயதான செந்தில்குமார். இவரின் மனைவி மோனிஷா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்த தம்பதிக்கு நத்திஷ்குமார் என்ற பெயரில் இரண்ட... மேலும் பார்க்க

குஜராத்: திடீரென இடிந்து விழுந்த பாலம்; ஆற்றில் விழுந்த வாகனங்கள் - 9 பேர் உயிரிழப்பு

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் உள்ள முஜ்பூரையும் அருகில் உள்ள ஆனந்த் மாவட்டத்தில் இருக்கும் கம்பீரா என்ற இடத்தையும் இணைக்கும் வகையில் மஹிசாகர் ஆற்றின் மீது மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு இருந்தது. இ... மேலும் பார்க்க

Italy: விமானத்தின் இஞ்சினால் உள்ளிழுக்கப்பட்ட நபர் உயிரிழப்பு; நிறுத்தப்பட்ட விமான சேவைகள்!

இத்தாலியில், விமான நிலையத்தில் ஒருவர் விமானத்தின் இஞ்சினால் உள்ளிழுக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இந்த சம்பவமானது மிலன் பெர்கமோ விமான நிலையத்தில் இன்று காலை 10 மணியளவில... மேலும் பார்க்க