செய்திகள் :

Italy: விமானத்தின் இஞ்சினால் உள்ளிழுக்கப்பட்ட நபர் உயிரிழப்பு; நிறுத்தப்பட்ட விமான சேவைகள்!

post image

இத்தாலியில், விமான நிலையத்தில் ஒருவர் விமானத்தின் இஞ்சினால் உள்ளிழுக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த சம்பவமானது மிலன் பெர்கமோ விமான நிலையத்தில் இன்று காலை 10 மணியளவில் நடந்திருக்கிறது.

இது குறித்து அந்நாட்டு ஊடகங்களில் வெளியான தகவலின்படி, வோலோடியா விமான நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ319 என்ற விமானம் ஸ்பெயினின் அஸ்டூரியாஸுக்கு செல்ல விமான ஓடுதளத்தில் புறப்படத் தயாராக இருந்தபோது அதனருகே ஓடிக்கொண்டிருந்த நபர் விமானத்தின் இஞ்சினால் உள்ளிழுக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது.

விமானம்
விமானம்

இந்த சம்பவத்துக்குப் பின்னர், சம்பந்தப்பட்ட வோலோடியா விமான நிறுவனம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், உயிரிழந்தது பயணியோ விமான ஊழியரோ அல்ல என்றும், 154 பயணிகளும் 6 பணியாளர்களும் விமானத்தில் பாதுகாப்பாக இருப்பதாகவும் ட்வீட் செய்தது.

இந்த சம்பவத்தால், அந்த விமான நிலையத்தில் 9 விமானங்கள் திருப்பி விடப்பட்டு, ஆறு விமானங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. எட்டு விமானங்கள் நிறுத்தப்பட்டது.

காலை 10:20 முதல் அங்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டு, மதியத்துக்கு மேல் விமானங்கள் இயக்கப்பட்டன.

மறுபக்கம், இந்த சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்பது என விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

”கார் மீது லோடு ஆட்டோ மோதி விபத்து”- நான்கு பேர் பலி; சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்

சென்னை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (57). இவரின் மனைவி ஜெயா (55), மகள் மோனிஷா (30), மகன் ஸ்டாலின் (36), இவரது மனைவி துர்கா (32) சிறுமி நிவேனி சூரியா (3). இவர்கள் குடும்பமாக காரில் கும்பக... மேலும் பார்க்க

கடலூர்: 50 மீட்டர் துரம் தூக்கி வீசப்பட்ட வேன்; 3 மாணவர்கள் உயிரிழந்த ரயில் விபத்தின் முழு பின்னணி

50 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட பள்ளி வேன்கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள பிரபல தனியார் பள்ளி ஒன்றின் வேன், இன்று காலை 7.30 மணிக்கு மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. 7.45 மண... மேலும் பார்க்க

கடலூர்: பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து - மாணவர்கள், குழந்தைகள் படுகாயம்!

கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளி வேன் ரயில்வே கேட்டைக் கடக்க முயன்... மேலும் பார்க்க

சாத்தூர்: பட்டாசு ஆலை வெடித்து தரைமட்டமான 16 அறைகள்; மீட்பு பணி காட்சிகள்..

பட்டாசு ஆலை வெடி விபத்துபட்டாசு ஆலை வெடி விபத்துபட்டாசு ஆலை வெடி விபத்து; மீட்பு பணி காட்சிகள்பட்டாசு ஆலை வெடி விபத்து; மீட்பு பணி காட்சிகள்பட்டாசு ஆலை வெடி விபத்து; மீட்பு பணி காட்சிகள்மீட்பு பணி காட... மேலும் பார்க்க

நாமக்கல்: ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட அரசு ஊழியர்கள்... குடும்பப் பிரச்னையில் விபரீதம்!

நாமக்கல் மாவட்டம், தில்லைபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணி(54), திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பறக்கும் படையில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பிரமிளா(50), ஆண்டாபுரம் ஊராட்சி தொடக்கப் பள்ளியில... மேலும் பார்க்க

சாத்தூர்: பட்டாசு ஆலை வெடிவிபத்து: ஒருவர் உயிரிழப்பு, ஐந்து பேர் படுகாயம்!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகில் உள்ள கீழத்தாயில்பட்டியில் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் பட்டாசு தொழிற்சாலை, சிவகாசி திருத்தங்கல்லை சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமானது. இந்த பட்டாசு ஆலை நாக்பூரை... மேலும் பார்க்க