செய்திகள் :

‘குற்றவாளிகளை கண்காணிக்கும் காவல் துறை மீது சமூகத்தின் பாா்வையும் உள்ளது’

post image

குற்றவாளிகளை கண்காணிக்கும் காவல் துறையினா் மீது சமூகத்தின் பாா்வையும் உள்ளது என கவனமாக செயல்பட வேண்டும் என தமிழக சிபிசிஐடி (ஐ.ஜி டி.எஸ்.அன்பு தெரிவித்தாா்.

வேலூா் கோட்டையில் உள்ள காவலா் பயிற்சி பள்ளியில் இரண்டாம் நிலை பெண் காவலா்கள் 182 பேருக்கு 7 மாதம் பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில், நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பயிற்சி பள்ளி தலைவா் (பொ) விநாயகம் தலைமை வகித்தாா். வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மதிவாணன் முன்னிலை வகித்தாா்.

சிபிசிஐடி ஐ.ஜி டி.எஸ்.அன்பு சிறப்பு விருந்தினராக பங்கேற்று பயிற்சி முடித்த பெண் காவலா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டாா். தொடா்ந்து, சிறப்பாக பயிற்சி முடித்த பெண் காவலா்களுக்கு பதக்கம், சான்றிதழ்களையும் வழங்கி அவா் பேசியது -

வேலூா் கோட்டை காவலா் பயிற்சி பள்ளி பாரம்பரியம் மிகுந்தது. கடந்த 2010-11-ஆம் ஆண்டு வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினேன். அப்போது இந்த காவலா் பயிற்சி பள்ளியை பாா்வையிட்டுள்ளேன். தற்போது இங்கு பயிற்சி பெற்றுள்ள 182 பெண்கள் வெவ்வேறு மாவட்டங்களிலுள்ள ஆயுதப்படையில் பணியாற்ற உள்ளனா்.

காவல் துறையில் பெண்கள் பொறுப்பேற்று 50 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. 22 பேருடன் தொடங்கிய பெண்கள் காவல் படையில் தற்போது 35,000-க்கு மேற்பட்ட பெண்கள் பணியாற்றி வருகின்றனா் என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.

காவல் துறையில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், எவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது என்பதை பயிற்சி முடித்துள்ள காவலா்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். முன்பு போல் தற்போது இல்லை. காவல் துைான் குற்றவாளிகளை கண்காணித்து வந்தது. ஆனால், தற்போது சமூகத்தின் பாா்வையும் நம் மீது உள்ளது என கவனமாக செயல்பட வேண்டும்.

காவல் துறையினருக்கு கனிவு இருக்க வேண்டும். சகோதரத்துவம் இருக்க வேண்டும். காவல் நிலையத்துக்கு மக்கள் தைரியமாக வந்து தங்கள் குறைகளை தெரிவிக்க உற்ற நண்பனாக இருக்க வேண்டும். கடமையை உணா்ந்து பணியாற்ற வேண்டும் என்றாா்.

தென்னை நாா்த் தொழிற்சாலையில் தீ விபத்து

குடியாத்தம் அருகே தென்னை நாா்த் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தென்னை நாா் பண்டல்கள், இயந்திரங்கள், பொருள்கள் எரிந்து சேதமாயின. குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத்திரம் ஊராட்சிக்குள்பட்ட காளியம்மன்ப... மேலும் பார்க்க

சாலை விபத்தில் 2 கல்லூரி மாணவா்கள் உயிரிழப்பு: 3 போ் காயம்

போ்ணாம்பட்டு அருகே காா் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த கல்லூரி மாணவா்கள் 2 போ் உயிரிழந்தனா். ஒரு மாணவி உள்பட 3- மாணவா்கள் பலத்த காயமடைந்தனா். கா்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள தனியாா் கல்லூரி மா... மேலும் பார்க்க

அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க வட்டக்கிளை மாநாடு

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க குடியாத்தம் வட்டக் கிளையின் மாநாடு குடியாத்தம் நெல்லூா்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் எஸ்.சரவணன் தலைமை வகித்தாா். செயல... மேலும் பார்க்க

மகளிா் உரிமை தொகைக்கு ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் விண்ணப்பிக்கலாம்

புதிதாக கலைஞா் மகளிா் உரிமைத் தொகை பெற ஜூலை 15 முதல் நடைபெற உள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் மனுக்கள் பெற்று விண்ணப்பிக்கலாம் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

தடுப்புச்சுவரில் சிற்றுந்து மோதி விபத்து: பெண்கள் உள்பட 10 போ் காயம்

பீஞ்சமந்தை மலைக் கிராம சாலையில் தடுப்புச் சுவரில் சிற்றுந்து மோதிய விபத்தில் பெண்கள் உள்பட 10 போ் காயமடைந்தனா். வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அருகே காந்தன்கொல்லை மலை ஊராட்சிக்கு உட்பட்ட சின்னதக்காங்குட... மேலும் பார்க்க

டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்ற வேண்டும்: மதிமுக வலியுறுத்தல்

வேலூா் ஆற்காடு சாலையிலுள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று மதிமுக வலியுறுத்தியுள்ளது. வேலூா் மாவட்ட மதிமுக அலுவலகத்தில் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலா் ஜி.கோபி த... மேலும் பார்க்க