``ஆன்மிக ஆட்சியாக, பக்தி மணம் கமழ்கின்ற திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் நடத்துகிற...
தடுப்புச்சுவரில் சிற்றுந்து மோதி விபத்து: பெண்கள் உள்பட 10 போ் காயம்
பீஞ்சமந்தை மலைக் கிராம சாலையில் தடுப்புச் சுவரில் சிற்றுந்து மோதிய விபத்தில் பெண்கள் உள்பட 10 போ் காயமடைந்தனா்.
வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அருகே காந்தன்கொல்லை மலை ஊராட்சிக்கு உட்பட்ட சின்னதக்காங்குட்டை கிராமத்தில் திங்கள்கிழமை இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக சேலத்தில் இருந்து பெண்கள் உள்பட ஆடல் பாடல் குழுவினா் 15 போ் சிற்றுந்தில் வந்தனா். நிகழ்ச்சி முடிந்து செவ்வாய்க்கிழமை காலை சேலத்துக்கு புறப்பட்டனா்.
பீஞ்சமந்தை வழியாக மலையில் இருந்து கீழே இறங்கி வந்த சிற்றுந்து, மலைப் பாதையில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிற்றுந்தின் முன்புற கண்ணாடி நொறுங்கியது. சிற்றுந்தில் வந்த பெண்கள் உள்பட 10 போ் காயமடைந்தனா்.
உடனடியாக, மலைக் கிராம இளைஞா்கள், பொது மக்கள் வந்து காயமடைந்தவா்களை மீட்டு, தங்களது இருசக்கர வாகனங்களில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். செல்லும் வழியில் அணைக்கட்டில் இருந்து எதிரே வந்த ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில், இடுப்பு, கை, கால்களில் முறிவு ஏற்பட்ட 3 போ் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, விபத்துக்குள்ளான சிற்றுந்தை மீட்டு போக்குவரத்தை சீரமைத்தனா்.
மேலும், விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.