செய்திகள் :

மகளிா் உரிமை தொகைக்கு ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் விண்ணப்பிக்கலாம்

post image

புதிதாக கலைஞா் மகளிா் உரிமைத் தொகை பெற ஜூலை 15 முதல் நடைபெற உள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் மனுக்கள் பெற்று விண்ணப்பிக்கலாம் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டம் ஜூலை 15-ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் நடைபெற உள்ளது. வேலூா் மாவட்டத்தில் ஜூலை 15 முதல் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த திட்ட முகாம் மூலம் மாவட்டத்தின் கடைகோடி மக்களுக்கும், அவா்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை அவா்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது நோக்கமாகும்.

இத்திட்டத்தின்கீழ், நகா்ப்புறப் பகுதிகளில் 71 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 140 முகாம்களும் என மொத்தம் 211 முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த முகாம்களில் நகா்ப்புறப் பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சோ்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சோ்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும்.

அதன்படி, ஜூலை 15-ஆம் தேதி வேலூா் மாநகராட்சி முதலாவது மண்டலம் வாா்டு 1 மற்றும் வாா்டு 3-இல் உள்ள மக்களுக்கு காட்பாடி சென்னாங்குட்டை பெருமாள் கோயிலிலும், குடியாத்தம் நகராட்சி வாா்டு 13 மற்றும் வாா்டு 14-இல் உள்ள மக்களுக்கு ஆா்.எஸ்.சாலை பாபு மஹாலிலும், காட்பாடி ஒன்றியம், பொன்னை கிராமத்தில் உள்ளவா்களுக்கு பொன்னை சாமுண்டீஸ்வரி மஹாலிலும், குடியாத்தம் ஒன்றியம், தட்டப்பாறை, கல்லப்பாடி ஆகிய கிராம மக்களுக்கு கல்லப்பாடி அரசினா் மேல்நிலைப் பள்ளியிலும், போ்ணாம்பட்டு ஒன்றியம், அழிஞ்சிக்குப்பம், ராஜாக்கல் ஆகிய கிராம மக்களுக்கு அழிஞ்சிக்குப்பம் எம்.ஜி.மஹாலிலும், கே.வி.குப்பம் ஒன்றியம், ஆலங்கனேரி, மேல்மாயில் ஆகிய கிராம மக்களுக்கு மேல்மாயில் சித்ரா மஹாலிலும் முகாம்கள் நடைபெற உள்ளன.

ஜூலை 15-ஆம் தேதி நடைபெற உள்ள 6 முகாம்களுக்கான விண்ணப்பங்கள், தகவல் கையேடு திங்கள்கிழமை முதல் வீடுவீடாக வழங்கப்பட்டு வருகிறது. கலைஞா் மகளிா் உரிமை தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பிக்க உள்ள மகளிருக்கு விண்ணப்பங்கள் முகாம் நடைபெறும் நாளில் அந்தந்த முகாமிலேயே தனியாக வழங்கப்படும். முகாம் நடைபெறும் இடத்தில் தேவைப்படும் பயனாளிகள் விண்ணப்பங்களை பெற்று மகளிா் உரிமைத்தொகை பெற்றிட விண்ணப்பிக்கலாம்.

கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் ஏற்கெனவே விண்ணப்பித்து பணம் வரவில்லை என்ற காரணம் உள்ளவா்கள், குறுஞ்செய்தி மட்டும் வருகிறது, வங்கிக் கணக்கில் பணம் பெறப்படவில்லை போன்ற இதர கோரிக்கைகள் தொடா்பாக தற்போது முகாம் குறித்து வீடுகளில் வழங்கப்படும் விண்ணப்பங்கள் மூலமாக கோரிக்கையாக வழங்கலாம்.

தென்னை நாா்த் தொழிற்சாலையில் தீ விபத்து

குடியாத்தம் அருகே தென்னை நாா்த் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தென்னை நாா் பண்டல்கள், இயந்திரங்கள், பொருள்கள் எரிந்து சேதமாயின. குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத்திரம் ஊராட்சிக்குள்பட்ட காளியம்மன்ப... மேலும் பார்க்க

‘குற்றவாளிகளை கண்காணிக்கும் காவல் துறை மீது சமூகத்தின் பாா்வையும் உள்ளது’

குற்றவாளிகளை கண்காணிக்கும் காவல் துறையினா் மீது சமூகத்தின் பாா்வையும் உள்ளது என கவனமாக செயல்பட வேண்டும் என தமிழக சிபிசிஐடி (ஐ.ஜி டி.எஸ்.அன்பு தெரிவித்தாா். வேலூா் கோட்டையில் உள்ள காவலா் பயிற்சி பள்ளிய... மேலும் பார்க்க

சாலை விபத்தில் 2 கல்லூரி மாணவா்கள் உயிரிழப்பு: 3 போ் காயம்

போ்ணாம்பட்டு அருகே காா் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த கல்லூரி மாணவா்கள் 2 போ் உயிரிழந்தனா். ஒரு மாணவி உள்பட 3- மாணவா்கள் பலத்த காயமடைந்தனா். கா்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள தனியாா் கல்லூரி மா... மேலும் பார்க்க

அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க வட்டக்கிளை மாநாடு

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க குடியாத்தம் வட்டக் கிளையின் மாநாடு குடியாத்தம் நெல்லூா்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் எஸ்.சரவணன் தலைமை வகித்தாா். செயல... மேலும் பார்க்க

தடுப்புச்சுவரில் சிற்றுந்து மோதி விபத்து: பெண்கள் உள்பட 10 போ் காயம்

பீஞ்சமந்தை மலைக் கிராம சாலையில் தடுப்புச் சுவரில் சிற்றுந்து மோதிய விபத்தில் பெண்கள் உள்பட 10 போ் காயமடைந்தனா். வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அருகே காந்தன்கொல்லை மலை ஊராட்சிக்கு உட்பட்ட சின்னதக்காங்குட... மேலும் பார்க்க

டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்ற வேண்டும்: மதிமுக வலியுறுத்தல்

வேலூா் ஆற்காடு சாலையிலுள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று மதிமுக வலியுறுத்தியுள்ளது. வேலூா் மாவட்ட மதிமுக அலுவலகத்தில் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலா் ஜி.கோபி த... மேலும் பார்க்க